Tuesday, May 29, 2018

கன்னி, ஆனால் தாய்.

அனைவருக்கும் என்அன்பான வணக்கம்...

இதுவும் நான் 1976 - ல் எழுதியதுதான். அப்போது எனக்கு கதைகள் எழுதுவதில் நிறைய ஈடுபாடு இருந்தது. நிறைய கதைகள் வெறும் தாளில் எழுதி வைத்திருந்தேன். .என் திருமணத்திற்கு பின் குடும்ப சூழ்நிலைகள் காரணமாக எழுத்தில் கருத்து செலுத்த இயலவில்லை. பத்திரிக்கைகளில் வெளியிட விரும்பவும் இல்லை. அப்படியே வெளியிட அனுப்பி வைத்தாலும்  நான் எழுதியவை ஏற்றுக் கொள்ளப்படுமா என்ற ஐயப்பாடுதான் காரணம்.

குழந்தைகள் உதவியுடன் கணினி செயல் பாட்டை கற்றுக் கொண்டு வலைத் தளத்திற்கு வந்த பின்னும் எப்போதேனும் கதைகள் எழுதுகிறேன். ஆனால் அதையே இங்கு பதிவிட்டவுடன் அனைவரும் வந்து படித்து பாராட்டும் போது மனதிற்கு சந்தோஷமாக உள்ளது. ஆகையினால் 1976-ல் எழுதியவைகளையும் அவ்வப்போது இங்கு பதிவிட்டு அதற்கு வரும் உங்களின் அன்பான கருத்துரைகளை கண்டு மிகுந்த  சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம் என்ற நினைப்பில் பதிவிடுகிறேன். இது அப்போதைய கருக்கள் ஆனபடியால் அந்த கால சூழலுக்கு தக்கபடிதான் கதையின் போக்கும், எழுத்தும் இருக்குமென்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றிகளுடன்..
உங்கள் சகோதரி ..


கன்னி, ஆனால் தாய்.

"ன்னை ஏன் காப்பாற்றினீர்கள்?" அவள் விம்மினாள்.


"என் நிலையில் யார் இருந்தாலும் அதைத்தான் செய்திருப்பார்கள். தவிர,இன்னும் சில மாதங்களில் இந்த உலகைக்காண ஆவலோடு இருக்கும் ஒரு ஜீவனைக்கொல்ல உனக்கு என்ன உரிமை இருக்கிறது", அமைதியாக கேட்டாள் நிர்மலா.

"அவமான சின்னத்தை சுமந்து கொண்டிருக்கும் என்னால் உங்களுக்கு ஏன் அவப் பெயர் வரவேண்டும், அதனால்தான் கேட்கிறேன், இந்த அநாதையை என்னை ஏன் காப்பாற்றினீர்கள் என்று?", அவள் கலங்கிய குரலில் கேட்டாள்.

"உன் பெயர் என்ன?"என்று நிதானமான குரலில் கேட்டாள் நிர்மலா. 

"நளினா", முணுமுணுப்பாக பதில் வந்தது அவளிடமிருந்து.



"இதோ பார் நளினா!, அநாதைகளுக்கு அநாதைதான் இடம் தரவேண்டும், இதோ பார் நானும் ஒரு அநாதைதான்.... முப்பது வருடங்களை மலை போல் முழுங்கி விட்டு ஒரு தைரியமான பெண்ணாய் நிற்கவில்லையா! இந்த உலகில் தனியே வாழ்க்கையை அமைத்து கொண்டவர்களுக்கு தைரியந்தான் தேவை.. அதுசரி, நீ இந்த நிலைமைக்கு வர காரணம் என்னம்மா?" பரிவுடன் அவள் தலையை தடவி விட்டவாறு கேட்டாள் நிர்மலா.



"தயவு செய்து அதை மட்டும் இப்போது கேட்காதீர்கள், உங்கள் பரிவான பேச்சினால் என் மனதிலுள்ள காயம் சற்று ஆறிப்போயிருக்கிறது. அதை மீண்டும் கிளறி விடாதீர்கள்", என்று விம்மினாள் நளினா.



