Showing posts with label பதிவு. Show all posts
Showing posts with label பதிவு. Show all posts

Thursday, April 23, 2015

இடை (வெளி) வேளை…

காலங்காலமாய்  இந்தக் கதைகள்  என்பது நம்மிடையே ஒன்றி விட்டது. கதைகள் சொல்வதும் கேட்பதும் படிப்பதுமாய், நம் அன்றாட பணிகளின் நடுவே  முக்கியத்துவம்  வாய்ந்ததாய் கதைகளும் காலூன்றி கொண்டு விட்டன. ஒரு குழந்தை வளர்ந்து வரும் போது அந்த வீட்டின் பெரியவர்கள்( தாத்தாக்கள், பாட்டிகள் ) தாங்கள் படித்த, பார்த்த. கேட்ட கதைகளை அப்படியேவோ, இல்லை சற்று புனைந்தோ, தம் வாரிசுகளின் மனதில் பதிய வைத்தனர்.( நான் அந்த காலத்தை சொல்லுகிறேன்.) குழந்தைகளின் அறிவை பற்றிய கதைகள், நீதிக்கதைகள், ராஜா ராணிக் கதைகள், நகைச்சுவைக் கதைகள், விலங்கு, பறவையினத்தின் ஒற்றுமை சார்ந்த கதைகள், வாழ்வின் தத்துவக் கதைகள், ஏன் சமயத்தில், நம் விருப்பத்திற்காக பேய் கதைகள், என்று எத்தனையோ கதைகளுடன் நம்மையும் வளர்த்து வந்தனர்.

பள்ளி பாடங்களுடன் இந்தக் கதைகள் அத்தனையையும் தினமும் நம் மனது அசை போட்டாலும், அவ்வப்போது பேய் கதைகள் ஒரிடத்தை நிரந்தரமாக பிடித்துக் கொண்டு இரவு பகலாக மனதில் உலா வந்தபடியே இருக்கும். அதுவும் நடுநிசி  12 மணி என்று ௬ட பாராது நம்மை தட்டி எழுப்பிஉலாவ போகலாம் வருகிறாயா? ‘என்று கேட்டுத் தொலைக்கும். நாமும் உள்ளுக்குள் பயந்து நடுங்கினாலும், மறுநாள் காலை நம் பள்ளி தோழர், தோழிகளுக்கிடையே, நம் வீரத்தை வெளிக்காட்டும் விருப்புடன் அந்த கேட்ட கதைகளுக்கு நடுவே நிறைய விசயங்களை உட்புகுத்தி, ( நமக்கும் பிறந்தவுடனே இந்த புனையும் திறன் அதுவாக வந்து விடுமல்லவா ?)  முதல்நாள் இரவு பேயை கண்டதாகவும், அதனிடம் பேசியதாகவும், அது தன்னை எழுப்பியதாகவும், “கதைகளைகட்டி விடுவோம். இப்படியே இந்த மாதிரி பெரியவர்கள் நமக்கு சொன்ன எல்லா கதைகளும் கை கால் முளைத்து  தன்னை தானே பிறருக்கு பரிமாறிக் கொண்டு வளர்ந்து, வேகமாக பரவி ஒருநாள் கதை சொன்ன நம் வீட்டு பெரியவர்களுக்கே நம் மூலமாகவே வந்து சாரும்போது அவர்கள் அந்தக்கதைகேட்டு பெரும் ஆச்சரியபடுவார்கள். (இப்படி ஒரு கதை உண்டா என்று?) வாழ்வே நித்தமும் ஒரு கதை என்று வாழ்ந்து அனுபவித்திருந்த அவர்களுக்கா புரியாது.. ஆனாலும் நமக்காக திகைப்பை வெளிப்படுத்திநம் திறமையை, நம்முள் ஒளிந்திருக்கும்  கற்பனாசக்தியை வெளிக்கொணர்ந்த பெருமையோடு பாராட்டும் உத்தி அது.

