Sunday, September 21, 2014

“என்னையும்” தேடி வந்த விருது…



டந்த ஒரு வார காலமாக, சற்று உடல்நிலை குறைவின் காரணமாக வலைப்பக்கம் வரவில்லை..! இன்றுதான் என் வலைப்பூ பக்கம் வந்தபோது புதிதாக வந்த தகவல் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். சகோதரர் கில்லர்ஜி ஏதோ விருது ஒன்றை எனக்கு அளித்திருப்பதாக ௬றிச் சென்றிருந்ததைக்கண்டு ஒன்றும் விளங்காமல், என்ன விஷயம்.! இது? என்று சிறிது நேரம் புலப்படாமல், முழித்து விட்டு பின் அவர் வலைப்பூவிலும் சென்று பார்வையிட்டு படித்த பின்தான், அனைத்தையும் புரிந்து கொண்டேன். (நான் எழுத்துலகத்திற்கு புதிதாகையால், உடன் விளங்கும் திறன் சற்று (நிறையவே) கம்மி என நினைக்கிறேன்.)
      
சில மாதங்களுக்கு முன்பு பதிவுலகில் சுற்றி வந்து அனைவரின் புகழ் பரப்பிய தொடர் பதிவு மாதிரி, இந்த தொடர் விருதும், புதுமுக எழுத்தாளர்களை பதிவுலகத்திற்கு அடையாளம் காண்பிக்கும் என்ற நல்ல மனதோடு இதை ஆரம்பித்து வைத்த நல்ல உள்ளங்களுக்கு, என் பணிவான வணக்கங்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்..!
          
எழுத வேண்டும், எல்லா எழுத்தாளர்கள் மாதிரி, கொடி கட்டி பறக்க வேண்டும் என்று சிறு வயதிலிருந்தே மிகவும் ஆசை.! (ஒரு கனவு) ஆனால், நேரம், காலம், சூழல், என்று எதுவுமே ஒத்து வரவில்லை.!  நாம் நினைப்பதெல்லாம், அனைத்துமே நடந்து விடுமா என்ன..? எதை நமக்கு இறைவன் அளிக்கிறானோ..! அதை பெற்றுக்கொண்டு நகர்வதுதான் நமக்கழகு..! என்ற மனதையும் இறைவன் ௬டவே கொடுத்து விட்டமையால், காலங்களும், வயதும் மிகவே கரைய, கடமை என்பது ஒன்றே கண்ணுக்கு தெரிய, பின் நிதானித்து சற்று பின் நோக்கி பார்க்கும் போது வாழ்நாளில் “பாதி..?” சொல்லாமல் கொள்ளாமல் ஒடி விட்டது.! பின்னர் கனவே ஆகி விட்ட எழுதும் ஆசையை, என் வாரிசுகளின் (மகள், மகன்) ஊக்குவிப்பால், நிஜ உலகிற்கு அழைத்து வந்து, எழுத்துலகை தொட்டதும், “னவு பலிக்குமா..?” என்ற நப்பாசையுடன், “னவையும்” சேர்த்துக்கொண்டு, வலைப்பூவில், (உலாவி) பயணித்து வருகிறேன்.!
  
இங்கு (வலையுலகில்) அனைத்து எழுத்தாளர்களும், மிகச்சிறப்பாக. மிக நேர்த்தியாக, ஒவ்வொரு பதிவிலும் அருமையான விஷயங்களாக பதிந்து கொண்டிருக்க, ஏதோ, இந்தளவுக்கு எனக்கு எழுத வாய்ப்பு கிடைத்ததே..! என்ற சிறு ஆனந்தத்துடன், (ஒரு சிறு குழந்தையின் குறுநடை போல்) நடை பழகி கொண்டிருந்த எனக்கு இன்று ஒரு சிறந்த விருது கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது..! இதை எனக்கு அளித்த சகோதரர் திரு. கில்லர்ஜிக்கு என் மனப்பூர்வமான நன்றிகள்..! நட்புக்கு இலக்கணமாய், நல்ல சிந்தனைகளும், எண்ணங்களும் நிறைந்தவராய், பல பயனுள்ள பதிவுகளை, எழுதி வரும் சகோதரர் கில்லர்ஜி, அவருக்கு கிடைத்த இந்த விருதை, வலைத்தள உறவுகளுடனும் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று மனதாற விரும்பி, அதில் என்னையும் ஒரு பொருட்டாக அங்கீகரித்து, எனக்கும் பகிர்ந்தளித்த, அவரின் பெருந்தன்மைக்கு, மீண்டும் பணிவுடன் நன்றி ௬றிக் கொள்கிறேன்.
    
இது என் எழுத்துக்கு முதன் முதலில் கிடைத்த பட்டமாகையால், ஆச்சரியம் கலந்த பெரும் ஆனந்தமடைகிறேன்.! இந்த விருதை பெறும் தகுதி எனக்கிருக்கிறதா..? இனி வரும் எழுத்துலகத்திற்கு நம் சாதனையின் பங்கு என்ன..? இதுவரைக்கும் சொல்லிக் கொள்கிற மாதிரி என்னதான் சாதித்து விட்டோம்..? என்ற வினாக்கள் வேறு எழுந்து, விடை தெரியாத ஒரு பயத்தை வேறு அளிக்கிறது..! இருப்பினும், “என்னைத்தேடி வந்த விருது! “நீ, எனக்காக எதையாவது சாதிப்பாய்..! என்ற நம்பிக்கையை வேறு விதைக்கிறது..! இந்த இருவேறு மன நிலையில்தான் இந்தப்பதிவை எழுதுகிறேன்.
     
இந்த விருதை பெற்ற அனைவரும் அதன் விதி முறைகளை கடைப் பிடித்துள்ளார்கள் என்பதை படித்து அறிந்து கொண்டேன்..!
அதன்படி முதலாவதாக, நானும் சகோதரர் கில்லரஜியின் பெருந்தன்மைக்கு தலைவணங்கி அவரின் வலைப்பதிவு விலாசத்தை முதலில் இங்கு பகிர்கிறேன்..!

 
இரண்டாவதாக, என் வலைத்தளத்திலும், சகோதரர் திரு. கில்லர்ஜி அன்புடன் தந்த இந்த முதல் விருதை சந்தோஷமாக, பணிவன்புடன், பதிந்து கொள்கிறேன்.!

மூன்றாவதாக, என்னைப் பற்றி சொல்லிக்கொள்ளும் அளவு சிறப்பாம்சங்கள் எனக்கு எதுவுமில்லை என எண்ணுகிறேன்..! இருப்பினும், விதி முறைகளுக்கு கட்டுப்பட்டு என்நிலை விளக்குகிறேன்..!
1.     நான் ஒரு முழுநேர இல்லத்தரசி..!
2.     என் மூன்று ( வளர்ந்த ) குழந்தைகளுக்கு இனிய அம்மா..!
3.     எனக்கு பழமை மிகவும் பிடிக்கும்..! ஆனால் புதுமைக்கு முழு எதிரியும் அல்ல..! அனுசரித்து போவது வாழ்க்கையின் முக்கிய அம்சங்களில் ஒன்று..! என நினைக்கிறேன்..!
4.     கதை புத்தகங்கள், படிக்க மிகவும் பிடிக்கும்.! அதை வடிக்கவும் மிகவும் விருப்பம்..! ( ஏதோ என்னால் இயன்ற வரை..! எனக்குத்தெரிந்த தமிழ் கொண்டு கிறுக்கி கொண்டுள்ளேன்..!)
5.     இயற்கையை ரசிப்பது, எல்லோருக்கும் பிடித்தமான ஒன்று..! எனக்கும்தான்..! ( நம் கற்பனையை தட்டி விட உதவும் கரங்களே இவைதானே..! )
6.     கோலங்கள் போடுதல், வரைதல், கைவேலைகள் செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும். (ஆனால் முன்பு மாதிரி பெரிய கோலங்கள் போடுவதற்கு இப்போது இடவசதியும் இல்லை..!) முதலாவதை தவிர்த்து மீதமிரண்டையும் முறைப்படிக் கற்றதில்லை..! மற்றபடி என் கற்பனையின் உதவியுடன் அவ்வப்போது அவைகளில் ஈடுபடுவது வழக்கம்..!
7.     கடவுள் (விதிதான் கடவுள் எனவும் நினைக்கிறேன்..!) நம்பிக்கையும் அதிகம்..! விதித்தபடிதான் எதுவும் நடக்கும்..! என்பதில் ஆணித்தரமான நம்பிக்கை கொண்டு வாழ்ந்து வருகிறேன்..!
    அடுத்தது நான்காவதாக, பகிர்ந்தளிப்பது என்பது மிகவும் நல்ல ஆரோக்கியமான விஷயம்..! ஆனால், என்னைத்தேடி வாழ்த்த வந்த நட்பு வட்டங்கள் மிகக்குறைவு..! காரணம், நானும் தேடிப்போய் வட்டத்தைப் பெரிதாக்கும் முயற்சி ஏதும் பண்ணாமல் இருந்து விட்டேன்..! (பதிவுலகை பற்றிய புரிதல் குறைபாட்டின் காரணமோ, இல்லை, என் தாழ்வு மனப்பான்மையோ, இதன் காரணமாய் இருக்கலாம்..!) எப்படியாயினும், இந்த முதல் விருது உங்களில் நானும் ஒரு பதிவர் எனும் விஷயத்தை உறுதிபடுத்தியதால், மனசு இறக்கை கட்டிய பறவையாய், சந்தோஷ வானில் உலா வருகிறது..!
     
இதுகாறும் என்னை ஊக்கப்படுத்தி, என் எழுத்துக்கும் அன்பான பின்னூட்டங்கள் இட்டு, மேலும் எழுத உதவிய (சகோதரர் கில்லர்ஜி யையும் சேர்த்து ) அனைத்து பதிவர்களுக்கும், மற்றும் வலையுலக அனைத்துப் பதிவர்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகளை ௬றிக் கொள்வதுடன், இன்னொன்றையும் விண்ணப்பிக்கிறேன்..! என்னை விட இங்கு உலா வரும் அனைவரும், சிறந்த எழுத்தாளர்கள் என்பது ஐயமின்றி தெரிந்த ஒன்றாகையால், யாருடன் இந்த விருதை பகிர்வது என எனக்கு தெரியவில்லை..! என்னை பொறுத்த வரை வலையுலக உறவுகள் மொத்தமும் இந்த விருதை பெறும் திறமைசாலிகள்தான்..!
எனினும் என் எழுத்துக்களுக்கு கருத்தெனும், உரமிட்டு வளர்த்த இவர்களுடன் இந்த விருதை பகிர்ந்து கொள்வதில் மிகவும் பெருமிதம் அடைகிறேன்..!












எனவே, என் எழுத்துக்களுக்கு ஊக்கமளித்த நீங்கள் இந்த விருதை என்னுடன் சேர்ந்து பகிர்ந்து கொள்ளுமாறு, மனதாற பணிவன்புடன், தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன்..!

அன்புடன்,
கமலா ஹரிஹரன்.

Thursday, September 11, 2014

நல்லதாய் நாலு எழுத்து, பா..ரா..ட்..டு, வா..ழ்..த்..து… என்பது மாதிரி…..! ஏதாவது, சொல்லுங்களேன்…!

டித்ல்… (இது “கற்பது” எனவும் பொருள்படும்) என்பது ஐந்து எழுத்து வார்த்தை..! எ….ழு…து….த…ல்.. என்பதும் ஐந்து எழுத்து வார்த்தை..! இதில் இந்த படிப்பதற்கும், கற்பதற்கும், நேரம், காலம், வயது, வரம்பு, என்று எந்த விதிமுறையும் கிடையாது. “கல்வி ஒரு பெருங்கடல்.!” “அள்ள அள்ள குறையாத செல்வம்..!” “திகட்டாத தித்திப்பு” என எத்தனையோ உவமானம் ௬றலாம்.! எனவே,“கற்றது என்றும் கைமண் அளவுதான்” என்ற கணக்கில், என்றுமே நம் காலம் உள்ள வரை கற்றுக் கொண்டே இருக்கலாம். அதற்கு அளவு கோலே கிடையாது…! படிக்க, படிக்க அனைத்துமே என்றுமே புதிதாய்தான் இருக்கும்..
      
        எழுதுவதும் அவ்விதந்தான்.! ஒவ்வொருவரும் தத்தம் திறமைக்கு ஏற்றவாறு எழுத்து ஆற்றைலையும், வயது வரம்பில்லாமல், பெருக்கிக் கொள்ளலாம். அந்தக் காலத்தில் உறவுகளுக்கிடையே, கடிதங்கள் எழுதும் முறை இத்தகைய ஆற்றலை பெரிதும் வளர்த்துக் கொடுத்தது.! பிறர் மனம் வருந்தாது,  அவசியமானதை மட்டும் எடுத்துணர்த்தி, உறவின் நலம் விசாரித்தல். வீட்டின் தேவைகள், விஷேடங்கள், மற்றும் பல நிகழ்வுகள், சுகங்கள், மனச்சுமைகள், சோகங்கள், என்று அனைத்தையுமே, ஒருவர், தொலைத்தூரத்தில் வசிக்கும் தமைசார்ந்த உறவுகளுக்கு எடுத்தியம்ப, இந்த கடிதங்கள் எழுதும் முறை பெரும் உதவியாக இருந்ததோடு மட்டுமின்றி எழுத்தாற்றலையும் வளர்த்து தந்தது..! (இன்று காலத்தின் முன்னேற்றம் காரணமாக கைபேசியில் ஒருமணி நேரத்திற்கும், மேலாக பேசி, பேசி, பேச்சுத் திறமையை,  வளர்க்கிறோம்.) (அல்லது வளர்ப்பதாக எண்ணிக் கொண்டிருக்கிறோம்..!)
             
        அது மட்டுமின்றி, கதைகள், கவிதைகள், காப்பியங்கள், காவியங்கள் என பன்முகம் கொண்டு எழுதுவோரின், திறமைகளுக்கு ஏற்ப எழுத்துலகம், வீறு நடை கொண்டு வளர்ந்து, இன்று வானுயர்ந்து நிற்கிறது. ப..டி..ப்..பு.. என்ற நான்கு எழுத்தின் வாயிலாக, க..ற்.ப..னை., சி..ந்..த..னை., (இவை எழுதுவதின் அஸ்திவாரம்.) இந்த நான்கு எழுத்துக்கள், “எழுதுதல்,” என்ற திறனை வளர்த்து விடுகின்றன..! இப்படி எழுதி உருவான தரமான நூல்கள், புத்தகங்கள், மீண்டும் “படித்தலுக்கு” உதவுகின்றன..! இந்த சக்கர சுழற்சியுடன், படித்தலும், எழுதுதலும், இருவளையங்களாக நம்மைச் சுற்றி காலங்காலமாய் சங்கிலியாய் பிணைந்துள்ளது..!
                
        இத்தனை விஷயங்களை, நான் யோசிப்பதற்கும், எழுதுவதற்கும் ஒரு காரணம் உள்ளது. (“முத்தி விட்டதோ..?” என அவசரப்பட்டு நீங்கள் முத்திரை குத்துவதற்குள் காரணத்தை ௬றிவிடுகிறேன்..!) அதைச் சொல்லத்தான் இந்த பதிவு..! 
                    
        ஒரு குழந்தை பிறந்து, எழுந்து நடமாடி வளர்ந்து வாலிபத்தை அடைந்து, தன் வாழ்க்கையை பிடித்து கொண்டு சிறப்பாக வாழ்வதற்கு, காரணம், மாபெரும் அந்த பெரும்பங்கு, அந்த குழந்தையை ஈன்றெடுத்து, வளர்த்து ஆளாக்கிய, அந்தக் குழந்தையின் பெற்றோர்களையே சாரும்..! அது போல், புதியவர்கள் பதிவுலகில், எழுதும் திறமை வளர்ந்து முன்னேறி வருவதற்கு, பெரும்பங்கு அவர்களை ஊக்கப்படுத்தி, வளர்த்து விடும் மூத்த பதிவர்களையே (பெற்றோர்களின் அன்பை போல்…) சாரும்..! அது போல் என்னை வளர்த்து விட்ட அன்புள்ளங்களுக்கு நன்றி..! 
                  
        எதற்காக இந்த நன்றி நவின்றல்…? (கண்டிப்பாக இது முத்தின கேஸ்தான் என்ற முடிவுக்கு நீங்கள் வருவதற்குள் சொல்லி விடுகிறேன்..!) சொல்கிறேன்..!
           
        கிரிக்கெட்டில், தம் மனதுக்கு பிடித்த ஆட்டக்காரர் பேட்டிங்கில் முதலில் வந்து விட்டால், அவர் சதம் எடுப்பதற்குள், டி.வி முன் அமர்ந்து ஆட்டத்தைப் பார்த்து ரசிக்கும், ஒரு கிரிக்கெட் ரசிகர் படும் அவஸ்தை அவருக்கும், அவரை படைத்த அந்த கடவுளுக்கும் தான் தெரியும்….!  ஒவ்வொரு ஓவருக்கும், ஒவ்வொரு பிரார்த்தனைகளுடன், அன்றைய வேலைகளை மறந்து (ஏன் தன்னையே மறந்து) அவர் அரைச்சதம் அடித்து முடித்தவுடன், ஒரே சந்தோசம்…! மேலும் முன்னேறி முழு சதத்தையும் தாண்ட ஆவல்…! பல எதிர்பார்ப்புகள்…! இப்படிபட்ட நேரத்தில் அந்த அரை சதத்தை (புதியவர் என்றால்,) ஆடியவர் எடுப்பதற்குள் அவரின் பிரயாசைகள், சிரமங்கள், அவருக்குத்தான் தெரியும்…! ஆனால் ஆட்டத்தில் அனாசயமாக முன்னேறிய பின் ஒவ்வொரு ஆட்டத்திலும் சதங்கள் அவருக்கு புதிதல்ல…!  அது பழகிப்போன ஒன்று..! அவரின் ஆட்டத்தை பார்த்து ரசிக்கும் ரசிகருக்கும், “இவர் வந்தால் வெற்றிதான்! என்ற நம்பிக்கை…! “சதங்களின்றி இவர் களத்திலிருந்து செல்ல மாட்டார்” என்ற பரிபூரண எதிர்பார்ப்பு…! இப்படி ஒரு சூழல், கிரிக்கெட் உலகத்தில்…!
                  
        அப்பாடா…! இப்போது ஒரு வழியாக நான் என் விஷயத்துக்கு வருகிறேன். (இல்லையென்றால், முத்தியதை குணமாக்கும் சில வைத்திய நிலையங்கள் எனக்கு பரிந்துரைக்க படலாம்..! அதற்குள் விளக்கி விட்டு அகன்று விடுகிறேன்..!) (ஒரு சிலர் தரையில் ஏதோ தேடி எடுக்க முயற்சிப்பது தெரிகிறது..!) கொஞ்சம் இருங்க..! இருங்க…! உங்களுக்கே புரிந்திருக்கும் என நினைத்தேன்..! புரியவில்லையா..? நானும் அந்த “புதிய கிரிக்கெட் ஆட்டகாரர்” மாதிரி சிரமப்பட்டு, கஷ்டப்பட்டு ஒரு வழியாக இந்த பதிவுடன் “அரைச்சதம்” அடித்து விட்டேன். இன்னும் முழுச்சதத்திற்கு எத்தனை முயற்சிகளோ.! எத்தனை ஆட்டங்களோ..! எத்தனை நாட்களோ..! ஆனால் “அதுவும் பெற வேண்டும்,” என பிரார்த்திக்கும் பதிவுலக ரசிகர்களின் நல்ல உள்ளங்களுக்கு எனது அன்பான நன்றிகள்..!
   
        எனது நன்றி நவின்றலுக்கு ஒரு வழியாக அர்த்தம் விளங்கி விட்டதா..? இப்போது தலைப்பிற்கு ஏற்றால் போல், ஏதாவது சொல்லுவீர்கள் என்று நிச்சயமாக, ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்…!  
       
                        நன்றிகள் கலந்த
                      கமலா ஹரிஹரனின்