"ஸாரி நளினா,  இனிமேல் நீ என் உடன் பிறவா சகோதரி உனக்கு எப்போது உன் கதையை சொல்ல தோணுகிறதோ அப்போது கூறலாம், நான் உன்னை வறுப்புறுத்த மாட்டேன். நீ இங்கு என்னுடன் தைரியமாக தங்கலாம், இது இனி உன்னுடைய வீடு மாதிரி நினைத்து கொள். நான் உன்னை என் காலம் உள்ள வரை காப்பாற்றுவேன், கவலைபடாதே!" என்று உருக்கமான குரலில் கூறிய நிர்மலா அவளை அன்போடு கட்டியணைத்துக் கொண்டாள்.



"நளினா, உன் கனவில் கூட இனி தற்கொலை எண்ணம் வரக்கூடாது, தெரிகிறதா?" அன்புடன் கூறியபடி லேசாக அவள் கண்ணத்தை தட்டினாள் நிர்மலா.

சரி, என்கிற மாதிரி இருந்தது நளினாவின் தலையசைப்பு.....

"குட் கேர்ள்" பாராட்டி விட்டு அவ்வறையை விட்டு அகன்றாள் நிர்மலா..

சோம்பல் ஒன்றை விடுத்தபடி படுக்கை யிலிருந்து எழுந்தாள் நிர்மலா. தினமும் கண்விழித்தவுடன் காப்பியுடன் நிற்கும் நளினாவை  காணவில்லை. நளினா அவளுடன் தங்கியிருக்க சம்மதித்தது நிர்மலாவுக்கு சந்தோஷத்தை தந்தது அவள் கூறியபடி உடன்பிறந்த தங்கையை விட ஒரு படி மேலாகவே நளினாவை கவனித்துக் கொண்டாள்.

ஐந்தாறு மாதங்களில் ஒரு பெண் குழந்தைக்கு தாயான நளினா, நி்ர்மலாவின் அன்பான அரவணைப்பில் நலம் பெற்று, தன்வாழ்க்கையில் ஒரு மாற்றம் ஏற்படுத்திய நிர்மலாவிடம் அளவு கடந்த அன்பை பொழிந்து அவளை தன் தெய்வமாகவே கருதி வாழ்ந்து வந்தாள். நிர்மலா எவ்வளவோ தடுத்தும் வீட்டு வேலைகளை அவளே பொறுப்பெடுத்து ஏற்றுக்கொண்டு நிர்மலாவையும், குழந்தையையும், நன்றாக கவனித்து வந்தாள்.

வழக்கப்படி இன்று கண் விழித்ததும் நளினாவை காணாததால்,  "பாவம்! வேலை மிகுதியில் இன்று கண் அசந்து உறங்குகிறாள் போலிருக்கிறது, இன்று நாம் காப்பியுடன் அவளை எழுப்பலாம்" என்று எண்ணியபடி எழுந்து பல் துலக்கி சமையலறைக்குள் நுழைந்தாள்.
பாலைக்காய்ச்சி காப்பியை கலந்து தனக்கும் நளினாவுக்குமாக கோப்பையில் ஊற்றியவள் தன்னுடைய கோப்பையை எடுத்து காப்பியை குடிக்க  ஆரம்பித்தாள்.

சில மாதங்களாக  தினமும் நளினா தயாரித்த காப்பியை குடித்த நாக்கு, இன்று சற்று வேறுபட்ட சுவைக்கு குறைகூற, மனதுக்குள் சிரித்துக் கொண்டாள்.

"என்ன இது! எவ்வளவு அயர்ந்து உறங்கினாலும் சிறிய சப்தத்திற்கு எழுந்து விடும் நளினா இன்னமும் எழுந்து வரவில்லையே? ஒருவேளை உடம்பு சரியில்லையோ?" இந்த எண்ணம் வந்ததும் மடமடவென்று நளினாவின் அறைக்கு ஒடினாள் நிர்மலா.

கட்டிலில் நளினாவை காணவில்லை, அருகிலிருந்த மரத்தொட்டிலில் ஐந்து மாதகுழந்தை ஷீலா புன்னகையுடன் உறங்கி கொண்டிருந்தாள். "ஒருவேளை வீட்டின் பின்பக்கம் போயிருக்கிறாளோ?" பதட்டத்துடன் வீடு முழுவதும் தேடினாள் நிர்மலா.

நளினாவை எங்கும் காணவில்லை. திகில் மின்னலென பாய்ந்தது நிர்மலாவின் உள்ளத்தில்... மறுபடியும் நளினாவின் அறைக்கு ஒடினாள் சுற்றும் முற்றும் பார்வையை ஓட்டியபோது  தொட்டில் அருகில் இருந்த டேபிளில் கடிதம் ஒன்று மேலே பாரத்தை சுமந்து கொண்டு அமர்ந்திருந்தது.

பரபரப்புடன் அதை எடுத்து படித்தாள் நிர்மலா.

"ன்பும், பாசமும், மிகுந்த என் உயிரினும் மேலான அக்காவுக்கு, எத்தனையோ நாட்களாக என்னைப் பற்றி உங்களிடம் சொல்ல வேண்டுமென்று நினைத்திருக் கிறேன், ஏதோ ஒன்று என்னை சொல்ல விடாமல் தடுத்துக் கொண்டேயிருந்தது. ஆனால் அக்கா இன்றுதான் அதற்கான சந்தர்ப்பம் வந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.

நான் கல்லூரியில் கால் பதித்த நாட்கள். தோழிகளுடன் படிப்பும் நட்புமாக  நன்றாகத்தான் நகர்ந்து கொண்டிருந்தது வாழ்க்கை. என் போதாத நேரம், நெருங்கிய தோழிகளுடன், ஒரு தோழி வீட்டில் தங்கி வரும் தேர்வுகளுக்கு  தயார் செய்து கொண்டிருந்தோம்.

அப்போது அந்த தோழி வீட்டின் எதிர் வீட்டின்  மாடியில் குடியிருந்த வாலிபன் ஒருவனிடம் சாதரணமாக தொடங்கிய நட்பு என் வாழ்க்கையை பாழாக்கியது. தேர்வுகள் முடிந்தவுடன் என் வீட்டில் எங்கள்  உறவுக்கார பையன் ஒருவனுடன் என் திருமணம் பற்றி பேச்சு வந்ததும் நான் அதிர்ந்து போனேன். என் திருமணத்தை நிறுத்த நான் செய்த முயற்சிகள்  வீணாயின.

என் நிலைமை பற்றி அவனிடம் விவாதித்த போது நாங்கள் இருவரும்  ஒருவரையொருவர் நேசிப்பதை உணர்ந்தோம். "நான்  உன்னை ராணி மாதிரி வைத்து  காப்பாற்றுகிறேன்" என்று அவன் செய்து கொடுத்த சத்தியத்தை நம்பி, பத்து மாதம் சுமந்து பெற்று அத்தனை தூரத்துக்கு ஆளாக்கிய பெற்றோர்களை உதாசீனபடுத்தி விட்டு, அவனுடன் புறப்பட்டு விட்டேன்.

இரண்டு மாதங்கள் மனம் போனபடி சுற்றி விட்டு, இங்கு வந்தபின் அவன் நண்பன் அறையில் ஒண்டி கொண்டு வாழ்க்கை பயணத்தை துவக்கிய போது திருமணத்தின் அவசியத்தை அவனிடம் அடிக்கடி உணர்த்தி கொண்டே இருந்தேன். அவனும் இன்று, நாளை,.. என நாட்களை தள்ளியதில்  மாதங்கள் ஒடியது.

ஒரு நாள் என் வயிற்றில் அவன் குழந்தையை நான் சுமப்பதை தெரிவித்ததும் திகைத்து போய், "திருமண ஏற்பாட்டை விரைவில் செய்து விட்டு வருகிறேன்" என்று போனவன், நாட்கள் பல ஓடியும் திரும்பவில்லை. கண்ணீருடன் இன்னும் சில வாரங்களை தள்ளிய போதும் அவன் வந்த பாடில்லை. முதலில் ஆறதல் கூறி என்னை தேற்றி வந்த அவன் நண்பனின் போக்கும் வரவர மாறியது.

"இவளை என் தலையில் கட்டி விட்டு அவன் தப்பித்து விட்டான், என்ன செய்வதென்று தெரியவில்லை" என்று தன்னுடைய மற்றொரு  நண்பனிடம் புலம்புவதையும், அதற்கு அந்த மற்றொருவன் கொடுத்த மோசமான யோஜனைகளையும், நான் கேட்க நேர்ந்ததால் என்னை அவர்கள் இல்லாத நேரம்  பார்த்து அங்கிருந்து தப்பிக்க வைத்தது.

