மலர்களின் ராஜா
அழகிய ரோஜா
மலர்களின் ராஜா
அழகிய ரோஜா
இளமங்கை வாழ்வில்
தங்க ராஜா ராஜா ராஜா மகராஜா
காதலின் ராணி
கலை தரும் வாணி
காதலின் ராணி
கலை தரும் வாணி
என் இதய வானில்
இன்ப ராணி, ராணி ராணி மகராணி
ஊரினில் உறவை தேடிடும் நினைவு
பருவ தேரினில் ஆடும்
தெய்வத்தின் கனவு
ஊரினில் உறவை தேடிடும் நினைவு
பருவ தேரினில் ஆடும்
தெய்வத்தின் கனவு
ஆசையின் பாசம்
பேசிடும் உரிமை
தன்மானத்தில் விளையும்
உலகினில் பெருமை
காதலின் ராணி
கலை தரும் வாணி
காதலின் ராணி
பூங்கொடி முகத்தில்
புன்னகை வெள்ளம்
அமுத தமிழிசை பாடும்
கவிதைகள் சொல்லும்
தலைமுறை புகழின்
குல நலம் காப்போம்
ஓராயிரம் காலத்து பயிர் வளம் சேர்ப்போம்
மலர்களின் ராஜா
அழகிய ரோஜா
மலர்களின் ராஜா
அழகிய ரோஜா
பாரத வீரர் மார்பினில் இணையும்
பாவையின் மனமே கனிபோல் கனியும்
வேதங்கள் ஓதி வளர்ந்திடும் பேதம்
அதை வென்றிட வேண்டும் தேசிய கீதம்
மலர்களின் ராஜா
அழகிய ரோஜா.
இப்பாடலின் வரிகளை படிக்கும் போதே எங்கோ எப்போதோ கேட்டு ரசித்த நினைவு உங்களுக்கும் வருமென நினைக்கிறேன்.
இநதப்பாடல் இடம் பெற்ற திரைப்படம்.. வள்ளி தெய்வானை இது 1973 ல் வெளிவந்த திரைப்படமாம்.முக்கிய கதாபாத்திரத்தில் ரவிசந்திரன், பிரமிளா நடித்துள்ளனர். இந்தப்படத்திற்கு இசையமைத்தவர் : என். எஸ் தியாகராஜன் பாடியவர்கள்: தனசேகர், மல்லிகா இந்தப்பபாடலை எழுதியவர் : தேன்கட்சி பாரதிசாமி. இந்த பாடலுக்கு ஏற்றபடி ஆடிப்பாடி நடித்திருப்பவர்கள் நடிகர் சசிக்குமார், மற்றும் நடிகை எம் பானுமதி.
எங்கள் வீட்டு மாடியில் இங்கு குடியிருக்கும் ஒருவர் மாடித்தோட்டம் மாதிரி மொட்டைமாடியில் ஒரு பகுதியில் அமைத்திருக்கிறார். அதில் அழகான மலர்கள், காய்கள் எனப் பூத்து காய்த்திருந்தது. எனக்குத்தான் இதைப்பார்த்ததும் புகைப்படங்கள் எடுக்க ஆசை வருமே. அதன்படி அதையெல்லாம் எடுத்ததும் இந்தப்பாடல் (மலர்களின் ராஜா) எப்போதோ சிலோன் வானொலியில் அடிக்கடி கேட்டு ரசித்ததுதான். (கருப்பு வெள்ளை படந்தான்) மனதுக்குள் ஒலித்துக் கொண்டேயிருந்தது. உடனே பாடல், மற்றும் இந்தப் படத்தைப் பற்றிய விபரம் அறிய கூகுளில் முயன்றேன். அங்கு கிடைத்ததை பதிவாகவும் பதிந்திருக்கிறேன். இந்தப்பாடலில் இறுதி வரிகள் நம்தேசம் சம்பந்தபட்டதாக வருகிறது. படம் பார்த்தால்,அந்த வரிகளுக்கு என்ன சம்பந்தம் என்பது புரியுமோ என்னவோ..! எனக்கு இந்த பாடல் காட்சிகள் அன்றி பாடலை முழுதாக கேட்க பிடித்திருந்தது. (ஆனாலும், பாடலை காட்சிகளுடன் கீழே பதிவின் கடைசியில் பகிர்ந்திருக்கிறேன். அனைவரும் கேட்டு ரசிக்கவும்.) அதனால் இங்கு பகிர்கிறேன். நீங்களும் இதை ஏற்கனவே கேட்டிருப்பீர்களோ என்னவோ..! ஒருவேளை நம் ஸ்ரீராம் சகோதரர் கண்டிப்பாக கேட்டு ரசித்ததிருப்பார் என நினைக்(நம்பு)கிறேன்.