அவர்கள் காலத்தில் நாடகங்கள், தெருக்௬த்து இவைகளின் மூலமும் நல்ல கதைகளை கேட்டு பார்த்து ரசித்தாக சொல்லக் கேட்டு  வளர்ந்தோம். மெளன  படங்கள் என்று வெறும் காட்சிகளை மட்டும் படமெடுத்து திரையிலிட்டு ஓடவிட்டு, திரைக்கு முன் அதன் வசனத்தை சொல்லி இருவர் விளக்க, அதையும் கதைகளுக்காக ரசித்து பார்த்தனர் . காலம் முன்னேற மேம்பட்டு மெளனப் படங்கள் பேசும் படங்களாக மாறி திரைக்கதையை வளர்த்து வசனங்களை அதனூடேயே இணைத்து ரசிகத் தன்மையை ௬ட்டின. பின் நாமும் வளர்ந்ததும்  தரமான கதைகள் என புத்தகங்கள் பலவும் படித்து ரசித்து பரிமாறிக் கொண்டோம். திரைப்படங்களும் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நம் முன் காட்சியாக்கி காசுடன் அவையும் வளர்ந்தன. எத்தனையோ கடமைகள் நம் கையை இறுக பிடித்திருந்தாலும், ஒரே மாதிரி அடித்துச்செல்லும்  மன அலைகளின் நடுவே, வித்தியாச மனநிலை வேண்டி கதைகளை விரும்பினோம், கலையாக வளர்த்தோம்,  பாடமாக மதித்தோம், வாழ்வாகவும் ஏற்றோம், புகழுக்காக  அரவணைத்தோம், பொன்னெவும் போற்றினோம். இப்படியாக அது நம் வாழ்வில் இன்று அத்தியாவசியமான ஒன்றாகி விட்டது.

தலைப்புக்கும் இத்தனை கதைகளுக்கும் இப்போ என்ன சம்பந்தம்என நீங்கள் குழம்புவது  கொஞ்சம் தெளிவாகவே எனக்குப் புரிகிறது, சொல்கிறேன்.  (“நாசமாபோச்சு! இனிமேதான் சொல்லவே ஆரம்பிக்க போறியா?” முணுமுணுக்கும் சத்தம்  கேட்கிறது ) யார் அது?  யாருங்க அது? ஏன் இப்படி இடையிலே வந்து ஒரு பதிவை எழுத விடாமே  ( யாராயிருந்தா என்ன? சீக்கரம் முடித்து வை.! பொறுமைபோவதற்குள்.! சத்தத்தின் சீற்றம் சற்றே பெரிதாகிறது.  )

சரி சரி விசயத்துக்கு வருகிறேன்..!  நாம் இன்றும் எந்த ஒரு திரைப்படம் கண்டு களிக்க திரையரங்கிற்கு போனாலும் படம் முடிவதற்குள் நடுவில் நம்மை பிடித்து வைத்திருக்கும் கதையோட்டத்தின் பிடியிலிருந்து சிறிது விச்ராந்தியாக நம் மனதை திசை திருப்ப, ஒரு பதினைந்து நிமிடங்களைஇடை வேளைஎன்ற பெயருடன் ஒதுக்குவார்கள்அந்த இடைவெளியில் கண்ணுக்கும். மனதுக்கும் ஓய்வு தந்து, வாய்க்கும் வயிற்றுக்கும் வேலை தந்து அதன் பின் நம் இருக்கைக்கு திரும்பி  திரையில் கவனம் செலுத்துவோம். (சிலர் கதையின் கொடுமையில் இருந்து தப்பிக்க அந்த இடைவெளியை பயன்படுத்தி வெளியேறி விடுவர். அது வேறு விஷயம். அவரவர் மன நிலையை பொறுத்த விஷயம்.) அந்த காலத்தில் இடைவேளையில் விளம்பர படங்கள், அடுத்து அந்த திரையரங்கில் வெளிவரப் போகும்  படங்களின் சில காட்சிகளை பாடலுடன், இதயம் அதிரும் ஒலியோடு சண்டை காட்சிகளின் சில பகுதிகள் என திரையிடுவார்கள். அதையும் விருப்பம் இருப்பவர்கள் அமர்ந்து  ரசிப்பார்கள். இதெல்லாம் ஒரு மாறுதலை ரசிக்கும் சமயத்திலும் வரும் மாறுதல்தான்இப்போதெல்லாம் அந்த முறை இல்லையென நினைக்கிறேன்இப்படி திரைப்படங்கள் நல்ல கதைகள் என்று மெனக்கிட்டு  கொண்டிருந்த காலம் போய். மனதின் திசை மாற்றத்திற்காக  டி.விகணிணி  என புது புது பொழுது  போகும் அம்சங்கள் வந்து விட்டன.

