Showing posts with label சிவன். Show all posts
Showing posts with label சிவன். Show all posts

Sunday, July 14, 2019

அம்மையப்பர்..

அருள் மிகும் நெல்லையப்பர்.
ஓம் நமசிவாய...

நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க 
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க 
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க 
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க



இன்றைய தேரோட்ட நிகழ்வு.

நெல்லையப்பர் ஸ்தல வரலாறு, தன் பக்தருக்காக நெல்வேலி அமைத்து நெல்லையப்பர் பெயர் வர காரணமாக ஈசன் நடத்திய திருவிளையாடல்கள் என அனைத்துமே நாம் அனைவருமே அறிந்ததுதான்.

இன்று நெல்லையப்பர் ஆனி தேரோட்ட விழா அமர்க்களமாக நடந்துள்ளது. இன்று இருக்கும் இடத்திலிருந்து தேராட்ட விழாவை கண்டு ரசித்த போதும், சிறு வயதில் தேரோட்டத்திற்கு சென்று ஓடும் தேரையும், நெல்லையப்பரையும், காந்திமதி தாயாரையும் சேவித்தது மலரும் நினைவுகளாக மலர்கிறது. அதன் பின் எத்தனையோ முறை நெல்லை சென்ற போதெல்லாம் அம்மையப்பன் தரிசனம் கண்டிருந்தாலும், தேரோடும் நேரத்தில் நான் அங்கு ஓடாத நேரங்கள் வருத்தத்தை தந்துள்ளது.

சென்ற வருடம் தேர்த் திருவிழா முடிந்த ஒரு வார காலத்திற்குள் சில வேலைகளுக்காக நாங்கள் நெல்லை பயணம் செல்ல வேண்டிய "நிலை." அப்போது கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்த போது, கோவில் வாசலில் ஓடிக் களைத்திருந்தாலும் "நிலை" வந்து சேர்ந்த பெருமையுடன், என்றும் "நிலையான" புகழுடன்  நின்றிருந்த தேரையும் அதன் அழகையும் கண்டு வணங்கி வந்தேன். அந்த நினைவுகள் இன்றும் மனதில் மணம் வீசும் பூக்களாக பூத்தன.

அன்று  எடுத்த  சில புகைப்படங்கள்...
















இன்று ஒரு வருடங்கள் கழித்து இன்று நெல்லையப்பர், காந்திமதி அருளினால் என பதிவை அலங்கரிக்கின்றன.
கண்டுகந்த  அனைவருக்கும் என் வணக்கங்களும், நன்றிகளும். 🙏.

Saturday, September 22, 2018

பிரம்மோற்சவம்


திருப்பதியில் பிரம்மோற்சவம் காணும் 
ஸ்ரீமன்நாராயணனின் மலர்கள், காய், கனிகளை கொண்ட அலங்கார தரிசனங்கள்

இடையே பட்சணங்களின் அலங்காரத்துக்கு   நடுவே
அழகான மாதவன்


படைப்புக் கடவுள் பிரம்மாவே இந்த பிரம்மோற்சவத்தை பூலோகத்தில் வந்து நடத்துவதாக ஐதீகம் என்பது நாமறிந்ததே.!


இன்றைய நாளில் மும்மூர்த்திகளும் சேர்ந்து வந்து பக்தர்களை காத்து ரட்சிக்கும் நாளாக அமைந்து விட்டது.














            இன்று மஹா பிரதோஷம். 

அரியும்,  சிவனும் ஒன்று...! என்ற பழமொழிப்படி ஹரியும், ஹரனும் சந்தோஸமாகவே இன்றைய நாளில் இணைந்து வருகை தந்திருக்கின்றனர். இரு பார்வையின் முன் பார்க்கும் பொருள் ஒன்றே,! பக்தியின் முன் அனைத்து கடவுளும் ஒன்றே,! 


கடன் நிவர்த்தி சிவன்..

ஓம் நமோ நாராயணாய நமஃ
ஓம் நமசிவாய.


படங்களை கண்டு ரசித்தமைக்கு மிக்க
ன்றியுடன் 
கமலா ஹரிஹரன். 

Wednesday, February 14, 2018

ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய.....

ஆதியும் அந்தமும் இல்லா ஜோதியான பரம்பொருளை இன்று சிந்தையில் இருத்தி சிவராத்திரி பெரு விழாவை பக்தியுடன் கொண்டாடுவோம்.



சர்வம்  சிவமயம்.