இதில் தேசிய கொடிப்படம் மட்டும் கூகுளிலிருந்துதான் (பாடல், அதன் விபரங்களுக்கும் கூகுளுக்கு நன்றி. ) எடுத்தேன் மற்றபடி நான் மொட்டை மாடி தோட்டத்தில் எடுத்த அழகான மலர்களின் (சில படங்கள் என் ரசனைக்கேற்ப ஏற்கனவே என் கைப்பேசியில் எடுத்ததையும் சேர்த்திருக்கிறேன் . ) படங்களுக்குப் பொருத்தமாக இந்தப் பாடல் வரிகளை இணைத்து ஒரு புது முயற்சியாக இந்தப்பதிவு.
மலர்களின் ராஜா
அழகிய ரோஜா

மலர்களின் ராஜா
முதல் வரியைப் படிக்க ஆரம்பித்தபோதே பாடல் மனதில் ஒலிக்க ஆரம்பித்து விட்டது. அவர்கள் ஒலிபரப்பும்போது கேட்பேனே தவிர, தேடிக் கேட்டதில்லை. அவ்வளவு பிரியம் அந்தப் பாடலில் இல்லை.
ReplyDeleteஆனால் பாவம் அந்த தனசேகர் என்று நினைத்துக் கொள்வேன். ஒரு பாடல் பாடியதும் அதுவும் ஓரளவு பிரபலம் ஆனதும் அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்து பிஸியாவோம் என்று நினைத்திருப்பார்.
கொஞ்சம் ஏ எம் ராஜா போல இருக்கும் இவர் குரல்.
வணக்கம் சகோதரரே
Deleteபதிவுக்கு தங்களின் உடனடி அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோதரரே.
முதல் வரியை படித்ததும் உங்களுக்கும் இந்தப் பாடல் ஒலிக்க ஆரம்பித்து விட்டதா? நீங்களும் பல பாடல்களை ரசித்து கேட்பவராயிற்றே..! அதனால்தான் பதிவில் குறிப்பிட்டேன். நானும் அப்போது இலங்கை வானொலியில் அடிக்கடி கேட்டிருக்கிறேன். பாடியவர் யாரென்று கூட தெரியாது. இப்போதுதான் கூகுளில் சென்று படம் பற்றிய விபரங்களை சேகரித்தேன்.
ஆம் நீங்கள் சொல்வது போல் ஏ. எம் ராஜாவின் சாயல் இவரது குரலில் உள்ளது. ஏனோ, சினிமாவில் புகழ் பெறவில்லை. ஆனால், இவர் தனிப்பட்ட பாடல்கள் நிறைய பாடியுள்ளார் என நினைக்கிறேன். கூடவே பாடும் மல்லிகா அவர்களும் நிறைய தனிப்பட்ட பக்தி பாடல்கள் பாடியுள்ளார். இருவரும் இலங்கை புகழ் பாடகர்களோ என்னவோ..? எதற்கும் அதிர்ஷ்டம் என்பதும் உடன் வர வேண்டுமில்லையா? அந்த புது முக இசையமைப்பாளரின் இசையும் நன்றாக உள்ளது ஆனால் அதிர்ஷ்டம் என்ற காற்று கூடவே வீச வேண்டும். மனிதர்களாகிய நமக்கு ஒவ்வொருவருக்கும் பன்முக திறமைகள் உள்ளன. எதில் எந்த முகம் ஒளி வீச வேண்டுமென்பதை நிர்ணயப்பவன் இறைவன் அல்லவா..? தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கொஞ்சம் ஏ எம் ராஜா போல இருக்கும் இவர் குரல்.//
Deleteஎனக்கும் தோன்றியது ஸ்ரீராம்.
