Wednesday, April 7, 2021

விரும்பும் வேண்டுதல்.

பல்லாயிரம்  ஏன்.. அதற்கும் மேலாக பல கோடி செயல்கள் தன்னால்தான் நடக்கிறது என்று இந்த மானிடம் தற்பெருமை கொண்டு தறிகெட்டு சுய மகிழ்ச்சியில் இல்லை, பிறர் புகழ்ச்சியில் பாடி, ஆடி மகிழ்ந்திருந்தாலும், உலகில் இரண்டு விஷயங்கள் (பிறப்பு, இறப்பு) கண்டிப்பாக இறைவன் என்றொருவன் நம்மை (மானுடப் பிறவியை) ஆட்டுவிக்கும் கலையில் தேர்ச்சிப் பெற்று நம்முடனேயே இருப்பதை உணர்த்தி சொல்கிறது. 

மனம், பணம், பயிற்சி, முயற்சி, பெருமை, சிறுமை, வாழ்வு. தாழ்வு, எல்லாவற்றிலும் நம்மை பிணைத்தெடுக்கும் நூல் "அவன்" கையில்தான் உள்ளது. அதனைக் கொண்டு பொம்மைகளாகிய நம்மை ஆட்டி "அவன்" பெறும் மகிழ்ச்சி "அவனுக்கு" மட்டுமே உரித்தானது. 

செய்ய முடிந்தவன் சாதிக்கிறான். 

செய்ய முடியாதவன் போதிக்கிறான். 

இது இன்றைக்கு நான் படித்த வாசகம். இதில் முடிந்தவனின் / முடியாதவனின், சாதிப்பதும்  போதிப்பதும் "அவன்" யோசனையில் வந்ததுதானே....! ஆக "அவனின்றி ஓர் அணுவும் அசையாது." 

ஆகா..! இவர்கள் இன்று போதிக்க ஆரம்பித்து விட்டார்களே..!  "ரம்பத்தை" எப்போதும் கையில் வைத்திருக்கும் இவர்களுக்கு இன்று "ரொம்பவும்" முத்தி விட்டதா....? என நீங்கள் எண்ணும் முன்,  உண்மையை சொல்லி விடுகிறேன். இன்றுதான் இந்தப்பதிவுக்கு நாள் நன்றாக இருப்பதாக  என் ஆஸ்தான ஜோதிடர் (அதுவும்" அவன்"தான்) சொன்னார்.  (அதனால்தான் இந்த அவசரப் பதிவும், அதன் விளைவாய்  கூடவே தொத்திக் கொண்ட என்னுடைய முந்தைய பதிவும்.) ஏனென்றால்் என்னை இந்த நாளில்  உலகத்தில் தான் விளையாடும் ஒரு பொம்மையாக உருவாக்கியவன் "அவன்"தானே....! 

இதோ என் முந்தைய பதிவு. இதில் "என்"என்ற வார்த்தையில் அகங்காரம் தெரிகிறது.  மன்னிக்கவும். அதனால் அவன் எழுத வைத்தப் பதிவு என்றே  இதனை குறிப்பிடுகிறேன். 


முருகா, 
உன் ஒரு திரு முகத்தின்
இரு விழிகள்என்னைக் 
கொஞ்சம் பார்த்தும்
பாராமலுமிருக்க
மற்ற இரு முகத்தின்,
இரு விழிகளின்,
ஓரப்பார்வை
என்னைச்சிறிது
தொட்டும்
தொடாமலுமிருக்க
தொடர்ந்திருக்கும்,
மூன்று முகங்களின் 
முழுப்பார்வையும்,
முழு திக்கிலும்
பரவி விரிந்திடவே,
முயற்சிக்கும் போதினிலும்
முருகா!
முழுமதியான உன் முகத்தில்,
மெளனமாக 
உன் இதழ் சிந்தும்,
மெளனப் புன்முறுவல்
என் வாய் பேசாத,
மெளனத்தை கலைத்து 
உன்னிடமிருந்துமறு
மொழியொன்றையும்
தினம் தினம் 
எதிர்பார்க்கின்றதே!


 பறவையாய் நான் 
பிறந்திருந்தாலும்என்
பறக்கும் திறனினால்
பந்தென கிளம்பி,
உன்னைச்சுற்றும் 
சில பறவைகளோடு,
உள்ளம் களிக்க 
உன்னைத் தொட்டுஎன்
சிறகுகளால்உனை 
தினம் வருடி,
சிறகடித்துவானில் 
வட்டமிடும் பிற
பறவைகளோடுஒரு 
பறவையாய்உன்னை
பலகாலம் பரவசமாய் சுற்றி 
வந்திருபபேன்.


