Monday, May 7, 2018

நாகரீகத்திற்கு அா்த்தம் இல்லை - பகுதி 4

                       //''டொக்'' , ''டொக்''//
      கதவை யாரோ தட்டும் ஒசை கேட்டு கதவை திறந்தான் பிரகாஷ்...
      //// வாசலில் ரேணுகா /////

             அடேடே!!!!  ''வா ரேணுகா''  மகிழ்ச்சியுடன்  வரவேற்றான் அவன்..

        அவள் புன்னகையுடன் உள்ளே வந்து ஒரு நாற்காலியில் அமர்ந்தாள்.

       ''என்ன விஷயம்?? அதிசயமாய் வீடு தேடி வரும் அளவுக்கு'' அவன் சற்று படபடப்புடன் கேட்டான்.

       ''ஏன் வரக்௬டாதா?'' பொய் கோபத்துடன் சிணுங்கினாள் அவள்..

   ''அதற்காக சொல்லவில்லை, நாம் எப்போதும் வெளியில்தானே சந்திப்பது வழக்கம்... அதனால்தான் கேட்டேன்.." அவன் அவசரமாக மன்னிப்பு கோறும் பாவனையில் கூறினான்....

     ''வீடு தேடி வரவேண்டிய அவசியம் வந்திருக்கிறது. வந்தேன்..." அவள் அமர்த்தலாக சொல்லிவிட்டு சிரித்தாள்...

     ''தாராளமாக... இந்த வீட்டின் வாசல் கதவு மட்டுமின்றி என் இதயகதவும் உனக்காக.. உன் வரவுக்காக எப்போதும் திறந்தே இருக்கிறது... என் வீட்டில் நம்மை பற்றி கூறி அவர்கள் சம்மதத்துடனும், உன் பெற்றோர்களின் ஆசியுடனும், உன்னை இந்த வீட்டின் ராணியாக்கும் என் விருப்பத்தை உன்னிடம் எத்தனையோ முறை சொல்ல நினைத்தும், உன்னளவு எனக்கு தைரியம் இல்லாததால், சொல்ல முடியாமல் தவித்திருக்கிறேன்...

என் தாய் என்னிடம் மனம் விட்டு பேசி என்னை தட்டிக் கொடுப்பது போல் நீயும் என்னிடம் சில சமயங்களில் அன்பாக பேசி, என் மனதில் உதிக்கும் எண்ணங்களை வரவேற்றிருக்கிறாய்... அதனால் அந்த தாயன்பு  உன்னிடம் கிடைக்குமென்று ஆசையில்,  என் தாயைப் போல் நீயும் என்னை நேசித்து அன்பு காட்டுவாய் என்ற நம்பிக்கையுடனும்,  எத்தனையோ நாள் "என்னை உனக்கு பிடித்துள்ளதா?  என்னை உன் துணையாக ஏற்றுக் கொள்வாயா?" "
என்றெல்லாம் வாய் விட்டு சொல்ல நினைத்தான் பிரகாஷ். ஆனால் இதையெல்லாம் இப்போதும் சொல்ல நினைத்தும்  வார்த்தைகள் மேலெழும்பால் எப்போதும் போல் அவன் தொண்டையிலேயே வழுக்கி விழுந்தன...

      "பிரகாஷ்! என்ன எப்போதும் ஏதோ சிந்தனை செய்த வண்ணமே இருக்கிறீர்கள்?" என்ற வண்ணம் அவன் தோளை தொட்டு உலுப்பியவள், தன் கைப்பையை திறந்து ஒரு அழைப்பிதழை எடுத்து அவனிடம் ''இந்தாருங்கள்'' என்ற வண்ணம் நீட்டினாள்...

       பிரகாஷ் தன்நினைவு பெற்றவனாய் ஏதோ ஒரு பதற்றத்துடன் அதை வாங்கி பிரித்து படித்தான்...