கீதா
நான் சிறு வயதிலேயே இந்த பாடல் கேட்டு இருக்கிறேன் கீதா.
Deleteபூக்களின் படங்கள் அழகு. நீங்கள் இருப்பது அபார்ட்மெண்ட் வீடா? தனிவீடா? மொட்டை மாடியில் தோட்டம் வைத்திருப்பதால் அபார்ட்மெண்ட் என்றே நினைக்கிறேன்! பூக்களின் படங்களுக்கேற்ற வகையில் பாடல் வரிகளை உபயோகித்துக் கொண்டது சிறப்பு.
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.
என் மகன் இருப்பது அப்பார்ட்மெண்டில்தான். ஒயர்கள் தடுக்கி விட்டால் கஷ்டமென நான் அவ்வளவாக மொட்டை மாடிக்குப் போவதில்லை. (எப்போதாவது வாக்கிங் செல்வேன்.) அன்று துணிகளை காயப் போட சென்ற போது பூந்திருந்த அந்த மாடித்தோட்டப் பூக்களை ரசித்தேன்.
மலர்களின் படங்களுக்கேற்ற பாடல் வரிகளை ரசித்தமைக்கு மிக்க மகிழ்வுடனான நன்றி.
பதிவு போட்டு மாதங்கள் ஆகி விட்டதேயென என் மனதில் தோன்றியவற்றைக் கொண்டு பதிவிட்டேன். இன்னமும் உங்களைத் தவிர எவரையுமே காணவில்லை. வரும் போது வரட்டும். உங்களின் அன்பான வருகைக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வேதங்கள் ஓதி வளர்த்திடும் பேதம்....
ReplyDeleteஇந்த வரியைப் படித்ததும்,
ஓ.. அப்போதேவா? அதுவும் பாடலிலேயா? என்று மனதில் ஒரு ஆயாசம் எழுந்தது.
வணக்கம் சகோதரரே
Deleteதங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.
எனக்கும் அந்த வரியைப் பார்த்ததும் வியப்பாக த்தான் இருந்தது. இத்தனைக்கும் 1973 ன் காலகட்டமிது. பாடல் எழுதியவரின் மனநிலை அதுவோ என்னவோ..! பாரத வீரரின் என்ற வரிகளுக்கும் டூயட் பாடலுக்கும் என்ன சம்பந்தமென மண்டை காய்கிறது.. :)) உங்களைப் போல இந்தக் கைப் பேசியில் என்னால், நிறைய விபரங்களை தேடவும் முடியவில்லை.
தங்கள் கருத்துக்களுக்கு நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இப்பாடலின் வரிகளை படிக்கும் போதே எங்கோ எப்போதோ கேட்டு ரசித்த நினைவு உங்களுக்கும் வருமென நினைக்கிறேன். //
ReplyDeletehஹாஹாஹாஹா....கமலாக்கா, நான் ரொம்ப மோசம். ம்ஹூம் என்ன பாட்டுன்னே தெரியலை.
பாட்டு கேட்டதும் கேட்டிருக்கிறேனே என்று சொல்லிவிடுகிறேன்!!!!
கீதா
வணக்கம் சகோதரி
Deleteதங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.
அப்போது இலங்கை வானொலியில் தடையேதுமின்றி பாடல்கள் வந்த வண்ணமிருக்கும். அதன் மூலம்தான் இந்த பாடல்கள் நமக்கு அறிமுகம். வேறு பொழுது போக்கு கள் கை கூடி வராத காலம் அப்போதையது. ஒவ்வொரு வீட்டிலும் ரேடியோ இருப்பதே பெருமையாகவும் கருதப்பட்ட காலம் வேறு.
இப்போது கேட்டீர்களா ? தங்களின் பல வேலைகளின் நடுவில் வந்து பதிவை ரசித்து படங்களையும் ரசித்து பல கருத்துக்கள் தந்திருப்பதற்கு மிக்க மகிழ்வடைகிறேன் சகோதரி. மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்
வள்ளி தெய்வயானை படம் பெயர் ஆனால் பாட்டு என்னவோ வேறு போல இருக்கிறதே!