 

மலர்களாய்நான் 
மலர்ந்திருந்தாலும்,
மணம் வீசும் அச்சிறு 
பொழுதில்உன்
மார் மீதும்தோள் மீதும்
மணம் மிகும்,
மலர் மாலைகளாக நான் 
மாறி மணந்திருக்க
மகிழ்ந்திருப்பேன்.
வசமுள்ள மனதுடனே,  
உன்னருளினால்,
வாடாத மல்லியாய் என்றும்நான்
வாழும் வரை வசித்திருப்பேன்


மேகமாய்நான் 
ஊர்ந்திருந்தாலும்
மோகமுற்ற மனதுடனேகடும்
வேகமாய் அவ்விடம் விட்டு 
நகராது,
வேறிடம் ஒன்றிருப்பதையும் அறியாது,
ஏகமாய் உனை விரும்பும் 
விருப்பத்துடனே,
எத்திக்கும் பொழியும் மழை மேகமாகி,
தாவி உன் பூ முகம் 
அணைந்திடவே,
தங்கு தடையில்லாநீர் 
தாரையாகியிருப்பேன்.



வான் நிலவாய் நான் 
நீ(வாழ்)ந்தி(யி)ருந்தாலும்,
நீக்கமுற நிறைந்திருக்கும்
என்
தண்ணொளியால்
உந்தன் தங்கத்
தளிர் வதனம் கண்டு 
மனமுவந்து,
இரவின் பொழுதெல்லாம்
உன்னை
இரசித்துகரையாமல்
கரைந்திடவும்,
இமையோன் மைந்தா
உன்னிடம் என்
இமை மூடா வரம் கேட்டுப் 
பெற்றிடவும்,
இயன்றவரை 
முயன்றிருப்பேன்


உமையவளின் அருமைந்தா!
உன்னைச் சுற்றிச் 
சூழ்ந்திருக்கும்மற்ற
மரங்களினிடையே
ஒரு மரமாக
மண்ணோடு நான் 
நின்றிருந்தாலும்என்
கிளைகள் ஆடும் 
அவ்வேளையில்,
கிளுகிளுக்கும் மணியோசை போல்,
காற்றுடன் காற்றாக 
நான் கலந்துஉன்
காதோடு தினம் உறவாடி
என்னை
"காக்ககாக்க!," என்றே 
துதி பாடிநின்
கழலடியை மறவாதிருக்க 
பண் பாடிஎன்
மனதின்எண்ணமெல்லாம்இந்த
மால் மருகனை விட்டகலாது, என்றேனும் ஒருநாளில்,
மண்ணின் மடியில் 
சாய்ந்தாலும்,
மமதையின்றி வீ்ழ்ந்திடும் 
வரத்தை,
கண் மூடிமனம் கசிந்து நான் பெற்றிடவே,
கண்ணின் கருமணியாம்
எந்தன்
கந்தனை வேண்டியபடி
நின்றபடியிருந்தாலும்,
காலமெல்லாம் 
களித்திருப்பேன்.


ஆனால், 
இவற்றிலொன்றிலும்
நான் பிறவாமல்,
இந்த மண்ணுலகின் 
மாந்தரென்று,
பிறந்து விட்ட ஒரு 
காரணத்தால்,
பிறவியின் பயன் தொட்டு
உன்னைத்
தொடவும் நேரம்  
பிறக்கவில்லை!
தொடரவும்வழி 
அமையவில்லைஎன்னைத்
தொடர்ந்து வரும் 
பாபங்களினால்,
கடமையெனும் கயிறானது
இறுகவே
கட்டி விட்டது கண்களையும்,
கைகால்களையும்
தற்சமயம் நின் கருணைஅக்
கட்டவிழ்த்து போனதில்
உந்தன்
காட்சி கிடைத்திட
என் கவலை அகன்றிட,
கந்தாஎனை நோக்கி 
இனியேனும்மனம்
களிப்புற கருணைக்கண் 
திறவாய்.!
   என் சிந்தனை என்றென்றும்,
உன்னிடம் 
சிரத்தையோடிருக்க,
கந்தனேஉன் சிந்தைதனில்நீ
எந்தனையும்சற்று 
நினைத்திருக்க, வேண்டுமென
வந்தனையோடு 
துதிக்கின்றேன்.! அவ்
வரம் வேண்டி தவிக்கின்றேன்
என்
மரணம் என்னை தொடும் 
வரைஉன்னை
மறவாத வரம் தந்தருள 
வேண்டுகின்றேன்.! 
மறவாது அவ்வரத்தை
தந்திடுவாய் என,
மனமாற வணங்கிப் 
போற்றுகின்றேன்.!!!!
மனதாற துதித்து 
யாசிக்கின்றேன்.!!!!

