மலர்களின் ராஜா
அழகிய ரோஜா
மலர்களின் ராஜா
அழகிய ரோஜா
இளமங்கை வாழ்வில்
தங்க ராஜா ராஜா ராஜா மகராஜா
காதலின் ராணி
கலை தரும் வாணி
காதலின் ராணி
கலை தரும் வாணி
என் இதய வானில்
இன்ப ராணி, ராணி ராணி மகராணி
ஊரினில் உறவை தேடிடும் நினைவு
பருவ தேரினில் ஆடும்
தெய்வத்தின் கனவு
ஊரினில் உறவை தேடிடும் நினைவு
பருவ தேரினில் ஆடும்
தெய்வத்தின் கனவு
ஆசையின் பாசம்
பேசிடும் உரிமை
தன்மானத்தில் விளையும்
உலகினில் பெருமை
காதலின் ராணி
கலை தரும் வாணி
காதலின் ராணி
பூங்கொடி முகத்தில்
புன்னகை வெள்ளம்
அமுத தமிழிசை பாடும்
கவிதைகள் சொல்லும்
தலைமுறை புகழின்
குல நலம் காப்போம்
ஓராயிரம் காலத்து பயிர் வளம் சேர்ப்போம்
மலர்களின் ராஜா
அழகிய ரோஜா
மலர்களின் ராஜா
அழகிய ரோஜா
பாரத வீரர் மார்பினில் இணையும்
பாவையின் மனமே கனிபோல் கனியும்
வேதங்கள் ஓதி வளர்ந்திடும் பேதம்
அதை வென்றிட வேண்டும் தேசிய கீதம்
மலர்களின் ராஜா
அழகிய ரோஜா.
இப்பாடலின் வரிகளை படிக்கும் போதே எங்கோ எப்போதோ கேட்டு ரசித்த நினைவு உங்களுக்கும் வருமென நினைக்கிறேன்.
இநதப்பாடல் இடம் பெற்ற திரைப்படம்.. வள்ளி தெய்வானை இது 1973 ல் வெளிவந்த திரைப்படமாம்.முக்கிய கதாபாத்திரத்தில் ரவிசந்திரன், பிரமிளா நடித்துள்ளனர். இந்தப்படத்திற்கு இசையமைத்தவர் : என். எஸ் தியாகராஜன் பாடியவர்கள்: தனசேகர், மல்லிகா இந்தப்பபாடலை எழுதியவர் : தேன்கட்சி பாரதிசாமி. இந்த பாடலுக்கு ஏற்றபடி ஆடிப்பாடி நடித்திருப்பவர்கள் நடிகர் சசிக்குமார், மற்றும் நடிகை எம் பானுமதி.
எங்கள் வீட்டு மாடியில் இங்கு குடியிருக்கும் ஒருவர் மாடித்தோட்டம் மாதிரி மொட்டைமாடியில் ஒரு பகுதியில் அமைத்திருக்கிறார். அதில் அழகான மலர்கள், காய்கள் எனப் பூத்து காய்த்திருந்தது. எனக்குத்தான் இதைப்பார்த்ததும் புகைப்படங்கள் எடுக்க ஆசை வருமே. அதன்படி அதையெல்லாம் எடுத்ததும் இந்தப்பாடல் (மலர்களின் ராஜா) எப்போதோ சிலோன் வானொலியில் அடிக்கடி கேட்டு ரசித்ததுதான். (கருப்பு வெள்ளை படந்தான்) மனதுக்குள் ஒலித்துக் கொண்டேயிருந்தது. உடனே பாடல், மற்றும் இந்தப் படத்தைப் பற்றிய விபரம் அறிய கூகுளில் முயன்றேன். அங்கு கிடைத்ததை பதிவாகவும் பதிந்திருக்கிறேன். இந்தப்பாடலில் இறுதி வரிகள் நம்தேசம் சம்பந்தபட்டதாக வருகிறது. படம் பார்த்தால்,அந்த வரிகளுக்கு என்ன சம்பந்தம் என்பது புரியுமோ என்னவோ..! எனக்கு இந்த பாடல் காட்சிகள் அன்றி பாடலை முழுதாக கேட்க பிடித்திருந்தது. (ஆனாலும், பாடலை காட்சிகளுடன் கீழே பதிவின் கடைசியில் பகிர்ந்திருக்கிறேன். அனைவரும் கேட்டு ரசிக்கவும்.) அதனால் இங்கு பகிர்கிறேன். நீங்களும் இதை ஏற்கனவே கேட்டிருப்பீர்களோ என்னவோ..! ஒருவேளை நம் ஸ்ரீராம் சகோதரர் கண்டிப்பாக கேட்டு ரசித்ததிருப்பார் என நினைக்(நம்பு)கிறேன்.
இதில் தேசிய கொடிப்படம் மட்டும் கூகுளிலிருந்துதான் (பாடல், அதன் விபரங்களுக்கும் கூகுளுக்கு நன்றி. ) எடுத்தேன் மற்றபடி நான் மொட்டை மாடி தோட்டத்தில் எடுத்த அழகான மலர்களின் (சில படங்கள் என் ரசனைக்கேற்ப ஏற்கனவே என் கைப்பேசியில் எடுத்ததையும் சேர்த்திருக்கிறேன் . ) படங்களுக்குப் பொருத்தமாக இந்தப் பாடல் வரிகளை இணைத்து ஒரு புது முயற்சியாக இந்தப்பதிவு.