ReplyDeleteவேதங்கள் ஓதி வளர்த்திடும் பேதம், அதை வென்றிட
வேண்டும் தேசிய கீதம்..
அட வரிகள் சூப்பர். எல்லாரையும் இணைக்கும் ஒரே கீதம் தேசிய கீதம்னு சொல்கிறார் போலும் பாடல் எழுதியவர்.
ஆனால் மொழி வாரியாகவும் பேதம் வருதே....
வரி நல்லாருக்கு. இல்லையா அக்கா?
கீதா
எழுதியவருக்கு ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் ஏதோ ஒரு வெறுப்பு .....அதைப் பாடலில் அப்படியே கொண்டு வருகிறார். பேதங்களுக்குப் பல காரணங்கள் இருக்க இதை மட்டும் குறிப்பிடுவானேன்!?
Deleteகீதா
வணக்கம் சகோதரி
Deleteதங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி
ஆம். படத்தின் பெயருக்கும், பாட்டிற்கு சம்பந்தமில்லைதான். ஆனால் திரைப்பட கதையில் சம்பந்தம் இருக்கலாம்.
/வேதங்கள் ஓதி வளர்த்திடும் பேதம், அதை வென்றிட
வேண்டும் தேசிய கீதம்../
எனக்கும் வியப்பை அளித்தது இந்த வரிகள்.
/எழுதியவருக்கு ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் ஏதோ ஒரு வெறுப்பு .....அதைப் பாடலில் அப்படியே கொண்டு வருகிறார். பேதங்களுக்குப் பல காரணங்கள் இருக்க இதை மட்டும் குறிப்பிடுவானேன்!/
என்னவோ அவருக்கு வேதங்களை கண்டால் மட்டும் பேதங்கள் தோன்றியுள்ளது போலும்..
ஆனாலும் இந்தப் பாடல் அப்போது ஒரளவிற்கு பிரபலமாகியிருக்கிறது.
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வரிகளுக்குச் சில படங்கள் ரொம்பவே பொருந்திப் போகின்றன. படங்கள் எல்லாம் ரொம்ப அழகா இருக்கு
ReplyDeleteமாடியிலும் மாதுளை!!!!! பரவால்லையே அவங்க இப்படி ரொம்ப உழைத்து மாடித்தோட்டம் போட்டு நல்ல விளைச்சலும் வருதே. சூப்பரா இருக்கு.
கீதா
வணக்கம் சகோதரி
Deleteதங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.
படங்களையும், அவற்றிக்கேற்ற பாடலின் வாசகங்களையும் ரசித்தமைக்கு மிக்க நன்றி சகோதரி.
ஆம் மாடியில் அதுவும் தொட்டியில் மாதுளை, எலுமி பழங்களையும் கண்டதும் நானும் அப்படித்தான் நினைத்தேன். அதற்கு தினசரி பராமரிப்பு செய்ய வேண்டும். ஆனால், விளைச்சல் அதிகமாக வருவதற்கு இன்னமும் உழைப்பு வேண்டும். பறவைகள், அணில் போன்றவற்றிலிருந்து செடிகளை காப்பாற்ற வேண்டும். கஸ்டந்தான்...! பதிவை ரசித்தமைக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தனசேகர் - மல்லிகா. பாடகர்கள் கேட்டதில்லை பெயர்கள்.
ReplyDeleteதனசேகர் அவர்களின் குரல் கொஞ்சம் ஏ எம் ராஜா போல இருக்கு இல்லையாக்கா? மல்லிகா அவர்களின் குரலும் நல்லாருக்கு. வேறு என்ன பாடல்கள் பாடியிருக்கிறாரோ?
கீதா
வணக்கம் சகோதரி
Deleteதங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.
ஆம். இந்தப் பாடலில் இருவரின் குரல்களும் நன்றாகத்தான் இருக்கிறது. திரையுலகம் இவர்களை ஊக்கப்படுத்தி, பயன்படுத்தியிருந்தால் இவர்களும் நல்ல புகழை அடைந்திருப்பார்கள்.