பெற்றவர்களின் மனம் புண்படும்படி நடந்து கொண்டதற்காக ஆண்டவன் சரியான தண்டனை கொடுத்து விட்டான் என்று எண்ணிய வருத்தத்தில் மனம் பாறையாய் கனக்க, வாழ பிடிக்காமல் சாகத்துணிந்தேன்.

அப்போதுதான் நீங்கள் வந்து காப்பாற்றினீர்கள். தாய் தந்தையை இழந்த நிலையிலும் நீங்கள் தவறான வாழ்க்கையை தேர்ந்தெடுக்காமல், நேர்மையான முறையில் வாழ்ந்து வரும் உங்களிடம் என் அவல வாழ்க்கையை சொல்ல மனம் வராமல் இதுநாள் வரை சொல்லாமல் இருந்தமைக்கு என்னை மன்னித்து விடுங்கள்.

உண்மையிலேயே, உங்களை மாதிரி நல்ல மனது உள்ளவர்களை நான் இதுவரை சந்தித்ததே இல்லையக்கா... நம் முதல் சந்திப்பில் நீங்கள் என்னைப் பற்றி விசாரித்த போது, "அதை இப்போது கேட்காதீர்கள்", என்று நான் கேட்டுகொண்டதற்காக நீங்கள் இதுநாள் வரை என்னை பற்றி ஒரு வார்த்தை கேட்காமல், என்னை உங்கள் உடன்பிறந்த தங்கையாகவே நினைத்து என்னையும்,  என் குழந்தையையும், எப்படியெல்லாம் பார்த்து, பார்த்து கவனித்து கொண்டீர்கள்.

அதற்கு நான் இந்த பிறவியில்  மட்டுமல்லாது இனி எடுக்கும் எத்தனை பிறவிகளில் நன்றிக்கடன் படபோகிறேன்று எனக்கு  தெரியாது. ஆனால் இனி வரும் ஒவ்வொரு பிறவிகளிலும் உங்களுடன் இணைந்திருக்கும் உறவு வேண்டும் என்று ஆண்டவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.

இனி நான் போகும் பாதையில் உங்களை மாதிரி நல்லவர்களை சந்திக்க வேண்டுமென்றும், பிரார்த்தித்து கொண்டும் போகிறேன்.

போகிறேன் என்றதும் முன்பு மாதிரி முட்டாள்தனமான முடிவை நான் எடுத்து விடுவேனோ.... என்று நீங்கள் கலங்க வேண்டாம். உங்களிடம் பழகிய நாட்களில் உங்களது தைரியத்தை பார்த்து வியந்திருக்கிறேன்... அந்த தைரியத்தையும், தன்னம்பிக்கையையும், மூலதனமாக வைத்துக்கொண்டு, நான் படித்த கல்வியறிவின் மூலம் ஒரு நல்ல நிலைமைக்கு வந்து உங்களை மாதிரி தைரியமான திறமையான பெண்ணாக உங்களை சந்திப்பேன் என்ற நம்பிக்கையுடன் இங்கிருந்து போகிறேன்.

என் வாழ்நாள் முழுக்க உங்களுக்கு பாரமாக இருக்க விருப்பமில்லாததால் இந்த முடிவை உங்களை கேட்காமல் எடுத்திருக்கிறேன்.. என் முடிவு உங்களுக்கு தவறாக பட்டால் தயை கூர்ந்து என்னை மன்னிக்கவும்.

என் வயிற்றிலிருந்த பாரத்தை இறக்கி உங்கள் மேல் ஏற்றிவிட்டு செல்வதற்காக என்னை மன்னித்து விடுங்கள். குழந்தையுடன் செல்லும் என் பயணம் சிக்கலை ஏற்படுத்துமோ என்ற சிறிய பயத்தில் உங்களை சிரமத்தில் ஆழ்த்திவிட்டுச்செல்கிறேன். என்னை விட நீங்கள் அக்கறையுடன் குழந்தையை பார்த்துக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு உண்டு.

