Showing posts with label தீபாவளி நல்வாழ்த்துக்கள். Show all posts
Showing posts with label தீபாவளி நல்வாழ்த்துக்கள். Show all posts

Tuesday, November 10, 2015

தெய்வங்கள் சார்ந்த பண்டிகைகள்..

வணக்கம் சகோதர சகோதரிகளே...


அனைவருக்கும் எனது மனம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.


பகவான் கிருஷ்ண பரமாத்மா தன் மனைவி சத்ய பாமையின் துணையுடன், மூவுலகத்தினரையும் துன்புறுத்தி வந்த அசுரன் நரகாசூரனை வதைத்து அனைவருக்கும் மகிழ்வளித்த நாளைத்தான் இந்த தீபாவளி திருநாளாக  நாமனைவரும் கொண்டாடுகிறோம். 

 பூமித்தாய்க்கு மகனாக அவதரித்து தன் தாய் ஒருவளால்தான் தனக்கு மரணம் நேர வேண்டும் என்று வரம் கிடைத்தச் செருக்கில் தேவர்களையும் மற்றவர்களையும்  துன்புறுத்திக்கொண்டு எவராலும் தன்னை வீழ்த்த இயலாது என்று மனம் மகிழ்ந்து கொண்டிருந்த அசுரன், கிருஷ்ணனின் மனைவி சத்யபாமை பூமித் தாயின் அவதாரம் என்பதை அறியாமல், அவளுடன் போரிட்டு தன் முடிவை அடைந்தான். அவனை வேறு யாராலும் வீழ்த்த முடியாது என்பதினால், பகவான் கிருஷ்ணன்தான் தன் தந்திரத்தால் சத்ய பாமையைக் கொண்டு அவனை வென்று, அவன் தொல்லைகளிலிருந்து அனைவருக்கும் விடுதலை பெற்றுத் தந்தார். 

நரகாசூரன் அசுரனாகப் பிறந்து வாழ்ந்த போதும், பொறுமையின் சிகரமான பூமி மாதாவுக்குப் பிறந்ததினால், தான் இறக்கும் தறுவாயில், என் இறப்புத் தினமான இந்நாளை உலகம் உள்ளவரை அனைவரும் ஒவ்வொரு வருடங்களிலும் மகிழ்வோடு, புத்தாடைகள் அணிந்து இனிப்புடன் உணவுண்டு, உற்றம் சுற்றம் நட்புகள் சூழ வாழ்த்துரைகளை பகிர்ந்து கொண்டு சந்தோஷமாக கொண்டாட வேண்டும் என்ற வேண்டுதலையும், பகவான் கிருஷ்ணன், சத்யபாமையின் முன் வைத்து விட்டு மடிந்து போனான். அன்றிலிருந்து  நரகாசூரனின் நினைவு நாளை நாமனைவரும் அவன் விருப்பப்படி நினைவு ௬ர்ந்து கொண்டாடி  வருகிறோம் என்கிறது புராணக் கதைகள்.


அந்நாளில், வீடுகளில் நிறைய விளக்கேற்றி, இறைவனின் நாமாவளிகளை துதி்த்துப் போற்றி நம் மனதின் அஞ்ஞானமெனும் இருளகற்றி ஞானமெனும் ஒளிச்சுடர் எந்நாளும்  மனதில் நிறைந்திருக்க எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளை வேண்டியபடி கொண்டாடுவதே தீப ஒளித் திருநாளின் சிறப்பு எனவும் காலங்காலமாய் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகிறோம்.
எப்போதுமே ஒவ்வொரு தெய்வங்களோடும் இணைந்தவைதான் இந்தப் பண்டிகைகள். அன்று நம் கவலைகள் அனைத்தையும் மறந்து தெய்வ வழிபாடுட்டுடன் அந்நாளோடு இணைந்து வாழ்வின் அன்றைய ஒருநாளின் நிறைவை மனதோடு சுமப்பது மகிழ்ச்சியான ஒரு நிகழ்வல்லவா..?


இவ்விதமாக அனைவரின் இல்லங்களிலும் தீபத்தினால் அலங்கரித்து லட்சுமி குபேர அருளோடு தீபாவளி கொண்டாடி மகிழ என் மனம் நிறைந்த நல் வாழ்த்துக்கள்.
                                         வாழ்க நலம்.