மலர்களின் ராஜா
அழகிய ரோஜா

மலர்களின் ராஜா
முதல் வரியைப் படிக்க ஆரம்பித்தபோதே பாடல் மனதில் ஒலிக்க ஆரம்பித்து விட்டது. அவர்கள் ஒலிபரப்பும்போது கேட்பேனே தவிர, தேடிக் கேட்டதில்லை. அவ்வளவு பிரியம் அந்தப் பாடலில் இல்லை.
ReplyDeleteஆனால் பாவம் அந்த தனசேகர் என்று நினைத்துக் கொள்வேன். ஒரு பாடல் பாடியதும் அதுவும் ஓரளவு பிரபலம் ஆனதும் அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்து பிஸியாவோம் என்று நினைத்திருப்பார்.
கொஞ்சம் ஏ எம் ராஜா போல இருக்கும் இவர் குரல்.
வணக்கம் சகோதரரே
Deleteபதிவுக்கு தங்களின் உடனடி அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோதரரே.
முதல் வரியை படித்ததும் உங்களுக்கும் இந்தப் பாடல் ஒலிக்க ஆரம்பித்து விட்டதா? நீங்களும் பல பாடல்களை ரசித்து கேட்பவராயிற்றே..! அதனால்தான் பதிவில் குறிப்பிட்டேன். நானும் அப்போது இலங்கை வானொலியில் அடிக்கடி கேட்டிருக்கிறேன். பாடியவர் யாரென்று கூட தெரியாது. இப்போதுதான் கூகுளில் சென்று படம் பற்றிய விபரங்களை சேகரித்தேன்.
ஆம் நீங்கள் சொல்வது போல் ஏ. எம் ராஜாவின் சாயல் இவரது குரலில் உள்ளது. ஏனோ, சினிமாவில் புகழ் பெறவில்லை. ஆனால், இவர் தனிப்பட்ட பாடல்கள் நிறைய பாடியுள்ளார் என நினைக்கிறேன். கூடவே பாடும் மல்லிகா அவர்களும் நிறைய தனிப்பட்ட பக்தி பாடல்கள் பாடியுள்ளார். இருவரும் இலங்கை புகழ் பாடகர்களோ என்னவோ..? எதற்கும் அதிர்ஷ்டம் என்பதும் உடன் வர வேண்டுமில்லையா? அந்த புது முக இசையமைப்பாளரின் இசையும் நன்றாக உள்ளது ஆனால் அதிர்ஷ்டம் என்ற காற்று கூடவே வீச வேண்டும். மனிதர்களாகிய நமக்கு ஒவ்வொருவருக்கும் பன்முக திறமைகள் உள்ளன. எதில் எந்த முகம் ஒளி வீச வேண்டுமென்பதை நிர்ணயப்பவன் இறைவன் அல்லவா..? தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பூக்களின் படங்கள் அழகு. நீங்கள் இருப்பது அபார்ட்மெண்ட் வீடா? தனிவீடா? மொட்டை மாடியில் தோட்டம் வைத்திருப்பதால் அபார்ட்மெண்ட் என்றே நினைக்கிறேன்! பூக்களின் படங்களுக்கேற்ற வகையில் பாடல் வரிகளை உபயோகித்துக் கொண்டது சிறப்பு.
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.
என் மகன் இருப்பது அப்பார்ட்மெண்டில்தான். ஒயர்கள் தடுக்கி விட்டால் கஷ்டமென நான் அவ்வளவாக மொட்டை மாடிக்குப் போவதில்லை. (எப்போதாவது வாக்கிங் செல்வேன்.) அன்று துணிகளை காயப் போட சென்ற போது பூந்திருந்த அந்த மாடித்தோட்டப் பூக்களை ரசித்தேன்.
மலர்களின் படங்களுக்கேற்ற பாடல் வரிகளை ரசித்தமைக்கு மிக்க மகிழ்வுடனான நன்றி.
பதிவு போட்டு மாதங்கள் ஆகி விட்டதேயென என் மனதில் தோன்றியவற்றைக் கொண்டு பதிவிட்டேன். இன்னமும் உங்களைத் தவிர எவரையுமே காணவில்லை. வரும் போது வரட்டும். உங்களின் அன்பான வருகைக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வேதங்கள் ஓதி வளர்த்திடும் பேதம்....
ReplyDeleteஇந்த வரியைப் படித்ததும்,
ஓ.. அப்போதேவா? அதுவும் பாடலிலேயா? என்று மனதில் ஒரு ஆயாசம் எழுந்தது.
வணக்கம் சகோதரரே
Deleteதங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.
எனக்கும் அந்த வரியைப் பார்த்ததும் வியப்பாக த்தான் இருந்தது. இத்தனைக்கும் 1973 ன் காலகட்டமிது. பாடல் எழுதியவரின் மனநிலை அதுவோ என்னவோ..! பாரத வீரரின் என்ற வரிகளுக்கும் டூயட் பாடலுக்கும் என்ன சம்பந்தமென மண்டை காய்கிறது.. :)) உங்களைப் போல இந்தக் கைப் பேசியில் என்னால், நிறைய விபரங்களை தேடவும் முடியவில்லை.
தங்கள் கருத்துக்களுக்கு நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.