நான் நினைத்த மாதிரி ஒரு நல்ல நிலைமையில் உங்களையும், என் குழந்தையையும், சந்திக்கும் போது,  கன்னியாய் இருக்கும்போதே, ஒரு தாயாயிருந்து ஒரு குழந்தையை வளர்த்த சிரமத்திற்க்காக உங்கள் காலில் விழுந்து கதறி அழுது மன்னிப்பு கேட்பேன்.. அந்த நாளை விரைவில் தர வேண்டுமென்று இறைவனிடம் வேண்டிக்கொண்டு உங்களிடமிருந்து விடை பெறுகிறேன்".

இப்படிக்கு
உங்களை எந்த நிமிடமும் மறவா,
உங்கள் அன்புத்தங்கை,
நளினா.

இனியும் ஒரு நாள் தொடரும்.....


19 comments:

  1. கதை மனதை அழுத்தியது நளினா செய்தது தவறோ... என்று நினைக்கத் தோன்றுகிறது.

    இருப்பினும் தொடரும் என்பதால் முடிவை அறிய காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  2. வணக்கம் சகோதரரே

    தங்கள் உடனடி முதல் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ.

    //கதை மனதை அழுத்தியது நளினா செய்தது தவறோ... என்று நினைக்கத் தோன்றுகிறது.

    இருப்பினும் தொடரும் என்பதால் முடிவை அறிய காத்திருக்கிறேன்.//

    தவறுகள் சிலசமயங்களில் தவறாகவே போய் விடும் அபாயங்களும் உண்டு. காலங்கள் எதையும் தாங்கி சரியாகும் என்ற நம்பிக்கையில்தான்,மனசு சரியோ, தவறோ ஒரு முடிவெடுக்கிறது. முடிவும் காலத்தின் கரங்களில்தான்.

    கதையை ரசித்துப் படித்தமைக்கும் தொடர்கிறேன் என்றமைக்கும் மிக்க நன்றிகள் சகோ.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /பதிலும் அருமை.../

      ஒரு வார்த்தையின் அழுத்தத்தில் இரண்டையும் சுருக்கமாக பாராட்டிய நேர்த்தி கண்டு வியக்கிறேன்.
      பாராட்டுக்களுக்கு மிகவும் நன்றிகள் சகோ ..

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. கன்னி ஆனால் தாய் என்பதைப் பார்த்ததும் ஆஹா!!! என்று தோன்றியது....கரு நான் எழுதும் கதையும் இதுவும் ஒன்றாக இருந்தால் யோசிக்கணுமே என்று எண்ணிக் கொண்டே வந்திருக்கேன்...ஹா ஹா ஹா ஹா ஹா\

    இதோ படித்துவிட்டு வரேன்

    உடம்பு தேவலாமா? இடையில் பதிவு போட்டீர்களா என்று பார்க்கணும்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ.

      ஆகா... தங்கள் எழுதும் கதையை ஒத்து வருகிறதா? ஹா ஹா ஹா ஹா அதனால் என்ன? கரு ஒன்றானாலும், எழுத்து நடைகளும் நிகழ்வுகளும் வேறுபடுமில்லையா...

      என் உடல் நிலை சரியாகி விட்டது சகோதரி.. அன்புடன் விசாரித்தமைக்கு மனமார்ந்த நன்றிகள்.

      இடையிலும் இரு பதிவுகள் போட்டிருக்கிறேன். தங்களுக்கு நேரம் இருக்கும் போது வந்து பார்க்கவும்.
      மிக்க நன்றி சகோதரி..

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. கமலா சகோதரி நளினா செய்தது ஏதோ இடிக்கிறதே. மனம் வேதனை அடைந்தது இறுதியில் என்றாலும்....

    நிர்மலா இத்தனை நல்லவள். அவளிடம் தன் குழந்தையை ஏன் இறக்கி வைத்து விட்டுப் போகணும் அதுவும் பாரம் தானே. இல்லையா? நளினா வெளியில் போய் தன் கல்விக்கேற்ற நிலையை அடைந்து வரேன் என்று சொல்லியிருப்பதை இங்கேயே நிர்மலாவுடன் இருந்தே செய்திருக்கலாமோ? குழந்தையை நிர்மலாவிடம் விட்டுப் போனது சரியில்லையோ என்று தோன்றுகிறது. நிர்மலா நல்ல மனதுடன் இருப்பதால் அவளுடன் இருந்து கொண்டே இருஅருமாக அந்தக் குழந்தையை வளர்த்திருக்கலாம். நளினாவும் வேலைக்குச் சென்றிருக்கலாம். நிர்மலாவுடன் கலந்தாலோசித்தும் செய்திருக்கலாமோ....என்றும் தோன்றியது.