இதைப் இப்பிறவியில் "அவன்" தந்தருள வேண்டுமென இந்நாளில் மட்டுமல்ல.. . . எந்நாளும் வேண்டிக் கொள்கிறேன். 🙏. மனிதபிறவிக்கென்றே தோன்றும் சுயநல எண்ணங்கள் எனக்குள்ளும் எழுவது இயல்புதானே.. ! இன்று இதை அன்போடு படிக்கும் வலைத்தள உறவுகளின் பண்பான உள்ளங்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள். 🙏. 🙏. 

38 comments:

  1. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். அருமையான கவிதை! தமிழ் கொஞ்சி விளையாடுகிறது. இனி வரும் நாட்களில் உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளாமல் தலை நிமிர்ந்து நின்று அனைத்தையும் எதிர்கொள்ளப் பிரார்த்தனைகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்களது உடனடியான வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு என் மன மகிழ்ச்சியுடனான நன்றிகள்.

      பதிவை பாராட்டி தாங்கள் தந்த ஊக்கமிகு கருத்துரைகள் என எழுத்தை மென்மேலும் நல்ல முறையில் வளர்க்கும் என நம்புகிறேன்.

      உங்கள் கருத்துக்கள் இன்றைய தினத்தில் மிகுந்த சந்தோஷத்தையும், தன்னம்பிக்கையையும் தந்தன. நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள் அன்பு கமலாமா.

    என்றும் வளமுடன் இருக்க கந்தனே அருள் புரிவான்.
    நீங்களும் உங்கள் குடும்பமும் என்றும் வாழ்க வளமுடன்.

    தமிழ் உங்களிடம் நன்றாக வசப்பட்டிருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு என் மன மகிழ்வுடனான நன்றிகள்.

      ஆமாம் கந்தன் கருணையினால் உலக மக்கள் அனைவருக்குமே நல்லது நடந்திட தினம் பிரார்த்தனை செய்து கொண்டேயுள்ளேன். தங்கள் அன்பு ஊக்கம் நிறைந்த கருத்துரை என் எழுத்திற்கு என்றுமே ஆணிவேராக இருந்து உதவும் என மிகவும் நம்புகிறேன். உடனடி வருகை தந்து அன்பான கருத்துக்கள் தந்தமைக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் கமலா அக்கா...   பதினெட்டாவது பிறந்த நாளா?!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு என் மன மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.

      /பதினெட்டாவது பிறந்த நாளா?!/

      ஹா.ஹா.ஹா அடாடா.. இப்படி சட்டென இரண்டு வருடங்களை கூட்டி சொல்வீர்கள் என கொஞ்சமேனும் எதிர்பார்க்கவில்லை.:) நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. ஹா...  ஹா...  ஹா...   வென்று விட்டீர்கள்!

      Delete
    3. வணக்கம் சகோதரரே

      /வென்று விட்டீர்கள்!/

      ஹா.ஹா.ஹா. அப்படியானால் பரிசு.? பிறந்த நாளுக்கு சகோதரரிடமிருந்து சகோதரிக்கு பரிசு கிடைத்த மாதிரியும் இருக்கட்டுமே..:)

      தங்கள் மீள் வருகைக்கு நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. பயங்கர முருக பக்தை போலவே நீங்கள்...   நானும் முருகன் அருள் நாடி நிற்பவன்தான் என்று சொல்லிக்கொள்ள விழைகிறேன்!  கவிதை சூப்பரா இருக்கு.  மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் பாடல் பாணியில் கவிதை எழுதி விட்டீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீங்களும் முருக பக்தர் என்பதை உங்கள் பதிவுகளிலும், பதில்களிலும் அறிந்துள்ளேன். மிகவும் சந்தோஷமாக உள்ளது. கந்தன் நம் அனைவரின் வேண்டுதல்களையும் பூர்த்தி செய்ய நானும் சிவபாலனை எப்போதும் மனமாற வேண்டிக் கொள்கிறேன்.

