Showing posts with label கதை. நேர்மறை. Show all posts
Showing posts with label கதை. நேர்மறை. Show all posts

Sunday, December 16, 2018

நேர்மறை எண்ணங்கள்.

அன்பார்ந்த வலைத்தள சகோதர சகோதரிகள் அனைவருக்கும் வணக்கம். 

நடப்பவை அனைத்தும் நலமாக அமையட்டும்

நல்லது நடந்தால் எப்போதுமே மளது சந்தோஷம் அடைகிறது. அதுவே துன்பங்கண்டு மனம் மட்டுமல்லாது  உடலும் சோர்வடைகிறது.  எதிர் மறை எண்ணங்களினால், இந்த நிகழ்வுகள் நடந்ததுவோ,  என மனம் ஐயமுற்று சிறிது தடுமாறுவதால், தனக்குத் துணையாக இருக்கட்டுமென உடலையும் பாதிக்க வைத்து பார்த்து சந்தோஷம்டைகிறதோ? இந்த நேர்மறை, எதிர்மறை எண்ணங்களை, மனது தீர்மானிக்கிறதா? இல்லை,  நம்  மூளை தன்னைத்தானே சலவை செய்து தூய எண்ணங்களுக்கு  வேர் ஊன்றி வளர்த்து விருட்சமாக பெருகச் செய்து, இடையே தான்தோன்றித்தனமாக வளரும் களையகற்றி, செழிப்பாக வளரும் விருட்சத்திற்கு  துணையாக இருக்கிறதா? என்பது யாரும் அறியாத தேவ ரகசியம். 

நல்லதை நினைத்தால் நல்லதாகத்தான் நடக்கும். அப்படி நல்லதையே நினைக்கும் போது. எப்படி திடீரென எதிர்மறையான நிகழ்வுகள் நடந்தேறி விடுகின்றன.? இது அடிக்கடி வக்கரித்து மாறும் மனதின் நிலையற்ற  ஆணவ குணத்தினால், எழும் விபரீத போக்குகளா?  இல்லை, அவ்வப்போது சலவை செய்யும் மூளை என்ற இயந்திரத்திற்கு ஒவ்வாமையால் எழும்  பழுதுகளா? புரியவில்லை....! ( இதற்கு உலகில் அவரவர் மனதில் ஏற்படும் தாக்கங்கள் காரண காரியங்களோடு, ஊர்ஜிதப்படுத்தப்பட்டு, கருத்துக்கள் வேறுபட்டு போகும்... இல்லை, வேரோடி நிலையாய் நிற்கும். இது வாதிப்பவர்களின், மூளையின் திறனைப் பொறுத்தது.) ஆனால், மூளையின் உத்தரவின் பேரில்தான், மனதும், உடலும் இயங்குகிறது என விஞ்ஞானத்திலிருந்து, மெஞ்ஞானம் வரை உறுதிப்படுத்துகிறது.  மொத்தத்தில் இன்ப துன்பங்களை சமமாக பாவிக்க மனமானது மிகவும் பக்குவமடைய வேண்டும். அதனை ஆசைகளற்று, நிர்மலமாக அமைதியாக இருக்க மூளை பயிற்றுவிக்க வேண்டும். அதனுடைய ஆளுமையை மனது நிராகரிக்காமல், " நம் நலனுக்குத்தான்" என  ஆழமாக புரிந்து கொண்டால், மேற் சொன்னது நடக்க. வாய்ப்பிருக்கிறதோ என்னவோ..!

இதையெல்லாம் மீறி விதியின் பாதை அதன் வழியே நம்மை நடத்திச் செல்லும் ஆற்றல் மிக்கது. அதன் சக்தியின் வலிமைதான் நேர்மறை, எதிர்மறை எண்ணங்களை ஒருவரின் மனதிலோ, மூளையிலோ தோற்றுவித்து களிப்பிற்கும், களைப்பிற்கும் வழி வகுக்கிறது என்பதை  நம்மையறியாமல் நடக்கும் செயல்கள் நிரூபிக்கின்றன. இதன் விளைவில் நினைவடுக்குகளில் இருந்து எழுந்தவை இந்தக்கதை. 

கதை.. . 

ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தான். அவன் விதியை மதியால் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை அதிகம் கொண்டிருந்தான் அவன் அமைச்சரோ, விதிப்படித்தான் அனைத்தும் நடக்கும் அதை மாற்ற யாராலும் இயலாது என்ற எண்ணம் உடையவர். இதனால் இருவருக்குமிடையை நிறைய விவாதங்கள் நிகழும். மதியால் விதியை வெல்ல இயலாது என்பதை ஆதாரத்துடன் நடைமுறையாக நிரூபிக்க தக்க தருணத்தை அமைச்சரும் எதிர்பார்த்து காத்திருந்தார். அதுபோல் அரசனும், தனக்கும் வரும் ஒரு சமயத்திற்காக ஆவலோடு காத்திருந்தான்.

ஒரு நாள் அரண்மனை மேன்மாடத்தில் அமர்ந்தபடி அரசனும், மந்திரியும்  ராஜ்ஜியபரிபாலனைகள் மற்றும், இதர விஷயங்கள் பற்றி பேசிக் கொண்டிருந்த போது, தெருவில் ஒரு ஏழை மூதாட்டி நடமாடிக் கொண்டிருந்தவர்களிடம், தன் ஒரு வேளை உணவுக்கு  யாசகமாக கையேந்திக் கொண்டிருப்பதை கண்டதும், அரசனுக்கு ஒரு எண்ணம் உதயமானது. உடனே அமைச்சரை பார்த்து, " மந்திரி, தெருவில் ஒரு வயதான பெண்மணி வருவோர் போவோரிடம் கையேந்தி யாசகம் கேட்டபடி இருக்கிறார். பாவம்! யாருமில்லாதவர் போலும்.! அவரை அழைத்து வந்து நல்லதொரு ஆடை அணிய தந்து வயிறு நிரம்ப தினமும் மூன்று வேளை உணவுக்கு ஏற்பாடு செய்யுங்கள்." என்றார்.

அமைச்சரும் அரசனின் உத்தரவை சிரமேற் கொண்டு காவலாளியை அழைத்து அரண்மனையிலேயே அப்பெண்மணிக்கு ஒரு அறையை ஒதுக்கித்தந்து அரசனின் விருப்பத்தை நிறைவேற்றினார்.

சில நாட்கள் கழிந்ததும், அமைச்சரை தனியே சந்தித்த அரசர், அரசின் முக்கிய வேலைகளைப் பற்றி அளவளாவிய பின்னர், "அமைச்சரே, சில தினங்களுக்கு முன் ஒரு மூதாட்டியை அழைத்து வந்து பராமரிக்கத் சொன்னேனே.! அந்த மாது எப்படி உள்ளார்கள்? நலந்தானே.? "என்று வினவினார் அரசர்.

" மன்னா! தங்கள் அரசாட்சியில் நலமில்லாதவர் என்றொருவர் உண்டா? அவ்வாறிருக்கும் போது தாங்களே சிரத்தை எடுத்து, தங்கள் இயல்பான இரக்க குணத்தினால் ,கவனிக்கப்பட்டு, தங்கள் கருணையினால், பராமரிக்கப்பட்டு வரும் அந்த பெண்மணி நலமில்லாமல் இருக்க முடியுமா?" என்று பணிவுடன் கூறவும், அரசனின் முகமெங்கும் மந்தஹாசம் பொங்கி வழிந்தது.

"மந்திரி, நமக்குள் ஒரு அந்தரங்கமாக ஒரு விவாதம் நடைபெற்று வருகிறதே? நினைவுள்ளதா? விதியை மாற்ற இயலாது என தாங்கள் என்னிடம் அடிக்கடி விவாதிப்பீர்களே...! இன்று நான் அதை  மாற்றி விட்டேன். யாசகம் கேட்டு வாழ்ந்து கொண்டிருந்த அந்த மூதாட்டியை இன்று ராஜ போக உணவுடன், அரச மாளிகையில் தங்குபடி மாற்றி விட்டேன் பார்த்தீர்களா? அதனால்தான் விதியை மதியால் வெல்லலாமென ஆணித்தரமாக கூறிக் கொண்டேயிருப்பேன். இப்போதாவது என் சொல் உண்மையாகி விட்டதை ஒத்துக் கொள்ளுங்கள். "அரசர் தம் எண்ணததை தெரிவுபடுத்தியபடி,  பேசி முடித்தார்.