    ஆனால் எழுத்து நடை மிக நன்றாக இருக்கிறது சகோ. தொடரும் என்று சொல்லியிருப்பதால் நளினா என்ன செய்யப் போகிறாள்....நிர்மலா என்ன செய்யப் போகிறாள் என்று அறிய ஆவல்!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      /கமலா சகோதரி நளினா செய்தது ஏதோ இடிக்கிறதே. மனம் வேதனை அடைந்தது /

      தங்கள் கருத்துக்கள் சரிதான். ஆனால் தன்னால் இன்னமும் நிரமலாவக்கு தொந்தரவும் தர விருப்பமின்றி நளினா அந்த முடிவை எடுத்திருக்கிறாள்.
      மேலும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு ஒரு நல்ல நிலைமைக்கு வருகிறேன் என கூறியுள்ளாளே.. அது வரை என் குழந்தையை தங்களுக்கு பாரமாக தந்ததை குறிப்பிட்டு அதற்கும் மன்னிப்பும் கேட்பேன் எனவும் சொல்லியிருக்கிறாள். அவளது செய்கையின் துணிச்சலுக்கு காரணம் நிர்மலாவின் தைரியம்தான்..அவளிடம் கற்று கொண்ட தன்னம்பிக்கையை பாடமாக வைத்துக்கொண்டு இனி எவரிடமும் ஏமாறாமல் தனியே நின்று சாதித்து காட்ட ஆசைப் பட்டு சென்றிருக்கிறாள். அப்படியாக எழுதியிருக்கிறேன்.

      தங்கள் கருத்துக்களுக்கும் மிகவும் நன்றி சகோதரி. இது அப்போது எழுத்துக்களுக்கும் எனக்கும் ஏற்பட்ட புதிய அறிமுக துவக்கத்தில் எழுதியது. தங்கள் அனைவரின் கருத்துக்களும் இனி வரும் என் எழுத்தை புடம் போட்டு ஜொலிக்க வைக்கும் என நம்புகிறேன். அதற்கே நான் மிகவும் நன்றிகள் சொல்ல வேண்டும்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. ஆரம்பத்தைப் படிக்கும்போது உதவி செய்த ஒருவருக்கு மேலும் துன்பத்தைத் தந்து விட்டு நளினா சென்று விட்டது திகைப்பைதான் கொடுக்கிறது. பார்ப்போம் தொடரில் அடுத்து என்ன வருகிறது என்று...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ.

      /ஆரம்பத்தைப் படிக்கும்போது உதவி செய்த ஒருவருக்கு மேலும் துன்பத்தைத் தந்து விட்டு நளினா சென்று விட்டது திகைப்பைதான் கொடுக்கிறது./

      உண்மைதான்.. உதவி செய்யும் போது அதன் பலனாக துன்பங்கள் வந்தால் கொஞ்சம் கஸ்டமாத்தான் இருக்கும். ஆனால் உதவி செய்பவரின் மனோபாவத்தை பொறுத்தது. அவர் எது வந்த போதும் அதை சகஜமாக ஏற்றுக் கொள்ளும் மனதோடு இருந்து விட்டால் மேலும் உதவிகள செய்வதற்கு தயங்கவே மாட்டார். அது அவரின் இயல்பான குணமாகவே மாறி விடும்.

      அந்த மாதிரி ஒரு கதாபாத்திரமாக நிர்மலாவை காட்டியுள்ளேன்.

      தொடரை மேலும் படித்து அறியும் ஆவலோடு, தாங்கள் வந்து கருத்துக்கள் இட்டிருப்பதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.
      தங்களின் கருத்துக்கள் என் எழுத்துக்களை மென் மேலும் வளமாகும் என நம்புகிறேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. //
    நளினா வெளியில் போய் தன் கல்விக்கேற்ற நிலையை அடைந்து வரேன் என்று சொல்லியிருப்பதை இங்கேயே நிர்மலாவுடன் இருந்தே செய்திருக்கலாமோ? குழந்தையை நிர்மலாவிடம் விட்டுப் போனது சரியில்லையோ என்று தோன்றுகிறது.//

    எனக்கும் கீதாவின் கருத்துதான் .
    நிர்மலா காலம் முழுவதும் பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்ன போது அவ்ருக்கு சிரமம் இல்லாமல் நிர்மலவுக்கு உதவி கொண்டு வேலைப்பார்க்க இஷ்டம் என்றால் நிர்மலவிடம் சொல்லி வேலை வாங்கி கொண்டு தன் குழந்தையின் எதிர்காலத்தை வளபடுத்தி இருக்கலாம் என்று தோன்றுகிறது.
    இருந்தாலும் கதை ஆசிரியர் என்ன மாற்றம் வைத்து இருக்கிறீர்கள் என்பதை பார்க்க தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ.

      /எனக்கும் கீதாவின் கருத்துதான் .
      நிர்மலா காலம் முழுவதும் பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்ன போது அவ்ருக்கு சிரமம் இல்லாமல் நிர்மலவுக்கு உதவி கொண்டு வேலைப்பார்க்க இஷ்டம் என்றால் நிர்மலவிடம் சொல்லி வேலை வாங்கி கொண்டு தன் குழந்தையின் எதிர்காலத்தை வளபடுத்தி இருக்கலாம் என்று தோன்றுகிறது.
      இருந்தாலும் கதை ஆசிரியர் என்ன மாற்றம் வைத்து இருக்கிறீர்கள் என்பதை பார்க்க தொடர்கிறேன்./

      என்னத்தான் நிர்மலா காலம் முழுதும் கண் கலங்காமல் பார்த்துக்கொள்கிறேன என்ற போதும், தன்னால் அவளுக்கு மென்மேலும் துன்பங்களை தரக்கூடாது என்ற நல்லெண்ணம் காரணமாக அவள் பிரிகிறது மாதிரி எழுதியுள்ளேன்

      தொடர்ந்து வந்து கதையை படிக்கிறேன் என்றமைக்கும் மனம் திறந்த கருத்துக்களுக்கும், மிக்க நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. வித்தியாசமான கதைக்களம்.சொல்லிச் செல்லும் விதம் அருமை.தொடர வாழ்த்துக்களுடன்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      சொல்லிக் சென்ற விதம் அருமை என்ற பாராட்டிற்கும், வாழ்த்துக்களுக்கும் மிக மிக நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. அருமையான படைப்பு
    தொடர்ந்து பகிருங்கள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வினுக்கும், அருமையான படைப்பு என பாராட்டியமைக்கும் மனமார்ந்த நன்றிகள்.

      தங்கள் கருத்துக்கள் என் எழுத்துக்களுக்கு ஊக்கம் அளிக்கிறது..மிக்க மகிழ்ச்சி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. வணக்கம் !

    கதைகள் நாவல்கள் கவிதைகள் எனக்கு எப்போதும் பிடித்தவைதான் இன்றுதான் உங்கள் வலைப்பக்கம் வந்தேன் வந்ததும் பகுதி இரண்டு என்பதைக் கண்டு அதை வாசிக்காமல் முதல் பதிவுக்கு வந்தேன் அருமையா இருக்கிறது இதில் யார்மீது தவறு என்று விவாதிப்பதை விட இளமை மயக்கம் கொடுத்த இறைவனைத்தான் முதலில் திட்ட வேண்டும் .......என்று நினைக்கிறேன்

    தொடர்ந்து எழுதுங்கள் வாழ்க நலம்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நான் எழுதிய கதையை வந்து வாசித்து சிறப்பாக கருத்துரை தந்தமைக்கு மிக்க நன்றிகள் சகோ.

      இளமையில் செய்த தவறு என்றுமே சீர்கேடாகத்தான் முடியும். சிலரின் வாழ்வில் இறைவன் இம்மாதிரியான தண்டனைகளை கொடுத்து விடுகிறார்.

      தொடர்ந்து எழுதுங்கள் என்ற ஊக்குவித்தலுக்கு மிக்க நன்றி.
      தாங்களும் தொடர்ந்து வந்து கருத்துரை இட்டால் மகிழ்வடைவேன். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  10. வணக்கம் !

    அசத்தலான ஆரம்பம் விரைவாக எல்லாப் பகுதிகளையும் வெளியிடுங்கள் முடிவைக் காண ஆவலுடன் இருக்கின்றேன்

    வாழ்க நலம்

    ReplyDelete