      கவிதையை ரசித்துப் படித்து பாராட்டியமைக்கு மிக்க மகிழ்ச்சி. உங்கள் ஊக்கமே என் ஆக்கம். தங்கள் அன்பான கருத்துகளுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. பிறந்த நாள் வாழ்த்துகள்.

    நல்லா கவிதை எழுதியிருக்கீங்க.

    எனக்கும் முருகன் பக்தி உண்டு.

    வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      உங்களது அன்பான வாழ்த்துக்களுக்கு மனம் நிறைந்த மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.

      கவிதை நன்றாக வந்துள்ளது என மனமாற பாராட்டியமை கண்டு மனம் மகிழ்கிறேன்.

      நீங்களும் முருகன் மீது பக்தி வைத்திருக்கிறீர்கள் என அறிந்து மிகவும் மகிழ்வடைந்தேன். முருகனருள் அனைவருக்கும் பரிபூரணமாக கிடைக்க அவர் பாதம் பற்றி தொழுது பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

      (அப்பாடா... இன்று உடனடியாக பதில்கள் தர முருகன் உதவி விட்டான். முருகா சரணம்... ஹா ஹா ஹா.)

      உங்கள் அன்பான வாழ்த்திற்கும், கருத்துக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. இனிய பிறந்த் அனாள் வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன் கமலா.
    மிக அருமையான கவிதை. அதற்கு ஏற்ற படங்கள் இணைப்பு மிக் அருமை.

    ReplyDelete
    Replies
    1. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்

      Delete
    2. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு என் மன மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.

      பதிவை ரசித்து, கவிதையை மட்டுமில்லாது படங்கள் இணைப்பையும் பாராட்டி கருத்து சொல்லியிருப்பதற்கு மிக்க மகிழ்ச்சி. நீங்கள்தான் கவிதைக்கு இணைத்த படங்களையும் முதலில் பாராட்டியுள்ளீர்கள்.அதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    3. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      புரிந்து கொண்டேன். மீண்டும் வந்து பிறந்த நாள் வாழ்த்துகள் கூறி வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. //மனம், பணம், பயிற்சி, முயற்சி, பெருமை, சிறுமை, வாழ்வு. தாழ்வு, எல்லாவற்றிலும் நம்மை பிணைத்தெடுக்கும் நூல் "அவன்" கையில்தான் உள்ளது. அதனைக் கொண்டு பொம்மைகளாகிய நம்மை ஆட்டி "அவன்" பெறும் மகிழ்ச்சி "அவனுக்கு" மட்டுமே உரித்தானது. //

    உண்மை.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பதிவில் குறிப்பிட்ட வரிகளை கோடிட்டு சொன்னதற்காக நன்றி.
      "அவன்" ஒருவன்தான் நம்மை என்றுமே ஆட்டுவிப்பவன். அதைப் புரிந்து கொள்ளாமல் சிலர் தன் செயல்களை சிலாகித்து கூறும் போது எனக்குள் எப்போதுமே வருத்தம் வரும். நடந்தது நடப்பவை, நடக்கப் போவது அனைத்துக்கும் அவன்தான் காரணகர்த்தா.. எதற்குமே அவனிடம் மனம் விட்டு கூறிதான் சமாதானம் ஆக வேண்டும். வேறு வழி இல்லை என்றுதான் நான் நினைக்கிறேன். தாங்களும் அதற்கு ஒத்துப் போவது சந்தோஷமாக உள்ளது.

      உங்கள் அன்பான கருத்திற்கு நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. என் சிந்தனை என்றென்றும்,
    உன்னிடம்
    சிரத்தையோடிருக்க,
    கந்தனே, உன் சிந்தைதனில், நீ
    //எந்தனையும், சற்று
    நினைத்திருக்க, வேண்டுமென
    வந்தனையோடு
    துதிக்கின்றேன்.!//


    அதுதான் வேண்டும் ! வேறு என்ன வேண்டும் ! என்றும் மறவா மனம் வேண்டும். அதை முருகன் அருள்வார்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      கவிதையின் வரிகளை ரசித்து தாங்கள் தந்துள்ள கருத்துக்கள் கண்டு மனம் மகிழ்கிறேன்.

      முருகனை மறவாதிருக்க அவர் வரம் தருவார் முருகன் கண்டிப்பாக நம்மை காப்பார். என்ற நம்பிக்கையோடுதான் இருக்கிறேன். அவனருளால் உலக மக்கள் அனைவரையும் அவர் காக்க வேண்டுமென தினமும் பிரார்த்தனை செய்து கொண்டு இருக்கிறேன். முருகா சரணம்.

      தாங்கள் வந்து விளக்கமாக பல கருத்துரைகள் தந்தது மிகவும் மகிழ்ச்சியை தருகிறது சகோதரி. மிக்க நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்...

    வரிகளும் படங்களும் சிறப்பு...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்கள் வாழ்த்துக்களுக்கு என் மனம் நிறைந்த மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.
      பதிவையும் ரசித்து படங்களை பாராட்டியமைக்கும் மிகுந்த மன மகிழ்ச்சியடைந்தேன். தங்கள் ஊக்கமிகும் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  10. மனம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.

    சிறப்பான கவிதை. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்களின் மனம் நிறைந்த வாழ்த்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி.

      கவிதையையும் பாராட்டி வாழ்த்துகள் தந்தமைக்கும் மிக்க மன மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  11. தாமதமான பிறந்த நாள் வாழ்த்துகள்! கவிதையின் ஆரம்ப வரிகளை  படித்து விட்டு காதல் கவிதை என்று நினைத்தேன்(என்னை தவறாக நினைக்காதீர்கள்). பக்தியும் ஒரு வகை காதல்தானே? இறைவன் மீது கொண்ட காதல். 

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு என் மன மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.

      ஆமாம் பக்தியும் ஒருவகை காதல்தானே. உண்மை.. அதுவும் இறைவன் மீது கொள்ளும் காதல் என்றுமே மாறாத காதல்...

      பதிவுக்கு படித்து ரசித்து நல்லதொரு கருத்தினை தந்தமைக்கு என் நன்றிகள் சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  12. வணக்கம் சகோ
    இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

    முருகருக்கான கவிதை மழை அருமை தமிழ் கொஞ்சும் வார்த்தைகள்.

    தொடரட்டும் தங்களது சமூக கவிதைகளும்... காவியங்களும்....

    இப்பதிவு எனது டேஷ்போர்டுக்கு வரவில்லையே...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு என் மன மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.

      பதிவை படித்து கவிதை நன்றாக உள்ளதென பாராட்டியமைக்கு மிக்க மகிழ்ச்சி. உங்கள் ஊக்கம் மிகும் கருத்துரைகளுக்கு நன்றிகள்.

      உங்கள் டேஷ்போர்டுக்கு இப்பதிவு வரவில்லையா? ஏன் எனத் தெரியவில்லையே..! நான் கூட தங்கள் வேலை பளுவினால் இந்தப் பதிவுக்கு வர தாமதமாகிறது என நினைத்துக் கொண்டிருந்தேன். வந்து தந்த தங்கள் நல்லதொரு கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோ.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  13. எனக்குப் பல சமயம் போஸ்ட் தெரியாமல் போய் விடுகிறது.

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கமலாக்கா.. என்றும் இளமையோடும் நலமோடும் வளமோடும் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அதிரா சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /எனக்குப் பல சமயம் போஸ்ட் தெரியாமல் போய் விடுகிறது./

      சமயங்களில் இந்த மாதிரி நடந்து விடுகிறது.
      அதனாலென்ன? ஆனாலும்
      உங்களைத்தான் காணவில்லையே என வழி மேல் விழி வைத்து காத்திருந்தேன். நலமாக உள்ளீர்களா? நீங்கள் வந்து தந்த வாழ்த்துகளுக்கு என் மனம் நிறைந்த மகிழ்வுடன் கூடிய நன்றிகள். மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  14. பிறந்தநாளில் திடீரென ஞானியாக மாறிட்டீங்களே:)).. இது நல்லதுக்கில்லை, இங்கின அதிரா தான் ஞானி ஆக்கும்:))..