மந்திரியின் முகத்தில் சிறு சலனமும்  இல்லாமலிருப்பதை ஒரு கணம் கண்ட அரசரின் முகத்தில் மந்தஹாசம் சட்டென மங்கத்துவங்கியது. " ஏன் மந்திரி.! இந்த முக வாட்டம்?  நான் கூறியதில் ஏதும் பிழை உள்ளதா? என்று அரசர் மறுபடி சற்று சினத்துடன் வினவினார்.

அரசனின் கோபத்தை உணர்ந்த மத்திரி அவசரமாக தன் மெளனம் கலைத்து, " "மன்னித்து விடுங்கள் அரசே..! தாங்கள் கூறியதை நினைத்தபடி ஏதோ யோஜனையில் ஆழ்ந்து விட்டேன். மன்னித்து விடுங்கள்.. நீங்கள் கூறியபடி அந்த பெண்மணி நலமாகத்தான் உள்ளார். நாம் அவரை ஒரு தரம் சென்று கண்டு வருவோமா? என்று சாந்தமாக கூறவும், அரசரின் சினம் தணிந்து, "சரி என கூறியபடி அமைச்சருடன் புறப்பட எத்தனித்தார்.

இருவரும் மூதாட்டி தங்க வைக்க பட்டிருந்த அறைக்கு வந்ததும், அமைச்சர்,  "அரசே அங்கு பாருங்கள்." என பணிவுடன் சுட்டிக் காண்பித்ததும், அறையுனுள் பார்த்த அரசர் ஒரு கணம் திகைத்து விட்டார்.  அங்கு இருந்த அந்த மூதாட்டி, தனக்கு கொடுக்கப்பட்டிருந்த உணவை, கவள, கவளமாக உருட்டி, சுவர்களில் இருந்த மாடக்குழிகளுள் வைத்து, "அம்மா தாயே,.! பசிக்கிறது ஒரு கவளமேனும் உணவு தாருங்கள்.. என்று கேட்டபடி எடுத்து உணவு உண்டபடியிருந்தாள்.

யோசனையுடன் திகைத்து நின்றிருந்த அரசரை, அமைச்சரின் "அரசே" என்ற பணிவான குரல் இவ்வுலகிற்கு கொண்டு வரச் செய்தது.

" அரசே,! நாம் எத்தனை செல்வச் செழிப்புடன்  உணவு தயாரித்து கொடுத்தாலும், அவள் ஊழ் வினையை மாற்ற முடியவில்லை பார்த்தீர்களா? இப்படி உணவருந்தினால்தான் அவளுக்கு திருப்தியாக இருக்கிறது. இதை காவலர்களும் என்னிடம் அவள் வந்த அன்றிலிருந்து கூறினார்கள். இதைதான் நான் அவள் விதி என்கிறேன். நீங்கள் எத்தனை செல்வம் கொடுத்து அனுப்பினாலும், அவள் அத்தனையையும் பறி கொடுத்து விட்டு இப்படி கையேந்தி தான் தன் வாழ்வை நகர்த்துவாள். எத்தனை காலம் அவள் இப்படித்தான் வாழ வேண்டுமென்று இருக்கிறதோ, அத்தனை காலங்கள் வரை அவளால் ஏதும் செய்ய இயலாது,, .! இதை யாரலும் மாற்றவும் முடியாது,.. ஏனெனில் விதியை எந்த  ஒரு மனிதனாலும் புறக்கணிக்க இயலாது. இதில் நீங்களும், நானும் அடக்கம்... நான் கூறுவதை தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இதை மெய்பிக்கவே தங்களை இங்கே அழைத்து வந்து நேரடியாக காண்பித்தேன்.தவறெனில் என்னை மன்னியுங்கள். " என்றார் சாந்தமாக அமைச்சர்.

"அமைச்சரின் பேச்சை மெளனமாக செவிமடுத்த அரசர்," அமைச்சரே,! தங்கள் கூற்று சரிதான்.. தங்களின் சமயோஜித அறிவும், ஆழ்ந்து சிந்திக்கும் கூரிய எண்ணங்களும் என்னை வியக்க வைக்கிறது. தாங்கள் இந்த நீண்ட நாளைய விவாதத்தில் என்னை வெற்றி கண்டு விட்டீர்கள். விதி வலியது என இன்று கண் கூடாக உணர்ந்து கொண்டேன். பாவம், அந்த மூதாட்டியை விடுவித்து விடுங்கள். அவள் இப்படி கட்டுண்டு வாழ்வதை விட விருப்பபடி விதிப்படி வாழட்டும். வாருங்கள் நாம்  போகலாம்" என்றபடி அரசர் அமைச்சரிடம் தன் தோல்வியை ஒப்பு கொண்டபடி அவ்விடத்தை விட்டு அகன்றார்.