(விசயத்துக்கு வாம்மா! சும்மா வளவளன்னு கையில் மவுஸை ரம்பமாக நினைத்துக் கொண்டு அறுக்காதே... மறுபடியும் முணுமுணுப்பு...)

அட.! கொஞ்சம் இருங்க.!  சொல்ல வந்ததை  இதோ.! சொல்லி  முடித்து விடுகிறேன்மேலே சொன்ன மாதிரி ஒரு மாறுதலுக்கு நிறுத்தி, இடைவேளையை பதிய வைத்து (எப்படியோ!  நானும் ஒரு  பதிவு போட்ட மாதிரி ஆச்சில்லையா ?) இடைவேளை முடிந்தவுடன் நாளை தொடர்கிறேன். “இடைவேளைநேரத்தை அதிகரித்து விட்டால்இடைவெளியும்இடம் பிடித்துவிடுமென்பதால், நாளையே தொடங்கி விரைவில்சுபம்போட்டு விடுவேன். (அட! என்ன கஷ்டகாலம்டா.! என்ன பதிவு இது? இடைவேளை, இடைவெளி என்று, இப்படி பெரிசா எழுதி பொறுமையெல்லாம் சோதிச்சி கதை எழுதி கிழித்ததில் இவங்களுக்கு நிஜமாவே முத்தி போச்சு போலே! இவங்களுக்கு முத்தினது போறாதுன்னு நம்மையும் அந்த கேஸ்லே சேர்த்துடுவாங்கன்னு நினைக்கிறேன். குரல் பலமாக ஒலித்தது.)

ஓ இவங்களா? இப்பத்தான் யாருன்னு புரிஞ்சது.. சரிங்க  இதோ முடிச்சிடுறேன்.   அந்த நால்வரின் மனதைதான் இன்று நிறுத்தி நாளை  தொடருகிறேன் என்றேன். இடை வேளையின் இடைவெளியில் கண்ணுக்கு குளிர்ச்சியாக விளம்பர படத்துக்கு பதிலாக  இதைப் பாருங்களேன். நன்றி ( போ!! இது வேறேயா….? )










படங்கள்: நன்றி கூகுள்

Friday, May 30, 2014

தந்தைக்கு ஒரு குறுந்தகடு.. (காணொளி)

அன்பு தந்தையே! எங்களிடமிருந்து உங்களையும், எங்கள் ஆருயிர் அன்னையையும்  கால(ன்)ம் பிரித்திருந்தும் உங்கள் இருவரின் அருகாமையையும் நான் எப்போதும் உணர்ந்து கொண்டேதான் இ்ருக்கிறேன். (என்னையும், என் குடும்பத்தை விட்டு கால(ன்)ம் பிரிக்கும் வரை) உங்களைப் பற்றி, உங்களது நல்ல குணங்களை பற்றி என் வாரிசுக்களுக்கு நிறையவே சொல்லி தாத்தா மாதிரி நல்ல குணங்களுடன் இருக்க வேண்டுமென்று, அன்புடன்தான் வளர்த்திருக்கிறேன். அப்படியே அவர்களும் வளர்ந்து வாழ்வில் நல்ல பெயருடன் தன் காலுன்றி நிற்க ஆரம்பித்து விட்டனர். ஆண்டவன் அவர்களுக்கு சிறப்பான வாழ்க்கையையும் தந்து சிறக்கச் செய்ய வேண்டுமென நான் தினமும் வேண்டிக் கொள்கிறேன். நீங்களும் உங்களது ஆசிர்வாதத்தை தினமும் எங்கள் அனைவருக்கும் தந்து கொண்டுதான் இருப்பீர்கள் எனவும் நம்புகிறேன்.

