அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.
இன்று புதிதாக சற்று நேரத்தில் பிறக்கப் போகும் புத்தாண்டு நல்ல பலன்களை உலக மக்கள் அனைவருக்கும் தர வேண்டுமாய் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
சென்ற ஆண்டு முழுவதும் கலக்கங்கள், வருந்தங்கள், இழப்புக்கள் என சந்தித்து விட்டோம். ஒவ்வொரு நொடிகளும் இனம்புரியாத பயங்கள் வேறு.... இப்போது இந்த ஆண்டு புதிதாக பிறந்துதிக்கும் நொடி அமைதியானதாக இனிய பொழுதாக பிற(பிறந்திரு)க்கும் என நம்புகிறோம். ஆண்டவன் உலக வாழ் மக்களின் அனைத்து உள்ளங்களிலும் அந்த நம்பிக்கை வேரை பரப்பி ஆணிவேராக அவனருளையும் அமையச்செய்து எல்லோர் மனதிலும் சந்தோஷ கனிகளை மட்டும் காய்க்க விட வேண்டுமென அனைவரும் கூட்டுப் பிரார்த்தனையாக பிரார்த்தித்துக் கொள்வோம். 🙏🙏🙏🙏🙏.
இது பழைய பாடல்தான். ஆனால் இதன் வரிகளின் அர்த்தங்கள் எக்காலத்திற்கும் பொருத்தமானது.
உதாரணமாக....
திருமதி வாணி ஜெயராமின் இனிமையான குரலில் வாழ்வின் நிதர்சனத்தை அழகாய் காட்டும் வரிகள்....
நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க : அதை நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க.: வேளை பிறக்குமென்று நம்பிக்கை கொள்க: எந்த வேதனையும் மாறும் மேகத்தை போல....
இந்த வரிகள் இ(எ)ப்போதைய சூழலுக்கும் உகந்தவை. எனவே நம்புவோம்... நன்றி. 👍. 👍. 👍.
பி. கு.. இந்தப் பதிவு மிகச் சின்னதாக முடித்து விட்டதால், (புது வருடத்தன்று எவரையும் சிரமபடுத்த வேண்டாமென்று நல்ல எண்ணம்தான்... :) ) இதற்கு முந்தைய பதிவை படிக்க தவற விட்டவர்கள் படிக்கலாம்....... படித்து பார்த்தவர்களும் மறுபடி படிப்பதில் தவறில்லை... :))
இதுவும் இந்த புத்தாண்டில் ஒரு புது விதமான விளம்பரந்தான்..
வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்....:)) உண்மைதானே...!
நன்றி...