      திருமண அழைப்பிதழ் அது... ரேணுகாவிற்கும், முன்பின் அறிமுகமில்லாத யாரோவிற்கும்..

படிப்பும் அந்தஸ்த்தும் அந்த பையனுக்கு தன்னை விட இருமடங்குகள் உயர்வாக இருப்பதை வண்ண எழுத்துக்கள் கட்டத்திற்குள் காண்பித்தன ...

      அவன் விழிகள் குத்திட்டு நின்றன அழைப்பிதழிலில்......

      தொண்டையில்  ஏதோ  ''கப்'' பென்று அடைத்துகொண்டது போன்ற உணர்வில் தடுமாறினான்....

    ''என்ன இது?'' வார்த்தைகள் தட்டு தடுமாறி வந்தன அவன் வாயிலிருந்து.....

      ''படித்து பார்த்துமா தெரியவில்லை? என் திருமண அழைப்பிதழ்..'' அவள் கேலியுடன் அலட்சியமாக மொழிந்தாள்.

       இரவின் ஆரம்பத்தில் ''ஏ.சி.'' தியேட்டர்களிலும்,  கடற்கரை மணலிலும், அவனுடன் நெருக்கமாக அமர்ந்தபடி தோளுடன் தோள் உராய அவன் செவிகளில் ''மை டியர் பிரகாஷ்.. ஐ லைக் யூ.. உங்களை கணவராக அடைய கொடுத்து வைத்திருக்க வேண்டும்...'' என்று அவள் எத்தனையோ தடவைகள் முணுமுணுத்திருக்கிறாள்... அவளை போல் வெளிப்படையாக அவன் சொல்ல முடியாமல் அந்த முணுமுணுப்பை உண்மையென்று நம்பி எத்தனை இரவுகள் உறக்கத்திலும், விழிப்பிலுமாக, கற்பனையில் ஆகாய கோட்டைகள் எழுப்பியிருக்கிறான்.  அவையெல்லாம் கற்பனையாகவே போய்விட்டதே...

      அவன் தலையில் வானம் இடிந்து விழுந்து அவனை பூமியின் அடியில்...... அதளபாதாளத்தில் அழுத்திக்கொண்டு போவது போன்ற பிரமை ஏற்பட்டது...

       "ரேணுகா, நீ என்னை காதலித்து விட்டு வேறு ஒருவருக்கு கழுத்தை நீட்டுவதா? இது அநியாயம்... இதற்கு நீ எப்படி சம்மதித்தாய்???" பிரகாஷ் படபடப்புடன் கேட்டான்..

    "என்ன? நான்  காதலித்தேனா??  அதவும் உங்களையா?" ரேணுகா கலகலவென்று சிரித்தாள்...

    "சந்தேகமா? எத்தனையோ நாட்கள் கூறியிருக்கிறாயே??'' குரல் கணக்க கூறினான்...

  அவள் விருட்டென்று இருக்கையை விட்டு எழுந்து நின்றாள்....

     ''மிஸ்டர் பிரகாஷ்! ஒரு நல்ல நண்பர் என்று இத்தனை நாள் உங்களுடன் நான் களங்கமில்லாமல் பழகியதற்கு எனக்கு சரியான தண்டனை கொடுத்து விட்டீர்கள்.. நான் உங்களை காதலிக்கவும் இல்லை... கல்யாணம் செய்து கொள்ள போவதாகவும் கூறவும் இல்லை... அவசரபட்டு நீங்களே முடிவு செய்து கொண்டால் அதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்.. படித்தவர் பண்புள்ளவர் என்று நினைத்து  நான் நாகரீகமாக பழகியதற்கு எனக்கு இந்த வாழ்நாள் முழுவதும் வருந்தும் அளவிற்கு செய்து விட்டீர்கள்.. இத்துடன் நமது நட்பு  முறிந்து விட்டது. இனிமேல் நாம் சந்திப்பது அநாவசியம்... என் திருமணத்திற்கு கூட உங்களை நான் எதிர்பார்க்க மாட்டேன். நான் வருகிறேன்'' என்று பொரிந்தவள், அவன் கையில் இருந்த திருமண  அழைப்பிதழை உருவிக்கொண்டு புயல் வேகத்தில் வெளியேறினாள்...