             நான் இதற்கு முன் அன்னைக்கு ஒரு மடல் எழுதினேன். அதையும் நீங்கள் பார்த்து படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். இதை நான் ஏன் சொல்கிறேனென்றால், என் அன்னையும் தங்களுடன்தான் இருப்பார்கள் என்ற நம்பிக்கையில்தான்! அன்னையும் நீங்களும் ஒருநாள் ௬ட விட்டு பிரியாமல் அன்புடனும், அனுசரணையுடனும்  வாழ்ந்ததை நாங்கள் பார்த்தவர்களாயிற்றே! அன்னையிடம்தான் நீங்கள் எத்துனை பாசமாக இருந்தீர்கள்! அன்னையும் அப்படித்தான்! உங்கள் மேல் உயிராக, உங்கள் சொல் தட்டி நடவாமல், உங்கள் பெருமைக்கு சிறிதளவும் பங்கம் விளைவிக்காது, உங்களின் உயிராக  இருந்தார்கள். மொத்தத்தில் ஒரு சிறந்த ஆதர்சன தம்பதிகளாக நீங்கள் வாழ்ந்தீர்கள்.
                    
             ஆதர்சன தம்பதி என்றதும் எனக்கு அந்தத் திரைப்படம், உங்களுக்கு மிகவும் பிடித்தமான சூரியகாந்தி திரைப்படம் நினைவுக்கு வருகிறது. அதில் நடித்த நடிகர்களின் நிறைவான நடிப்பும் அதில் வரும் “நான் என்றால்,அது அவளும், நானும்” என்ற பாடலும் தங்களை கவர்ந்ததை அடிக்கடி நினைவு ௬ர்ந்து சொல்லிக்  கொண்டேயிருப்பீர்களே! இப்போதும் அந்தப் பாடலை நான் கேட்கும் போதெல்லாம், நீங்கள் சொன்னதெல்லாம் என் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.


            அந்த  திரைப்படத்தில், தன் மனைவியுடன் ஏற்பட்ட மனத்தகராறுடன், ஆதர்சன தம்பதிகள் என பாராட்டுக்கள் பெறும் ஒரு விழாவுக்கு தன் மனைவியுடனே செல்ல வேண்டிய சூழ்நிலைக்கு உட்பட்ட கதாபாத்திரத்தில் நடிக்கும் திரு முத்துராமனின் அற்புத முகபாவங்களையும்,  தன் மனைவி  இப்படி யெல்லாம் இருந்தால் நன்றாகவிருக்கும் என்பது போல் தன் மனதின் தாக்கங்களை அவர் பாடும் பாடல் வரிகளில் புலப்படுத்தும் பாங்கையும், அந்த பாடலை திறம்பட எழுதிய கவிஞர் வாலியையும், சிறப்பாக இசையமைத்த திரு. எம்.எஸ்.வி யையும், அந்தப் பாடலை என்றுமே மறக்க இயலாதபடி மிகவும் அருமையாக பாடியிருந்த திரு. எஸ்.பி.பி யையும், நீங்கள் சொல்லி சொல்லி பாராட்டுவதை இன்றும் நான் அருகிலிருந்து கேட்பது போல் அகம் மகிழ்கிறேன். அந்த பாடலை இதோ! உங்களுக்காக குறுந்தகிடில் பதிவு செய்திருக்கிறேன். கேட்டு ரசிக்கவும்.




      இந்த “பாடலின்படி உங்கள் அம்மா என்னுடன் வாழ்ந்திருக்கிறாள். பாடலின் வரிகள் எங்களை பார்த்து இயற்றிய மாதிரி எனக்குத் தோன்றும்!” என்று நீங்கள் அம்மாவை புகழும் போது அம்மாவின்  முகத்தில் தோன்றும் பெருமிதம் கலந்த நாணத்தை சொற்களால் என்றுமே விவரிக்க இயலாது. உணமையிலேயே ஆதர்சன தம்பதி பட்டத்தை பெற ௬டியவர்கள் நீங்கள்தாம் என நாங்கள் நினைக்கிறோம். உங்களை பெற்றோராக அடைந்ததில் மகிழ்வும் பெருமையுடன் ௬டிய கர்வமும் அடைகிறோம்.
     
      எங்களுக்கு அடுத்த பிறவி என்ற ஒன்றிருந்தால், நீங்களே மறுபடியும் எங்கள் பெற்றோராக அமையும் வாய்ப்பைத் தர வேணடுமென அந்த ஆண்டவனை வேண்டிக் கொண்டு, நீங்களும் எங்கிருந்தாலும், எங்கள் நினைவாகவே இருப்பீர்கள் என்பதையும் புரிந்து கொண்டு, இந்த குறுந்தகிடை பதிந்து முடிக்கிறேன். பார்த்த விபரத்தை உங்களால் பகிர்ந்து கொள்ள இயலாவிடினும், விரைவில் கால(னின்)த்தின் உதவியுடன் தங்களிருப்பிடம் வந்து சேர்ந்த பின் பார்த்த விபரத்தை நாம் பகிர்ந்து கொள்வோம். 
                                                          அன்புடன் 
 தங்கள் வாரிசு. 

