Showing posts with label kavithai. Show all posts
Showing posts with label kavithai. Show all posts

Sunday, May 12, 2013

விதியின் சாகசம்

பாதையை காட்டி பயணிகளை
பயணிக்க பணித்தான் ;
படைத்தல் ஒன்றையே ” விதியிடம் ”
பரிசாக பெற்ற ” படைத்தவன் ”
அண்டத்தையும், அகிலத்தையும்,
அழகாக, அற்புதமாக்கினான்.
கோடி ஜீவ ராசிகளுக்கும் உயிர்,
தேடி கொடுத்து உலாவச் செய்தான்.
பிழைப்பதற்கும் வழி காட்டினான்,  மனம்

Sunday, April 8, 2012

பெண்

மண்ணில் பதிந்த பாதங்களை பற்றியிழுத்து விட்டு
மறுபடி ஓடிவந்து பாதங்களை தழுவி  தவறுக்கு வருந்தி
மன்னிப்பு கேட்கும் குழந்தை மனதுடன் நித்தம் நித்தம்
மருகி கொண்டு வந்து போகும் கடல் அலைகள்...
ஆனால், நீ அந்த கடல் மட்டுமல்ல......
விண்மீன்களின் நடுவே தனக்கென்று ஓர் இடத்தை,
விரும்பி அமைத்துக்கொண்டு கவிஞனுக்கு துணை செய்ய,
பாதியாக, பாதி நாட்கள் வந்து போனாலும் ஒளியில்,
பரிதிக்கு நிகராக பாரினில் உலா வரும்

Monday, January 2, 2012

"தானே".......... "தானே" ...........



காலைக் கதிரவனை துணைக்கழைக்காமல்,
காலை நனைத்து விட்டு ஓடும்,
கடல் அலைகளை கட்டவிழ்த்து,
சாலை வரை ஓட விட்டு,
சாலையோர மரங்களுக்கு,
சடுதியில் சாவை தந்தபடி,
சாலையை சகதியாக்கி,
சாலையோரத்தை கசடாக்கி,
விரையும் வாகனங்களை முடக்கி,
விரையத்தை உண்டாக்கி,
இன்னும் பல அழிவுகளை,
இயன்ற வரை  பரிசளித்து விட்டு,,
"தானே" வந்து  "தானே" சென்ற புயலே, "நீ"
நீடித்து ஓரிடத்தில் நிலைகொண்டிருந்த போது, உன்,

Sunday, November 6, 2011

அன்னைக்கு மடல்

அன்னை தந்தையின் வளர்ப்பினிலே,
அருமையாய் தினம் வளர்ந்து,
குலப்பெருமை குன்றாமல்,
குணமுடன், பிறர்குறை கூறாமல்,
குன்றில் இட்ட விளக்காக திகழ,
குமுறும் இரு நெஞ்சங்களுக்காக,
பால் மறக்கா பருவத்திலே,
பள்ளி பாடங்கள் பாங்காய் தினம் கற்று,
மழலை மொழி சொற்களை,

Sunday, July 24, 2011

அலைகளின் ஏக்கம்



ஆர்ப்பரித்து வந்த கடலலைகள்,
ஆச்சரியத்துடன் கரையை கவனித்துவிட்டு
அடித்து புரண்டு மீண்டும் கடலுக்குள்
அடைக்கலமாயின.
என்ன இது?
ஏன் இந்த மாற்றம்?

பயணம்

நீ பயணித்த பேருந்தில்
நீண்ட நாட்களாக நானும் பயணித்ததில்
இருக்கைகள் இல்லாத காரணத்தால்,
இருவரும் பரிச்சியமானோம்!
பரிச்சியத்தின் வேரை
பார்வை உரமிட்டு
"பார்த்து பார்த்து" பேணிய உன்

Sunday, May 29, 2011

படைப்பு



"படைத்து விட்டான்", இறைவன்
பாரினில் வாழ்ந்து பார்! என்று
விடை புரியா இப்புவியில் உன்
வினாக்களை நீ தொடுத்து,
தகுந்த விடைகளை நீயே

Monday, May 23, 2011

ஏன் இந்த கண்ணீர்?



ஏன் இந்த கண்ணீர்?

உன்
எதிரில் உள்ளவரின் வேடிக்கையால்
விளைந்ததுவா? இல்லை,

ஏழ்மையின் கொடுமையால்
எழுந்ததுவா? இல்லை,

Wednesday, May 11, 2011

அம்மா யசோதை அம்மா



மண்ணை தின்ற கண்ணன்
மடிமீது அமர்ந்த போது,
மலர்ந்த முகத்துடன் அவனை
கடுஞ்சொல் கூறாது அன்போடு
கட்டியணைத்துக் கொண்ட
அம்மா,

கோபியர் கோள்கள் பலகூற,
கோபப்படாது சாந்தமாக பதிலுரைத்தபின்,
கோபாலனை பாசமாக கண்டித்து, உன்
கோபத்தை அன்பில் கரையவிட்ட
அம்மா,

கண்ணனை வளர்ப்பதில் பொழுதோடு உன்
கருத்தனைத்தையும் மொத்தமாக செலவிட்டு
நீ இந்த மண்ணில் பிறந்ததே உன் மைந்தன்
கண்ணனுக்காகத்தான் என்று மெய்பித்த
அம்மா!

உன் மகன் விழிசிவந்து
அழப்போகும் தருணத்தில்
அனைவரும் வியக்கும் வண்ணம் உன்,
புன்னகையால் அவன் இதழ்களிலும்,
மென்னகையை தவழ விட்ட தாயே!
யசோதை தாயே!

காலச் சுழற்சியில் மறைந்து விட்ட என்
கண்மணித் தாயை உன்னில் நான்
காண்கிறேன்!
தாய் பாசத்தை தொலைத்து விட்டழும்
எனக்காக, உன்,
மடிமீது தலைவைத்து,
மன சாந்தி நானடைய
உன் கண்ணனோடு
ஓரிடம் எனக்கும்
ஒண்டிக்கொள்ள நீ தருவாயா!

பகல் கனவு (வேண்டுதல்)

ரவாரமிட்டபடி ஆடி ஓடிய,
அணில்கள் காணாமல் போயின!
காகங்களின் கரையல் சப்தம்,
கார் முகிலின் இடியோசையில்,
கரைந்தே  போயின!      மற்ற
பறவைகளின் விதவிதமான ஒலிகளும்,
பறந்தே போயின!   பிறநில வாழ்-
விலங்கினங்களும் விரக்தியுடன் இந்த
வில்லங்கத்தில் மாட்டாமல் ஒதுங்கி போயின!
காரணம் என்ன வெனில்,  இது,