இருவருமே பல பாடல்களை பாடி யுள்ளனர் என கூகுளிட்டு பார்த்ததில் தெரிந்தது. பக்திப் பாடலாக மல்லிகா அவர்கள் பாடிய தனிப்பாடல் ஒன்று கேட்டேன். நன்றாக இருந்தது. பிறவற்றையும் கேட்க வேண்டும். தங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பதிவை வாசித்தபோது,இது நீங்கள் எழுதியிருக்கும் கவிதை என்றே நினைத்தேன். கவிதைகள் படிப்பது குறைவு (மரபுக் கவிதைகள் தவிர). திரைப் படப் பாடல் என்றே நினைவுல்லை. காணொளி கேட்ட பிறகுதான் நிறையத் தடவை கேட்டிருப்பதே மனதில் உதித்தது
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.
கவிதை வடிவில்தான் அந்தப்பாடலும், அமைந்துள்ளது. நீங்கள் பாடலை முன்பே பல தடவைகள் கேட்டிருப்பது குறித்து மகிழ்ச்சி. அப்போதெல்லாம் வானொலியில் தானே நம் பொழுது போக்குகள். இலங்கை வானொலியில் அடிக்கடி நானும் கேட்டுள்ளேன். இப்போதுதான் பாடலுடன் முழு வரிகள் அறிந்தேன். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அழகிய ரோஜா மலர்களின் ராஜாதான். ஆனாலும் ரோஜா என்பது பாரத்த்தைச் சார்ந்தது இல்லை.
ReplyDeleteஇந்த மண்ணுக்கான பூ, தாமரை, அல்லி, மல்லிகை போன்ற பலவும். அதிலும் தாமரைதான் உயர்ந்தது என நான் நினைக்கிறேன்.
வணக்கம் சகோதரரே
Deleteதங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.
/இந்த மண்ணுக்கான பூ, தாமரை, அல்லி, மல்லிகை போன்ற பலவும். அதிலும் தாமரைதான் உயர்ந்தது என நான் நினைக்கிறேன்./
நம் தேசிய பூவும் அதுதானே..! தாமரை திருமகளின் அம்சம். ஆக பாரத தேவியின் ஆசனம்/ இருக்கை. அழகாக சொல்லியுள்ளீர்கள். .தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மாடியில்இருக்கும் பூக்கள் அழகு. என்னை எலுமியும் (கொழுமிச்சை) மாதுளையும் கவர்ந்தன
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி. மாடியில் பயிரிட்டிருக்கம் மலர்கள் அனைத்துமே நன்றாக இருந்தன. தொட்டியில் வளர்ந்த மரங்கள் ஆச்சரியப்பட வைத்தன. மரம் பெரிதான பின் வேறு பெரிய தொட்டிக்கு மாற்றுவார்கள் என நினைக்கிறேன். அவர்களுக்கு பலனுள்ளதாக எலுமி பழங்களை பறித்து பயனடைந்தார்களோ என்னவோ தெரியவில்லை. ஆனால், அவர்களின் தோட்டக்கலை ஆர்வத்தை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்.
தங்களின் கருத்துக்களுக்கு நான் பதில் கருத்துக்கள் தர தாமதமாகி விட்டது. மன்னிக்கவும். நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இனிமையான பாடலுக்கு அழகான படங்களை துணையாக்கி விட்டீர்கள்! பேஷ் பேஷ் ரொம்ப நன்னாயிருக்கு!
ReplyDeleteவணக்கம் சகோதரி
Deleteதங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.
பதிவை ரசித்து தந்த உங்களின் ஊக்கமிகு கருத்துரை கண்டு மகிழ்வடைந்தேன். மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இனிமையான பாடலும், மாடித்தோட்ட படங்களும் அழகு.
ReplyDeleteமாடியில் இயற்கை உரப் பானை வைத்து இருக்கிறார்.
அதிலிருந்து உரம் செடிகளுக்கு போடுவார் என நினைக்கிறேன்.
படங்களும், அதற்கு தேர்வு செய்த வரிகளும் அருமை.
நான் பல வேலைகளால் இந்த பதிவை பார்க்க தவறி இருக்கிறேன். இன்று பார்த்தேன்.
பேத்தி நலமா?