விதி வலியது என்பதை சுட்டிக் காட்டும் கதை இது. இரண்டாவதாக இதேப் போல் மதியால் விதியை மாற்றுவதாக, விக்கிரமாதித்தன், கதைகளில் வருகிறது.  அவனது மந்திரி பட்டி திறம்பட, அரசனின் விதியை பற்றி  கூறும் பட்சிகளின் பாஷைகளை அறிந்ததினால்,  தொடர்ச்சியாக வந்த இடர்களிலிருந்து விக்கிரமாதித்தியனை காப்பாற்றுவான். பட்டி பட்சி, மிருகங்களின் பாஷையை கற்றிருந்ததினால், விக்கிரமாதித்தியனுக்கு வந்த சோதனைகளை, களைந்தெறிய தான் வணங்கும் தெய்வமாகிய காளியிடமே சாமர்த்தியமாக தன் மதியறிவை கொண்டு பேசி , வாக்கு வாதங்களில் வென்று விதியை மாற்றியமைக்கும் வரங்களைப் பெறுவான்.

மூன்றாவதாக இதைப்போல் விதியையும் நோகாமல், மதி வழியும் முயற்சிக்காமல்," நடப்பது நடக்கட்டும். இதற்கும், எனக்கும் ஒரு சம்மந்தமும் இல்லை என்பது போல, அதன் வலியை ஒரு  சிறிதேனும் பொருட்படுத்தாமல், புன்னகையுடன் ஏற்றுக்கொண்டு அமைதியாக காலத்துடன் ஒன்றினார் ஒரு அமைச்சர்.

தன் மகனுக்கு ராஜ போக பதவி கிடைத்தும் சந்தோஷமெய்தவில்லை. அவன் செய்யாத குற்றத்திற்கு மரண தண்டனை கிடைத்தும் கலங்கவில்லை. யார் என்ன செய்தாலும், சொன்னாலும் அவர் வாயில் வருவது ஒரே சொல்தான்." எல்லாம் நன்மைக்கே.!" அதுதான் அவரின் தாரக மந்திரம். அந்தச் சொல்லே அவருக்கு எல்லா நன்மைகளையும், சத்தமின்றி தந்தபடி நகர்ந்து கொண்டிருந்தது.

இந்த கடைசி கதை மாந்தரைப் போல அனைத்தையும், மெளனமாக ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வரவேண்டும். இதற்காக இன்னும் எத்தனை பிறவிகள் எடுத்து அல்லல்பட்டு உழல வேண்டுமோ.!
எனினும் இந்த பிறவியிலேயே கிடைக்க வேண்டுமென நேர்மறையோடு சிந்திக்கிறேன்.

மூன்று வித கதைகளிலும் நேர்மறை எண்ணங்கள் அவரவர் சூழ்நிலைகளுக்கேற்ப  தானாகவே வந்து அவர்களுடன் தங்கி அவர்களுக்கு நல்லதை விளைவித்தது.

எது எப்படியோ நேர்மறை எண்ணங்களை நினைக்கும் போதும், பேசும் போதும், கேட்கும் போதும் நமக்கு எதிராக எந்த செயல் தானாக நடந்தாலும், நடந்திருந்தாலும் அதை சற்று ஒதுக்கி வைத்துப்பார்க்கும் ஒரு மன நிலை, நாமும் இதை கொஞ்சம் விட்டு விலகி சில நாட்களை கழித்துப் பார்க்கலாமே என்ற ஒரு  மனப்பான்மை வருகிறதென்னமோ உண்மைதான். 

அவ்வாறாக தற்சமயம் வலைத்தள நட்புகளின் நேர்மறை ஆறுதல்கள், காயப்பட்ட என் மனதிற்கு  நல்லதொரு மருந்தாக, வலி நிவாரணியாக இருந்தது. ஒரு மாற்றத்திற்காக, என்னைத் தேற்றியபடி நானும், வலையுலகில், மறுபடி வருவதற்கு விருப்பப்பட்டு, "எங்கள் குடும்பம்," மற்றும் அனைத்துப் பதிவுகளையும், படித்து வருகிறேன்.  என் வருகைக்கு முழுவாதரவாக   வந்த பின்னூட்டங்களை பகிர்ந்துள்ளேன். இதுவும் எனக்கு மிகுந்த ஆறுதலாக இருந்தது. அனைவரின் அன்புக்கும் பாசத்திற்கும் சிரம் தாழ்த்தி அடி பணிகிறேன். எனக்கு அன்புடன் ஆறுதல் கூறிய அனைவருக்கும் நன்றிகள். 



  • வாங்க கமலாக்கா உங்கள் வருத்தத்திற்கு இடையிலும் இங்கு வந்து வாசித்து கருத்து சொன்னமைக்கு மிக்க நன்றி அக்கா. ஆமாம் அக்கா உங்கள் வருத்தம் மிக மிக ஆழமான ஒன்றுதான்...புரிந்து கொள்ள முடிகிறது. என்றாலும் வெளியில் வந்துதானே ஆக வேண்டும்...ஆமாம் வலைக்கு வாருங்கள் கொஞ்சம் கொஞ்சமாக....எல்லோரையும் பாருங்கள் எழுதுங்கள்...கொஞ்சம் ஆறுதல் கிடைக்கும் அக்கா...வேறு என்ன சொல்ல என்று தெரியவில்லை...இது ஆறுதல் படுத்தக் கூடிய சிறு விஷயம் இல்லையே...தங்களின் அன்பிற்கும் மிக்க நன்றி




  • சகோதரி கமலா அவர்களின் மனம் ஆறுதல் அடையப் பிரார்த்திக்கிறேன். என்ன சொன்னாலும் தீராத துக்கம இது!


    1. வாங்க கமலா அக்கா... காலை வணக்கம்.

      பாடலை ரசித்ததற்கு நன்றி.

      உங்களை இங்கு காண்பதில் பெருமகிழ்ச்சி.

      தொடர்ந்து வாருங்கள்.
    2. ஸ்ரீமதி கமலா ஹரிஹரன் அவர்களுக்கு நல்வரவு..

      அன்பின் வணக்கத்துடன்....
    3. அன்புடன் நல்வரவு கூறிய சகோதரர் துரை செல்வராஜ் அவர்களுக்கு காலை வணக்கத்துடன மிக்க நன்றி.

      சகோதரர் ஸ்ரீராம் அவர்களுக்கு, இனி தொடர்ந்து வலைத்தளம் வர விரும்புகிறேன். நடப்பவை அனைத்தும் நலமாக இருக்கட்டும். என் கருத்து கண்டு உடன் பதிலளித்தது எனக்கும் மகிழ்வாக இருந்தது. நன்றி.

    4. //இனி தொடர்ந்து வலைத்தளம் வர விரும்புகிறேன். நடப்பவை அனைத்தும் நலமாக இருக்கட்டும்//

      மிகவும் மகிழ்வாக இருக்கிறது சகோதரி... வரவேற்கிறோம்.
    5. என் வருகை கண்டு வரவேற்றமைக்கு மிகவும் மகிழ்ச்சி சகோதரி கீதா சாம்பசிவம். நலமாக உள்ளீர்களா?
    6. வருக.... தொடர்ந்து வலைப்பதிவில் சந்திப்போம் கமலா ஹரிஹரன் ஜி
    7. கமலாக்கா வாங்கோ... “நாள் உதவுவதுபோல் நல்லோர் உதவார்” கால ஓட்டத்தில் பல விசயங்கள் கவலைகள் சின்னப் புள்ளியாகுகிடும் அதுவரை ஒதுங்கி இருந்து முடங்கிப் போயிடாமல், இப்படி வெளியே வந்து பேசுங்கோ மனம் இலேசாகும்.
      விதியை நம்மால் என்ன பண்ண முடியும், ஏற்றுக் கொண்டுதானே ஆக வேண்டும்.

    1. கமலா ஹரிஹரன் அவர்களுக்கு நல்வரவு.

      நடப்பவை அனைத்தும் நலமாக இருக்கட்டும்

    2. இன்னமும் என் காயம்பட்ட  மனதிற்கு தெம்பாக நேர்மறை எண்ணங்களுடன், ஆறுதல்கள் அளித்து வரும்அனைவருக்கும் என் மனமார்ந்த வணக்கத்துடன கூடிய நன்றிகள்.