         அவன் மூச்சு விடக்௯ட சக்தியின்றி அமர்ந்திருந்தான்...

  கணவனை தவிர வேறு எவரையும் மனதால் கூட தொட்டறியாத அந்த காலத்து பெண்களுக்கு பிறக்கும் இவர்கள், இன்று கண்டவனுடன் 'காதல்' என்ற பெயரில் களியாட்டம் போட்டுவிட்டு ''அந்த'' வார்த்தையின் புனிதத்தையே கெடுக்கிறார்கள்...

   "இதற்கு பெயர் நாகரீகமாம்!!!"

     நாகரீக போர்வையில் புகுந்து கொண்டு அன்று அவன் வேலையில்லாமல் இருந்தற்காக அப்பாவும் உடன் பிறந்தவர்களும் வீண்வாதம் பேசி அவன் மனதின் வேதனையை அதிகப் படுத்தினார்கள். .

இன்று அதை போர்வையை  போர்த்திக் கொண்டு இவள் இவனிடம் காதல் வார்த்தைகளை மொழிந்துவிட்டு.. அந்த காதல் புளித்து போன நிலையில், "தந்தை சொல் மிக்க மந்திரமில்லை'' என்ற பழமொழி தவறாதபடி நடந்து கொள்ள நினைக்கிறாள்....

      கன்னிப்பெண் ஒருத்தி மிக சாதரணமாக ஒருவனிடம்,  கை கோர்த்து சிரித்துப்பேசி பெற்றோருக்கு தெரியாமல், அவனுடன் தன் மனதிற்கு பிடித்த இடமெல்லாம் சுற்றிவிட்டு பழகிவிட்டு "நாகரீகம்'' என்ற பெயரில் ஒதுங்குகிறாள்.. ஒதுக்கி விடுகிறாள்..

              '''' சே.. என்ன  நாகரீகம் ''''

         ''''நாகரீகம் என்ற இந்த வெற்று சொல்லுக்கு அர்த்தமேயில்லை....''''  அவன் மனதில் மல்லிகை மொட்டுகளாய் சிதறிய இந்த எண்ணங்களின் விளைவு கையை ஓங்கி மேஜை மேல் குத்த வைத்தது....

          மனதின் வலியோடு கைவலியும் சேர்ந்ததுதான் மிச்சம்....

 அன்று அம்மா எத்தனை உறுதியோடு துல்லியமாய் நிறுத்திப்பார்த்தது போல், பளிச்சென்று மனதில் பட்டதை சொன்னாள்...

  அவன் மனதின் கொதிக்கும் வெப்பத்தை போக்குவது போல் வாசலில் ஜில்லென்ற காற்று வீச அவன் வீட்டின் படிகட்டில் வந்தமர்ந்து கொண்டான்..

         சுருள் சுருளாக மேககற்றைகள் வானில் வந்து குவிந்து கொண்டிருந்தன...  மழை வரும் போலிருந்தது....

 அவன் எங்கோ வெறித்து நோக்கியவாறு அமர்ந்திருந்தான்.

முற்றும்.

இதன் முந்தைய பகுதிகளை காண இங்கே சொடுக்கவும்.
பகுதி: 123

17 comments:

  1. கதை சட்டென முடிந்து விட்டதே... நாகரீகக் காதலை விட்டு நல்ல காதலில் சீக்கிரம் பிரகாஷ் மூழ்கட்டும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தாங்கள் முதலில் வருகை தந்து கருத்துக்கள் தெரிவித்ததற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      மிகவும் சிறுகதைதான்.இது 1976 ல் எழுதியது. நான்தான் எழுதியதை மாற்றாமல் ஆங்காங்கே கொஞ்சம் கூட வரிகள் சேர்த்து 4 பகுதியாக வெளியிட்டேன்.