Thursday, May 15, 2014

அன்னையருக்கு ஏது தினம்!

அன்னையர் தினத்தைப் பற்றி ஏதாவது எழுத வேண்டுமென்று மனது ஆவலுடன் பரபரத்து கொண்டேயிருந்தது. என்ன எழுதுவது? என்று இருக்கிற கொஞ்ச நஞ்ச மூளைகளையும் (நம்ம வடிவேலு பாணியில்) கசக்கிக்கொண்டேயிருந்தேன். அன்னையர் தினத்தை முதலில் கண்டு பிடித்து அறிமுகபடுத்தியதை பற்றி எழுதலாமா? இல்லை! அதை முதலில் கண்டுணர்ந்து பிரபல படுத்தியதை பற்றி எழுதலாமா? அல்லது, அன்னையர் தம் பெருமைகளை மனம் உணர்த்துவதை மடை திறந்த வெள்ளமாக (அது படிப்பவர்களுக்கு தண்டனையாக இருந்தாலும், ((முதலில் படித்தால்தானே அந்த பிரச்சனை!)) கொட்டலாமா? என்று சீட்டு குலுக்கி போட்டு தேர்ந்தெடுப்பதற்குள் அன்னையர் தினம் அருகிலேயே நெருங்கி விட்டது. சரி! ஏதாவது எழுதி விடவேண்டும்! இல்லையென்றால், கடலில் உண்டாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாதிரி, அது உன்னை எளிதில் கடந்து சென்று விடுமென்று மனமானது எச்சரிக்க, கவலை மேக மூட்டமாக சூழ்ந்து கொண்டது.

            

       மழை வந்து செழிப்பாக்கும்! என்று எதிர்பார்க்கும் மனிதர்களை, வேண்டுமானால், காற்றழுத்த மண்டலம் எப்போதும் ஏமாற்றி விட்டு சுலபமாக கடந்து சென்று விடலாம்! ஏனென்றால், அதன் வாடிக்கையும் வேடிக்கையும் எப்போதுமே அப்படித்தான்! ஆனால் அதுவும், நான் ஒரு விசயத்தை பற்றி எழுதி பதிவுலகில் பெயர் (நல்ல) வாங்க வேணடுமென்பதும், ஒன்றாகி விடுமா?

      

      நினைவாற்றல்களை நிறையவே கொடு!..... என்று ஆண்டவனிடம் கொஞ்சம் அதிகமாகவே வேண்டிக்கொண்டு எழுத ஆரம்பித்தேன். அன்னையர் தினத்தை பற்றி ஏதாவது நல்ல நல்ல தகவல்கள், புதிய பாணியில் எழுத வேண்டும். நீ ஏதாவது உதவி செய்யேன் என்று மகனிடம் கேட்க நினைக்கும் போது, என் கருத்தை உணர்ந்து கொண்டவனாய், “நீயே! ஒரு அன்னை தானே! அம்மா! என் உதவி எல்லாம் உனக்கு எதுக்கு?” என்ற பதில் வந்தது!

               

      சரி படிப்பவர்களின் (படித்தால்…) தலையெழுத்தை நாம் மாற்ற முடியாது! வருவதை அனைவரும் அனுபவித்து தானே ஆக வேண்டுமென்ற முடிவுக்கு வந்து நான் எழுத துவங்கும் போது, எனக்கு ஒரு தொலைபேசி வந்தது.    

            

      “வரும் ஞாயிறன்று அன்னையர் தினம் அம்மா! அதனால் சனி ஞாயிறு இரு தினங்களை உன்னுடன் கழிக்க ஆவலாக இருக்கிறது. அதனால் வெள்ளி இரவு கிளம்பி நானும், உன் மாப்பள்ளையும் அங்கு வருகிறோம்! என்ன சொல்கிறாய்?” என்றாள் என் மகள்.

      

      “சொல்ல என்ன இருக்கிறது? தாரளமாக புறப்பட்டு வா! என்றேன். சந்தோசத்தில் எனக்கு வார்த்தைகளே வரவில்லை! இரு தினங்களும் அவர்களை வரவேற்பதிலும் பொழுதை அவர்களுடன் கழிப்பதிலேயுமே சந்தோசமாக கடந்து விட்டது. அதற்கு பிறகு என்ன? அன்னையர் தினம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கடந்து விட்டது. (என்னை பார்த்து ஏளனம் செய்தவாறே!)     

         

      அன்னையர் தினத்தைப் பற்றி காலம் தாழ்த்தி எழுதினாலும், ஒன்று மட்டும் சொல்லிச் செல்கிறேன், அன்னை என்ற வார்த்தையின் பொருளை அன்று உணர்ந்தேன். அன்னையாக வாழும் அத்தனை தினங்களும் சிறப்பைத்தரும் அன்னையர் தினங்கள்தான். அன்னையருக்கு ஏது அன்னையர் தினம்….(தனியாக) எப்படி? என் கருத்து சரிதானே?

Tuesday, April 29, 2014

பதிவை பார்த்து வந்ததால் பறந்து வந்தமர்ந்த பதிவு...




பார் என்று சொன்னதினால்,
பழனி முருகனை பார்க்க போனேன்!
பார் புகழ ஆகா விடினும், என்
" பா " விரும்பும் பண்புள்ளங்களை,
பரிசாக  " தாவென " வேண்டலாமென,
பரபரக்கும் உள்ளத்துடன்,
பறந்து ஓடி தரிசித்தேன் .
             வந்த நோக்கம் அறிந்தந்த
வண்ணமயிலழகன் வாசல் தனில்
வந்தமர்ந்தபடி, வாய் நிறைய சிரிப்புடன்,
வகையாய் பேச ஆரம்பித்தான் .
          இணையம் பார்த்ததின் விளைவால்,
இவ்விருண்ட வேளையென்றும் பாராமல்,
நீண்ட தொலைவென்றும் எண்ணாமல்,
நீ இங்கு வந்ததின் காரணமறிவேன் .
              “ என்னிடம் எதுவுமில்லை ! “என நான்
எடுத்தியம்பியதை ,எழுதிவிட்ட, அந்த
பண்புள்ளத்தின்  பகிர்வுதனை,  நீ
பலகாலம்  படித்தாலும், மனப்
பக்குவமடைய போவதில்லை!
பாதி இரவென்றும் பாராமல்  ,
பரிசை வேண்டி பகர வந்தாய் !
     மனதிலுள்ளதை, படித்து விட்டானே! இந்த
மால் மருகன் என்ற மயக்கத்தில்,
மமதையுடன் நான் இங்கு வரவில்லை! அதை
மரியாதையுடன் தெரிவித்து விரைய வேண்டி,
                இல்லை! முருகா!   
விபரம் அறிய விரைந்து வந்தேன். என்
விதியால் அதை உணர்ந்து கொண்டேன் .
வினைகள் அகற்றும் உன்னருளால், என்
விதியை மாற்றக் ௯டாதா ?
          தருமியின் தவத்தை கண்டுணர்ந்து,
தவித்த மனதுடன் உன் தந்தை வந்துதவ,
தருமியின் தத்தெடுத்த புதல்விக்கு, அருமை
தனயன் வந்துதவக் ௯டாதா ? என்றதும்,
        அந்த, 
பாங்கான கேள்விக்கும் அவனிடம்,
பதிலேதும் வாராததால், 
பண்பட்ட உள்ளத்துடன்
பணிவாக விடை கேட்டு, பின்
படியிறங்க பாதம் வைத்தேன்.
       “ அவரவர் வினைக் கயிற்றை ,
அவரவர்தான், அறுக்க வேண்டும். உன்
நல்வினை , தீவினைக்கு
நானொன்றும்  செய்யலாகது !
காலம் கனிந்து வரும் !    
கனிவுடன் காத்திருப்பாய்! ”
     அசீரீரியாய் குரல் வந்து
அயர்வெல்லாம் களைந்தெறிய ,
பழனி முருகனை பார்த்த
பரவசத்தில் பறந்தோடி வந்து விட்டேன் .