இனிமையான  குரலில்  எஸ் .பி . பி  யின் லிங்காஷ்டகத்தை கேட்டு மகிழலாம் .வாருங்கள்..,பக்தி பரவசத்தில் நனையலாம். 




ப்ரஹ்ம முராரி ஸுரார்ச்சித லிங்கம்
நிர்மல பாஸித சோபித லிங்கம்

ஜன்மஜ து:க்க விநாசக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்


தேவ முனி ப்ரவரார்ச்சித லிங்கம்
காம தஹம் கருணாகர லிங்கம்

ராவண தர்ப்ப விநாசக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்


ஸர்வ ஸுகந்தி ஸுலேபித லிங்கம்
புத்தி விவர்த்தன காரண லிங்கம்

ஸித்த ஸுராஸுர வந்தித லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்


கனக மஹாமணி பூஷித லிங்கம்
பணிபதி வேஷ்டித சோபித லிங்கம்

தக்ஷ ஸுயஜ்ஞ விநாசக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்


குங்கும சந்தன லேபித லிங்கம்
பங்கஜ ஹார ஸுசோபித லிங்கம்

ஸஞ்சித பாப விநாசக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்


தேவ கணார்ச்சித ஸேவித லிங்கம்
பாவைர் பக்திபிரவேச லிங்கம்

தினகர கோடி ப்ரபாகர லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்


அஷ்ட தளேபரி வேஷ்டித லிங்கம்
ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம்

அஷ்ட தரித்ர விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்


ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம்
ஸுரவன புஷ்ப ஸதார்ச்சித லிங்கம்

பராத்பரம் பரமாத்மக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்


லிங்காஷ்டகம் இதம் புண்யம்
ய:படேத் சிவ ஸந்நிதௌ

சிவலோக மவாப்னோதி
சிவேன ஸஹ மோத தே





பிரம்ம முராரியர் போற்றிடும் லிங்கம்
சிறுதும் களங்கம் இல்லா சிவலிங்கம்
பிறவியின் துயரை போக்கிடும் லிங்கம்
நானும் வணங்கும் சதாசிவ லிங்கம்


தேவரும் முனிவரும் போற்றிடும் லிங்கம்
காமனை எரித்த கருணா லிங்கம்
ராவணன் உள்ளம் விளங்கிடும் லிங்கம்
நானும் வணங்கும் சதாசிவ லிங்கம்


வாசமனைத்தையும் பூசிய லிங்கம்
வளர் அறிவாகிய காரணலிங்கம்
சித்த சுராசுரர் போற்றிடும் லிங்கம்
நானும் வணங்கும் சதாசிவ லிங்கம்


பொன்மணிசூடி சுடர்ந்திடும் லிங்கம்
தன்னிடை நாகம் அணிந்திடும் லிங்கம்
தக்சனின் யாகம் வீழ்த்திய லிங்கம்
நானும் வணங்கும் சதாசிவ லிங்கம்


குங்குமம் சந்தனம் பூசிய லிங்கம்
பங்கஜ மாலையை சூடிய லிங்கம்
தொங்கிய வினைகளை போக்கிடும் லிங்கம்
நானும் வணங்கும் சதாசிவ லிங்கம்


தேவர் கணங்களின் அர்ச்சன லிங்கம்
தேடிடும் பக்தியில் ஊறிடும் லிங்கம்
சூரியன் கோடி சுடர் விடும் லிங்கம்
நானும் வணங்கும் சதாசிவ லிங்கம்


எட்டு களத்தில் எழுந்திடும் லிங்கம்
எல்லா மாகிய காரண லிங்கம்
எட்டு தரித்திரம் நீக்கிடும் லிங்கம்
நானும் வணங்கும் சதாசிவ லிங்கம்


தேவரின் குருவின் பூசைகொள் லிங்கம்
தேவ வண மலரை ஏற்றிடும் லிங்கம்
பரம நாதனாய் பரவிடும் லிங்கம்
நானும் வணங்கும் சதாசிவ லிங்கம்


லிங்காஷ்டகமிதை தினமும்
சிவசன்னதியில் சொல்வாய்
சிவலோக காட்சியுடன்
சிவன் அருளும் கொள்வாய்..... 











சர்வம் சிவார்ப்பணம்....


Sunday, June 14, 2015

அமிர்தம்

தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் கடைந்த சரிதம்.