    கவிதை மழை அழகு... கற்பனை கன்னா பின்னா எனப் பறந்திருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அதிரா சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /பிறந்தநாளில் திடீரென ஞானியாக மாறிட்டீங்களே:)).. இது நல்லதுக்கில்லை, இங்கின அதிரா தான் ஞானி ஆக்கும்:))./

      ஹா.ஹா.ஹா. ஆமாம்.. ஆமாம்.. அதிரா ஞானியின் உபதேசங்கள் கேட்டு கேட்டு நானும் இப்போது முழு ஞானியாகி விட முயற்சிக்கிறேன். இது (கவிதை பிறந்தது) அப்போதே 2014 லேயே நான் பாதி ஞானியாகி (அப்படியென நினைத்துக் கொண்டிருக்கிறேன்.) விட்டதின் அடையாளங்கள்.

      கவிதையை பாராட்டியமைக்கு மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள். பிற உயிரினங்களாக இருந்திருந்தால்... என்றுதான் கவிதையும் பறந்திருக்கிறது. இன்னமும் ஆசாபாசங்கள் விட்டபாடில்லை.( இப்போதும் ஞானிக்காக தகுதியும் சுத்தமாக வரவில்லையோ எனவும் தோன்றுகிறது.) உங்கள் அருமையான கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  15. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கமலாக்கா .தாமதமா நான் வாழ்த்துவதற்கு அதிராவை மன்னிக்கவும் :) காரணம் அவங்க உங்க போஸ்டை இன்னிக்குதான் பார்த்து கொஞ்ச நேரமுந்தான் சொன்னாங்க :) லேட்டானாலும் லேட்டஸ்டாக வாழ்த்திவிட்டேன் :) 

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /தாமதமா நான் வாழ்த்துவதற்கு அதிராவை மன்னிக்கவும் :) காரணம் அவங்க உங்க போஸ்டை இன்னிக்குதான் பார்த்து கொஞ்ச நேரமுந்தான் சொன்னாங்க :) /

      ஹா.ஹா.ஹா. தாமதமெல்லாம் இல்லை சகோதரி. நீங்கள் வந்து வாழ்த்தியதே எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. நானும் உங்கள் இருவருடன் அறிமுகமானதிலிருந்து உங்கள் பதிவுக்கு வரமுடியவில்லை என்ற குற்றவுணர்சி எனக்கு எப்போதும் உண்டு. இனி கண்டிப்பாக வருகிறேன்.

      /லேட்டானாலும் லேட்டஸ்டாக வாழ்த்திவிட்டேன் :) /

      மிகவும் மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள் சகோதரி. உங்கள் இருவரின் அன்பிற்கும் நான் என்றும் கடமை பட்டுள்ளேன். தங்கள் வாழ்ததுக்கு மீண்டும் நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  16. இறைவனையும், இயற்கையையும் போற்றும் அற்புதமான கவிதை!அன்புடன், வானம்பாடி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்களின் அன்பான முதல் வருகை மிகவும் மகிழ்ச்சியை தருகிறது.

      பதிவு குறித்த உங்களின் பாராட்டுதலை கண்டு மகிழ்ச்சியடைந்தேன். உங்கள் அன்பான வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  17. தாமதமான பிறந்த்நாள் வாழ்த்துகள் கமலாக்கா.

    கவிதையில் கொடி கட்டிப் பறக்கிறீர்கள்!! தமிழ்க்கடவுள் என்று சொல்லப்படுவதால் தமிழ் மணம் வீச கவிதை மலரால் அவருக்கு ஒரு மாலை - பாமாலை - சூட்டிவிட்டீர்கள் கமலாக்கா! மணக்கிறது!

    வாழ்த்துகள் மீண்டும் கமலாக்கா!


    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நீண்ட நாள் கழித்து நீங்கள் வலைத்தளம் வந்திருப்பதும், அதுவும் என்தளம் வந்து வாழ்த்துகள் சொல்லியிருப்பதற்கும் என் மனம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறது சகோதரி. இதில் தாமதமெல்லாம் ஒரு பொருட்டல்ல...!

      துளசி சகோதரர் நலமாக உள்ளார்களா சகோதரி? அவரையும் நான் மிகவும் விசாரித்ததாகக் கூறவும். இனி இருவரும் தொடர்ந்து எப்போதும் போல் வலைத்தளம் வர ஆசைப்படுகிறேன்.

      அன்பான உங்கள் பாராட்டுக்கள் கண்டு அகமகிழ்ந்தேன். வருகை தந்து ஊக்கம் நிறைந்த கருத்தையும் தந்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete