Showing posts with label வழிபாடு. Show all posts
Showing posts with label வழிபாடு. Show all posts

Friday, August 29, 2014

விநாயகர் வழிபாடு...





வலைத்தள உறவுகளுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்


நன்றி ஓம் சக்தி விநாயகர் மந்திர்
முழுமுதற்க் கடவுளே…!
மூஷிக வாகனனே…!
முருகனுக்கு, மூத்தோனே…!
முக்கண்ணனுக்கு, புதல்வனே…!
மூவுலகிற்கும், வித்தகனே…!
உமையவளின், துணைவேண்டி
உருவான அரும்பாலகனே….!
அண்ட சராசரங்களையும்,
அகிலங்கள், அனைத்தையும்,
அடக்கமாய்  தனக்குள்,
அடக்கி வைத்திருப்பவனே….!
எளிமையின், சிகரமாய்,
எத்திக்கும் நிற்பவனே…!
எங்கேயும், எதிலுமாய்,
முண்ணிலையில், இருப்பவனே…!
பிடித்து வைத்தவிடத்திலெல்லாம்,
பிரியமாய் அமர்ந்திருப்பவனே….!
முடிந்ததை, பிரசாதமாக்கினாலும்
முகஞ்சுழிக்காமல், ஏற்றுக்கொள்பவனே…!
எண்ணிய செயல்களில்,
இடர்தனை களைபவனே….!
பண்ணிய பாவங்களின்,
பலன்களை அறிந்தவனே...!
வினைகளை வேரறுத்து
வெல்லும், வழி வகுப்பவனே…!
விநாயகனே…! வேழ முகத்தோனே…!
இன்று உந்தன் வரவிற்காய்,
இதயம் நிரம்ப அன்பு வைத்து,
இல்லந்தோறும் விருந்து வைப்பர்…!
ஷ்ட தெய்வமாய் உனைப்போற்றி
கஷ்டம் நீங்கவே வழி படுவர்….!
அகிலம் காத்து, குறைத்தீர்க்கவே, நானும்
அனைவரின் சார்பிலும் வணங்குகின்றேனே….!