ஒரு காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் சண்டை மிகுதியாக, அசுரர்களால் தேவர்கள் அடித்து விரட்டியடிக்கப்பட்டனர். எதிர்த்துப் போரிட சக்தி இல்லா தேவர்கள் ௯டி யோசிக்கும் போது, பிரம்மன், இந்திரன், நாரதர் போன்றோர் தேவர்களின் நன்மையை உத்தேசித்து, “பாற்கடலை கடைந்து அதிலிருந்து வரும் அமிர்தத்தை உண்டால், தேவர்கள் மிகுந்த பலமடைவர்அதன் பின் அவர்களை ஜெயிக்க யாராலும் இயலாது.!” எனச் சொல்ல, தேவர்கள் பாற்கடலில் அமிர்தம் கடையும் யோசனைக்கு சம்மதித்தனர். ஆனால், பலமுடன் இருக்கும் அசுரர்களும் தங்களுடன் சேர்ந்து ஒத்துழைத்தால், காரியம் விரைவாகவும், சுலபமாகவும் முடியும் என தேவர்கள் அனைவரும் ஏக மனதாக நினைக்க தேவர்கள் சார்பில் அசுரர்களுக்கும் அழைப்பு அனுப்பப் பட்டது

அழைப்பை பெற்ற அசுரர்களும் ஒன்று ௯டி, இந்த தேவர்களுக்கு உதவுவது போல் நாமனைவரும் அவர்களுடன் ஒன்று சேர்ந்து அமிர்தம் கடைவோம். அமிர்த கலசம் கையில் கிடைத்ததும், தட்டிப் பறித்துக் கொண்டு, அதன் பலனை முழுவதுமாக நாம் அடைந்து விடலாம். ஏற்கனவே பலமிழந்த தேவர்களுக்கு ஒரு சொட்டு ௯டத் தராமல் நாமே அனைத்தையும் உண்டு விடலாம். பாவம் தேவர்களுக்கு வேலை மட்டும் மிஞ்சும். அமிர்தம் முழுவதும் நமக்குத்தான்.! அதன் பின் அமிர்த பலத்தின் பெரும் உதவிகொண்டு அவர்களை அடித்துத் துரத்தி விட்டு மூவுலகத்தையும் நாமே ஆண்டு வரலாமென", அசுரர்களின் குரு சுக்ராச்சாரியாரின் முன் அழகாய் முடிவெடுத்தனர்.

மஹா விஷ்ணுவின் உறைவிடமாகிய திருப்பாற்கடலில், அமிர்தம் கடைய அவரின் அனுமதியோடு, “அமிர்தம் உங்களுக்குத்தான்.! அசுரர்களின் முழு உழைப்போடு அவர்களின் கண் முன்னாலேயே, அமிர்தம் மொத்தமும் உங்களை வந்தடையும். கவலை வேண்டாம்.! " என்ற பரந்தாமனின் ஏக  ஆசியோடு, தேவர்களும், அசுரர்களும் ஒன்று கலந்து குறிப்பிட்ட வேளையில் ஒரு மனதாக இறங்கினர். பெரிய மலையாகியமந்திர கிரியைமத்தாக அமைத்துக்கொண்டு. பரமேஷ்வரனின் கழுத்தை அலங்கரிக்கும் நாகாபரணமாகியவாசுகிஎன்ற பாம்பை கயிறாகக் கொண்டு, நல்லதொரு நாளாம் தசமி திதியன்று, மும்மூர்த்திகளையும் தொழுதவாறு தேவர்கள் அமிர்தம் கடையத் துவங்கினர்.


ஒரு கால கட்டத்தில் மந்தரகிரி மலை பாற்கடலில் மூழ்கத் தொடங்க, தேவர்கள் எம்பெருமான் நாராயணனைத் துதிக்க, மகாவிஷ்ணு பெரும் ஆமை வடிவை எடுத்து மந்தரகிரியின் அடிபாகத்தை தன் முதுகில் தாங்கிப் பிடித்தவாறு மலை மூழ்குவதை தவிர்த்து நிறுத்தினார். இதுவே அனைவரையும் காப்பதற்காக மகாவிஷ்ணு எடுத்த பத்து அவதாரங்களில் இரண்டாவது அவதாரமாகிய ௯ர்ம அவதாரம் ஆகும். தேவர்கள் நாராயணனை மேலும் துதித்தபடி தெய்வ சிந்தனையுடன் இருந்தனர்.

வாசுகியின் சிரமத்தைக் குறைக்க அதன் வால் பகுதியை பிடிக்கச் சொல்லி அசுரர்களை தேவர்கள் கேட்டுக்கொண்டும், ஆணவத்தின் பிடியிலிருந்த அசுரர்கள் அதைக் கேளாது வாசுகியின் தலைப் பகுதியை பிடித்துக் கொண்டனர். அவர்களின் அசுர பலத்தின் அழுத்தமும், மூர்க்கதனமாக இழுக்கும் வேதனையும் பொறுக்காது, எரிக்கும் விஷத்தை வாசுகி கக்கியது. மூவுலகினையும், அழிக்கும் ஆலகால விஷமாக அது பரவி உருவாக, அதன் பிடியிலிருந்து தப்பிக்க, அனைவரையும் காத்தருள சர்வேஸ்வரனை தேவர்கள் துதித்துப் போற்ற, கைலாய நாதனாகிய ஈஸ்வரன் அந்த விஷத்தை எடுத்து வருமாறு நாயன்மார்களில் ஒருவரான சுந்தரருக்கு ஆணைப் பிறப்பிக்க, சுந்தரர் விரைந்து பாற்கடல் சென்று அந்த விஷத்தை தன் சக்தியினால், உருட்டி நெல்லிக்கனியளவு கையில் ஏந்தி வந்து சர்வேஸ்வரரிடம் சமர்ப்பித்தார்.
சுந்தரர் கொண்டு தந்த விஷத்தை யாருக்கும் தொந்தரவின்றி அழிக்க எண்ணம் கொண்ட ஈஸ்வரன் தன் வாயிலிட்டு அமுதமென விழுங்கினார். அவர் வயிற்றினில் இருக்கும் அண்ட சராசரங்களையும் அதில் வாழும் எண்ணற்ற கோடி ஜீவன்களையும் காக்க வேண்டிஇறைவனின் அருகிலிருந்த பார்வதி தேவி சட்டென தன் திருக்கரத்தால், நாதனின் கழுத்திலேயேவிஷம் அமிர்தமாக மாறட்டும்என வேண்டிக்கொண்டு அவர் கழுத்தை தடவ தேவியின் வேண்டுதலால், விஷம் அமிர்தமாக மாறி ஈஸ்வரனின் திருகழுத்தை கருநிறத்தோடு அலங்கரித்தது. அன்றிலிருந்து இறைவன் "திருநீலகண்டன் எனப் பெயர் பெற்றார். இப்படியாக அவ்விஷமானது இறைவனுக்கும் சிரமம் ஏற்படுத்தாது, எவ்வுயிருக்கும் ஆபத்தை விளைவிக்காது அழிந்து போனது.


பாற்கடலிலிருந்து அனேக விதமான ஔஷதங்கள் உதயமாகி, தேவந்திரன் மகாவிஷ்ணு, மற்றும் அனேகரிடம் தத்தம் விதிப்படி சரணடைந்தன. இறுதியில் அமிர்த கலசம் ஏந்தி மகாலட்சுமி பாற்கடலிலிருந்து உதயமாக, தேவர்களுடன் போரிட்டு ஜெயித்து அக்கலசத்தை அசுராள் பிடுங்கிச் சென்றார்கள். தேவர்கள் செய்வதறியாமல் திகைத்து நிற்க, மகாவிஷ்ணு மாயையாகிய மோகினி அவதாரத்துடன் வந்து அசுரர்களை மயக்கி ஏமாற்றி, பின் தேவர்களுக்கு அமிர்தம் பரிமாறி அவர்களின் தேக பலக்குறையை நிவர்த்தி செய்தார். அதில் சுவர்பானு என்பவன் அசுரனாக இருந்தாலும் மகாவிஷ்ணுவின் சூழ்ச்சி புரிந்து தேவர்கள் போல் உருமாறி சூரிய, சந்திரனுடன் சேர்ந்து அமர்ந்து அமிர்தம் பருகினான். அப்போது மோகினி உருவத்திலிருந்த மகாவிஷ்ணுவுக்கு சூரிய, சந்திரன் அவன் அசுரன் என குறிப்பால் உணர்த்த அதைப் பார்த்த மகாவிஷ்ணு தன் கையிலிருக்கும் அகப்பையால் அவன் தலையை கொய்து எறிந்தார், தலை வேறு , உடல் வேறாகினும் அமிர்த பலத்தால் உயிருடனிருந்த சுவர்பானு பின் மகாவிஷ்ணுவிடம் மன்னிப்பு வேண்டி விமோசனமும் வேண்ட, மனமிறங்கி மகாவிஷ்ணு அவர்களின் அங்கஹீனமான உருவத்தை திருத்தியமைத்து உடலிழந்த உருவத்திற்கு பாம்பின் உடலையும், தலை இல்லா உடலுக்கு பாம்பின் தலையையும் தந்து ராகு, கேதுஎன்ற பெயருடன் இன்றளவும், நவகிரகங்களில் அவர்களும் ஒன்றாகும் அருளைத் தந்தார் .

தேவர்களுடன் இணைந்து அமிர்தம் பருகிய காரணத்தால், ராகுவும், கேதுவும் தங்களின் அசுர குணம் மறைய பெற்றவர்களாய், மற்றைய கிரகங்களுடன் இணைந்து மக்களுக்கு அவரவர் வினைக்கேற்ப நல்லதைச் செய்து வருகின்றனர். ஆனாலும், சூரிய, சந்திரன் காட்டிக் கொடுத்தமையால்தான், விமோசனம் பெற்றாலும், தன் தேகம் வித்தியாசமான தோற்றத்துடன் இருவேறாக ஆகியது என்ற ஒரு மனக்குறையில், மன விரோதத்தில்  சுவர்பானு ஆண்டுதோறும், அவர்களை உலகத்தில் பயணிக்கவிடாது ஒரிரு முறைகள் தன் சக்தியைக் கொண்டு மறையச்செய்ய வரம் பெற்றதாகவும், அந்நிகழ்ச்சியே, சூரிய, சந்திர கிரகணமென்றும் புராணங்கள் உறுதிப் படுத்துகின்றன.


இந்த தேவர்கள் அமிர்தம் உண்ட சரிதத்தை நான் விவரித்து எழுத வேண்டுமென  நினைத்ததின் காரணம், நான் ஒரு செய்தியை படித்ததுதான். அன்று ஈஸ்வரன் அந்த ஆலகால விஷத்தை அழிக்காது பெருகவிட்டால் அனைத்து உயிர்களுக்கும் ஆபத்து என்பதற்காக  நமக்காக அதை தானே உண்டு அது அமுதமாக மாறி, திருநீலகண்டர் எனும் காரணப் பெயருடன், திருவிளையாடல் புரிந்து அனைவரையும் அன்போடு காத்து ரட்சித்தார் என்கிறது வியக்க வைக்கும் புராணங்கள்.
ஆனால் இன்று அமுதமாய் இனிக்கும் ஒரு உணவே ஆலகால விஷமாய் மாறி ஓர் உயிரை மாய்த்த சம்பவத்தை குறித்த ஒரு செய்தியை கண்ட அதிர்ச்சியில்  (வாட்சப்பில் அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளுமாறு வந்த ஒரு செய்தி.) காலத்தின் கோலம் இப்படி மாற்றி விட்டதே என்ற வருத்தத் தோடு அதை இங்கு உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். அந்தச் செய்தி எந்தளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.
                
                  இருப்பினும், வந்த அந்தச்செய்தி இதோ….

நண்பர்கள் கவனத்திற்கு...படித்து விட்டு ஷேர் செய்யுங்கள்....................
தற்போது சீனாவில் நடந்த துயரச் சம்பவம் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்ற சீன தேசத்தை சேர்ந்த ஒருவர் அங்கு கடையில் விற்பனை செய்த பலாப்பழத்தை வாங்கி சாப்பிட்டு விட்டு கூடவே coco-cola வையும் அருந்தி இருக்கிறார்..இதனால் சிறிது நேரம் கழித்து நெஞ்சடைத்து அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.. மருத்துவ மனைக்கு கொண்டு சென்று பிரேத ப‌ரிசோதனை‌ செய்த போது தான் உண்மை தெரிய வந்துள்ளது.. அது என்னவென்றால் பலாப்பழத்தை சாப்பிட்டு விட்டு உடனே COCO-COLA அருந்தியதால் அது விஷமாக மாறி இருக்கிறது.. அப்படி சாப்பிடுவது 5 அடி நாகப்பாம்பின் விஷத்துக்கு சமம்..அதனால் தயவு செய்து பலாப்பழம் சாப்பிட்டு எட்டு மணி நேரத்திற்கு COCO-COLA; PEPSI போன்ற பானங்களை அருந்தாதீர்கள்... தயவுசெய்து இதை அனைவருக்கும் பகிருங்கள்...

                                                                               படித்ததற்கு நன்றிகள்....