      நாகரீகத்தை வெறுக்கும் பிரகாஷ் போன்றோருக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கட்டும். தங்கள் வாழ்த்துகளுக்கும் நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. பிரகாஷ் இதிலிருந்து மீண்டு நல்லதொரு வாழ்க்கையை அமைக்க வேண்டும்.

    இன்றைய நாகரீகத்தில் நகரங்களில் காதல் என்பது பொழுதுபோக்கு அம்சமாக மாறி விட்டது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ.

      /இன்றைய நாகரீகத்தில் நகரங்களில் காதல் என்பது பொழுதுபோக்கு அம்சமாக மாறி விட்டது./

      இது இன்றைய நாகரீகத்துக்கும் சற்று முன்னாடி.1976ல் நான் எழுதியது. அப்போதே நகரங்களில் காதலின் நிலை பொழுது போக்கு அம்சங்கள்தான். இப்போது கேட்கவே வேண்டாம். ஆனால் அதற்காக உயிரையே மாய்த்துக் கொள்ளும் நிலையும் எங்கும் எப்போதும் உள்ளது.

      பிரகாஷ்க்கு வேறொரு நல்ல வாழ்க்கை அமைய விரும்பியதற்கு நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. பாவம் பிரகாஷ். நல்லதொரு பெண் அமையட்டும் அவனுக்கு. சட்டென்று வந்து அமர்ந்து விட்டு சட்டென்று கடற்கரை மணலைத் தட்டிவிட்டுச் சென்றுவிட்டாள். ஜஸ்ட் ஃபார் டைம் பீயிங்க் என்பது போல்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ.

      /சட்டென்று வந்து அமர்ந்து விட்டு சட்டென்று கடற்கரை மணலைத் தட்டிவிட்டுச் சென்றுவிட்டாள். ஜஸ்ட் ஃபார் டைம் பீயிங்க் என்பது போல்/

      உண்மை.. அழகாக நிலைமையை விளக்கினீர்கள். மணலை தட்டுவது போல் அவனுடன் ஏற்பட்ட உறவையும்..
      தட்டிச் சென்று விட்டாள்.. .

      பிரகாஷ்க்கு வேறு நல்ல துணை கிடைக்க வேண்டிய தங்கள் நல்ல உள்ளத்திற்கு நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. 3 ஆம் பகுதியும் 4 ஆம் பகுதியும் சேர்த்து வாசித்தேன். நன்றாக இருக்கிறது சகோதரி.

    இப்போதெல்லாம் இப்படித்தான் இளைஞர்கள். ஆழ்ந்த அன்பு என்பதெல்லாம் இல்லை. அதனால்தான் பிரிதல்களும் அதிகமாகிவிட்டன என்று தோன்றுகிறது. பிரகாஷிற்கு அடுத்து காதல் வந்தால் ஒரு வேளை வந்தால் நல்ல பெண்ணாகக் கிடைக்கட்டும். இல்லை அவன் அம்மா பார்க்கும் பெண்ணாக இருந்தாலும் அவனைப் புரிந்து கொள்ளும் நல்லவளாக அமையட்டும்.

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /ஆழ்ந்த அன்பு என்பதெல்லாம் இல்லை. அதனால்தான் பிரிதல்களும் அதிகமாகிவிட்டன என்று தோன்றுகிறது/

      உண்மை.. ஆழ்ந்த அன்பு இல்லாத இடத்தில் புரிதல் இல்லை. அதனால் பிரிதல்கள் அதிகமாகி விட்டது..

      பிரகாஷுக்கு அவன் அம்மா பார்த்து வைக்கும் பெண்ணாவது நல்லவளாக அமைந்து அவனது மனதை புரிந்து கொண்டு, அதற்கேற்ப இருவரும் நல்லபடியாக வாழட்டும். தங்கள் வேண்டுதலுடன் என் விருப்பமும் அதேதான்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. நாகரீகம் என்ற சொல்லுக்கான பொருள் மாறி மாறி வர ஆரம்பித்துவிட்டது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.

      //நாகரீகம் என்ற சொல்லுக்கான பொருள் மாறி மாறி வர ஆரம்பித்துவிட்டது//

      உண்மைதான். வெற்று நாகரீகங்களுக்கு பொருள் என்பதை இல்லை. மனதை காயப்படுத்தும் தன்மை கொண்டது. தொடர்ந்து வந்து படித்தமைக்கு நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. பிரகாஷை இப்படி ஏமாற்றி விட்டீர்களே?
    நல்லது தான் பிரகாஷ் தன் அம்மாவை போல் எதிர்பார்க்கிறான் ,தாய் அன்பு எதிர்பார்க்கிறான் அதற்கு ரேணுகா சரியாக வரமாட்டாள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /பிரகாஷை இப்படி ஏமாற்றி விட்டீர்களே/
      ஏமாற்றவில்லை .. ஏமாறும் முன் அவனை காப்பாற்றியிருக்கிறேன் சகோதரி...

      அவன் தாயின் விருப்பபடி நல்லதொரு பெண்ணை மணந்து கொண்டு சந்தோஷமாக இருக்கட்டுமென நான் நினைத்த மாதிரியே நீங்களும் நினைத்துள்ளீர்கள். நன்றி சகோதரி. நம் இருவர் எண்ணமும் ஒன்று போலே அமைந்துள்ளது.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. முன் பகுதி கதையில் அமைதியும் ஆணவ்மும் ஒன்று சேருமா என்று கேட்டு இருந்தேன் உங்களை.
    அது போலவே ஆச்சு.
    சேர்ந்தால் நரகம் தான், பிரகாஷ் தப்பித்தான்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

      /முன் பகுதி கதையில் அமைதியும் ஆணவ்மும் ஒன்று சேருமா என்று கேட்டு இருந்தேன் உங்களை.
      அது போலவே ஆச்சு.
      சேர்ந்தால் நரகம் தான், பிரகாஷ் தப்பித்தான்./

      அவன் வாழ்வு நரகமாகாமல் அவன் தப்பித்தான். பிரகாஷ் மாதிரி நல்லெண்ணங்களை உடையவர்கள் இந்த மாதிரியே தப்பித்தால் நல்லது.

      தொடர்ந்து வந்து கதையை முழுமையாகப் படித்து நல்லதொரு கருத்துக்கள் கூறியதற்கு மனமுவந்த நன்றிகள் சகோதரி...

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. இதைப் போல இப்போது நிறைய கேள்விப் படுகிறோம். ஒரு வகையில் பிரகாஷ் எதையும் இழக்கவில்லை என்றே தோன்றுகிறது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      வாங்க வாங்க தங்களது முதல் வருகையை அன்புடன் வரவேற்கிறேன் சகோதரி.

      /ஒரு வகையில் பிரகாஷ் எதையும் இழக்கவில்லை என்றே தோன்றுகிறது./

      ஆம் சகோதரி எதையும் இழக்கவில்லை வாழ்க்கையில் பல அனுபவங்கள் பல நல்லதுகளை கற்றுத் தரும். அந்த வகையில் நல்லதொன்றை கற்று தேர்ந்திருக்கிறான்.

      கதையை முழுமையாக ரசித்துப் படித்து தந்த கருத்தினுக்கும் வருகைக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. வணக்கம் சகோதரரே

    தங்களது முதல் வருகையை அன்புடன் வரவேற்கிறேன்.

    தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் பாராட்டிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete