Wednesday, July 27, 2016

ஆடிக்கிருத்திகை



முருகா

அண்ணலின் திருப்புகழைச் சொல்லிட அவன் அன்பு

அண்ணனின் மலர்தாழ் பணிந்து ஆரம்பிப்போம்.

அகிலத்தை தன் வயிற்றினிலே ஆழமாக அடக்கியவனை,

அன்புடன் அட்சதைகள் தூவி ஆசிகள் தர வேண்டிடுவோம்.

விசனங்கள் அறவே களையும் வேலனுக்கு மூத்தோனை,

விநாயக மூர்த்தியை நாம் கைக் ௬ப்பித் தொழுதிடுவோம்.

விக்கினங்கள் ஏதுமின்றி அவன் தம்பியவன் துதிபாட, நம்

விருப்பமதை தெரிவித்தே அவனருளை வேண்டி நிற்போம்.

                                               ஓம் விக்கினேஷ்வராய நமஃ












உலகினிற்கே தாய் தந்தையாக விளங்கி அருள்பாலித்து வரும் அம்மையப்பனுக்கு  இரண்டாவது புதல்வனாக, அசுரர்களை வதைத்து மூவுலகையும் காத்து ரட்சிக்கும் நோக்கத்துடன், முருகப் பெருமான் அவதரித்து வளர்ந்து வந்தார். அவ்வாறு வளர்ந்து வந்த போது அதற்குரிய தகுதியான நேரத்தில் அசுரர்களை வதைத்து தேவர்களையும் மூவுலகையும் காத்தருளி,  தெய்வயானை, வள்ளியை இரு துணைவியராய் கொண்டு தம்பதி சமேதரராய் பூலோகத்தில் குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன்என்ற சொல் வழக்குப்படி இன்றளவும் மக்களுக்கு அருள் வழங்கி வருகிறார் என்பதும் நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.

அவ்வாறு சிறு குழந்தையாய் முருகப் பெருமான் சரவணப் பொய்கையில் கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டு வந்த போது, கார்த்திகைப் பெண்களின் சிறப்புக்கள் பெருமைகள் என்றும் நீடித்திருக்கும் வகையில், அவர்களை கார்த்திகை நட்சத்திரங்களாக வானில் என்றும் சுடருடன் பிரகாசிக்க சிவபெருமான் வாழ்த்தியருளினார். மேலும் அவர்கள் பாலூட்டி சீராட்டி வளர்த்தற்காக, முருகன்கார்த்திகேயன்என்ற பெயருடனும் அழைக்கப்பட்டார். அவர்களை உலக மக்களும் போற்றி வழிபட வேண்டுமென்பதற்காக, மாதந்தோறும் வரும் கார்த்திகை நட்சத்திரத்தன்று முருகனுக்கு உகந்த நாளாக கருதப்பட்டு அன்று குன்றுகள்தோறும் அமர்ந்திருக்கும் முருகனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்து வருகிறது. அதில் ஆடியில் வரும்ஆடிக்கிருத்திகையும், தை மாதத்தில் வரும்தைக்கிருத்திகையும், மிகவும் சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகிறது.

தமிழ் மாதங்களில் ஆடியிலிருந்து, மார்கழி வரைதட்சிணாயணம்எனவும் தை மாதத்திலிருந்து, ஆனி வரைஉத்திராயணம்எனவும் இரு புண்ணிய காலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ஆடி முதல் தேதி ஆடிப்பண்டிகையுடன் ஆரம்பித்து பின் வரும் மாதங்கள் எல்லாம் ஒவ்வொரு பண்டிகையாக கழிந்து தைமாதம் முதல் நாள் பொங்கல் பண்டிகை வரை அனைத்து தெய்வங்களையும் பூஜிக்கும் விஷேடங்களாக வருகிறது. முருக பக்தர்கள் ஆடிக் கிருத்திகை  ஆரம்பித்து தைக்கிருத்திகை வரைகிருத்திகைவிரதமிருந்து  வேண்டுதலுக் கேற்றபடி காவடிகள் எடுத்து தாம் வேண்டும் வண்ணம் தத்தம் விருப்பங்கள் நிறைவேற முருகனை அன்புடன் தொழுவர். முருகனும் தம் பக்தர்களுக்கு வேண்டியதை அருளி அவர்கள் அன்புடனும், மட்டற்ற நம்பிக்கையுடனும் சுமக்கும் காவடிகளை மனதாற ஏற்றுக்கொண்டு, அவர்கள் விரும்பும் செயல்களை இனிதே நிறைவேற்றி வைப்பார்.

ஒரு சமயம் சிவனின் ஆணையின்படி அகத்திய முனிவர் இரு பெரும் மலைகளை சுமந்து மருத மலையில் வைப்பதற்காக சென்று கொண்டிருந்தார். “ஐயனே.! நானோ குறு முனி என்னால் இந்த செயலை சரியே நிறைவேற்ற இயலுமா”? என்ற அகத்தியரின் சந்தேக கேள்விக்கு, “அன்றொரு நாள் எம் திருமணவைபவத்தைக் காண  மூவுலகிலிருந்தும் ஒருங்கே ஒன்று சேர்ந்த அனைவரின் பாரம் தாங்கமாட்டாமல், வடதிசை தாழ, உலகம் சமனடைய தென்திசைக்கு உன் ஒருவனை மட்டுந்தானே அனுப்பினேன். உன்னால் அன்று நடந்த அதியத்தை மறந்து விட்டாயா.? உன் திறமையை யாமறிவோம்.! அதனால் இந்த செயலும் உன்னால் பாதகமின்றி முடிவடையும். சென்று வா.! என்று புன்னகையுடன் பனித்த ஈசனின் ௬ற்றுக்கு கட்டுப்பட்டு, பணியை முடிக்கும் உறுதியான மனமுடன் அகத்தியர் சென்று கொண்டிருந்தார். அவருக்கும் தெரியும்.! ஐயனின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று.! இதனால், ஏதோ நன்மைகள் நிகழப் போகிறதென அறிந்தவர்தான்.! அதனால் மறு பேச்சு ஏதுமின்றி மலைகளை சுமந்தபடி தம் பயணத்தை துவக்கினார்.

அவர் செல்லும் வழியில் இடும்பன் என்றொரு அரக்கன் இறைபக்தியுடன் தவமியற்றிக் கொண்டிருந்தான். அவன் அரக்கனே ஆனாலும், நல்லவன் அவனும், அவன் மனைவி இடும்பியும்,முருகப் பெருமானின் மேல் அதிக அன்பு கொண்டு பக்தி செலுத்தி வருகிறவர்கள்.  இடும்பனும் அகத்தியரின் பெருமைகளை முழுதும் உணர்ந்தவன். ஆதலால் தன் இருப்பிடம் ஏகிய அகத்திய முனிவரின் தாழ் பணிந்துசுவாமி, வாருங்கள் .! தங்களது இப்பயணத்தின் நோக்கத்தை அறியலாமா.? தங்களுக்கு இச்சிறியேன் ஏதாவது உதவி செய்ய அனுமதி தாருங்கள். முடிந்தால் நான் இம் மலைகளை தாங்கள் சொல்லுமிடத்தில் சென்று அமர்த்தி விட்டு வருகிறேன்.! என்னிடம் தாருங்கள் .”என பணிவுடன் கேட்கவும், “அப்பா ஈசனின் விருப்பபடி இம்மலைகளை மருத மலையில் வைப்பதற்காக சென்று கொண்டிருக்கிறேன். ஆனாலும், நீ எனக்கு உதவ முடிந்தால் எனக்கும் சம்மதமே.!” என அனைத்து விபரங்கள் ௬றியவுடன், இடும்பன் சந்தோஷத்துடன் அகத்தியரை வணங்கி  இரு மலைகளையும் பெற்று, அருகிலிருந்த பெரிய மரமொன்றை தன் பலத்தினால் வேருடன் சாய்தெடுத்து, அதன் இரு முனைகளிலும் இரு மலைகளையும் இணைத்து  தன் இரு தோள்களிலும் சமமாக இருக்கும்படி செய்து, “தாங்கள் இவ்விடமே சற்று இளைப்பாறுங்கள். நான் விரைவில் சென்று இம்மலைகளை அங்கு சேர்பித்து விட்டு வருகிறேன்.” என்று புறப்பட்டான்.

அவனும் செல்லும் வழியில் பழனி மலையில் சற்று ஆசுவாசபடுத்திக் கொள்வதற்காக அந்த இரு மலைகளை வைத்ததும், அந்த மலைகள் வைத்த இடத்திலே பதிந்து கொண்டன. மறுபடி அதை எடுக்க முடியாமல், தடுமாறும் சமயம், முருகனை சிறு பாலகனாக வந்து, அவனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு விளையாடவே, இச்சிறுவனால்தான் தன் பணி பாதிக்கிறது என்ற எண்ணத்தில், முருகனுடன் இடும்பன் சண்டையிட, முடிவில் முருகனின் தாக்குதலில் மரணத்தை தழுவினான். இது விபரம் அறிந்த இடும்பி, தன் கணவனின் பிரிவை தாங்க முடியாதவளாய், அழுது முருகனை துதித்து போற்ற, முருகன் இடும்பனை மீண்டும் உயிர்ப்பித்து தந்து அந்த அன்பான தம்பதிகளை நோக்கி, இடும்பா, உங்கள் பக்தியை மெச்சினோம். இது யாவும் எம்முடைய திருவிளையாடல்தான்.! என் பக்தனான நீ  உன் தோள்களில்  காவடியாய் இரு மலைகளை சுமந்து  உன் பிறவி பாவத்தை களைந்து என்னருள் பெற்றாய்.! இனி  உன் செய்கையை போல் வரும் காலத்தில் எம் பக்தர்கள் அவர்கள் சக்திக்கு உட்பட்டாற் போல், காவடிகளை சுமந்து வந்து  தத்தம் கோரிக்கைகளை என்வசம் சமர்பித்தால், அவைகளை நான் நிறைவேற்றி வைப்பேன். நீயும் இனி அவர்களுக்கு தெய்வமாயிருந்து அவர்கள் சுமந்து வரும் காவடியின் பாரங்களை இலகுவாக்கி  அவர்களுக்கு உதவிசெய்து, அவர்களை பத்திரமாக என்னிடம் கொண்டு சேர்ப்பாயாக.! இதுவே நீ எமக்கு என்றும் ஆற்றும் தொண்டு.எனக் ௬றி அருளவே மகிழ்வுற்ற இடும்பன் தெய்வமாகி இன்றளவும் நமக்காக முருகன் இட்ட பணியை நிறைவேற்றி வருகிறான். இவ்வாறாக காவடியின் வரலாற்றுப் புகழ் தொடங்கியது
                 









"இடும்பனை காத்த இனிய வேல் முருகா
தணிகாசலனே சங்கரன் புதல்வா, கதிர்காமத்துறை கதிர்வேல் முருகா"
 என்று தினம் கவசம் பாடி அனைவரும் கந்தவேல் முருகனை துதிப்போம்.


அன்றும், இன்றும் ஆடிக்கிருத்திகை, தைக்கிருத்திகையன்று பக்தர்கள் காவடி சுமந்து தம்முடைய வேண்டுதல்களை முருகனிடம் தந்து வேண்டி பலனடைந்து வருகிறார்கள். நாமும் என்றும் மனித நேயமெனும்காவடியையும், “அன்பு பாசமெனும்மற்றொரு காவடியை தோள்களில் ஏந்திச்சென்று குன்றுகள்தோறும் குடிகொண்டிருக்கும் குமரனை கண்டு தரிசித்து அவனிடம் சமர்பித்துஉலகஅமைதிவேண்டி பெற்று வருவோமா?


வடிவேல் முருகனுக்கு அரோகரா.! சக்திவேல் முருகனுக்கு அரோகரா.!

வண்ணமயில் முருகனுக்கும், ஞானவேல் முருகனுக்கும் அரோகரா!


படங்கள்: நன்றி கூகுள்.