Friday, February 7, 2025

கற்பனையுடன், கலந்த காவியம்.

 அம்மா..! ஏனோ என்னை நீ பெற்றெடுத்தாயே..!!

சூரசேனரின் மகள் குந்திதேவி. அவளின் சிறு வயது இயற்பெயர் பிருதை. (பிரீதா) பகவான் கண்ணபிரானின் வளர்ப்பு தந்தையான வசுதேவருடன் பிறந்தவள். ஸ்ரீகிருஷ்ணருக்கு அத்தை குந்திதேவி. . 

மன்னர் சூரசேனன்  தன் உயிர் நண்பர் குந்தி போஜனின் வேண்டுகோளுக்காக தனக்கு முதலாவதாக பிறந்த மகளை, அவர் மகளாக வளர்க்க விருப்பம் கொண்டு கேட்டதினால் அவருடன் அவர் நாட்டில் வளர அனுமதித்து அவருக்கு தத்தாக தாரையும் வார்த்து தந்தார். அன்றிலிருந்து அவள் பெயர் குந்திதேவி ஆயிற்று.

தன் யாகம், அது சம்பந்தபட்ட பூஜைகள் தடங்கலின்றி செய்ய உதவிக்கு பணிக்கப்பட்டிருந்த இளவரசி குந்தி தேவிக்கு இயல்பாகவே அந்த இளவயதிலேயே இருந்த சிறந்த ஆன்மிக பக்தியில் மனம் மகிழ்ந்து அவளுக்கு குழந்தை வரமருளும் ஒரு மந்திரோபதேசம் செய்து அருளியவர் துர்வாசர் மகரிஷி. மேலும், அவளுடைய பிற்கால வாழ்வையும் தன் ஞானதிருஷ்டியால் உணர்ந்த அவர் தன் தவ வலிமையால் அந்த மந்திரத்தை அவளுக்கு பயனுள்ளதாக இருக்குமென்றே  உபதேசித்தார். ஆனால், அவள் செய்த முதல் தவறு அதனை அந்த ஏதுமறியா இளவயதிலேயே  விளையாட்டாக சூரியபகவானை நோக்கி, பரீட்சித்து பார்த்ததுதான்..! அதன் மூலமாக பிறந்தவன் மாவீரன் கர்ணன்.

பொது வாழ்க்கைக்கு பயந்து அவள் செய்த இரண்டாவது தவறு தனக்குப் பிறந்த அந்த மகனை ஒரு பேழையில் வைத்து கங்கை நதியில் விட்டது. ஆனால், அப்பேழை தெய்வாதீனமாக நதி நீரினால், எந்த பங்கமும் வாராது,  பேழையுடன் மிதந்து சென்று அதிலுள்ள குழந்தை, ஹஸ்தினாபுரம் அரசவை தேரோட்டி அதிரதியிடம் சென்றடைந்து அவனால் சீரும் சிறப்புமாக வளர்க்கபட்டது. 

குழந்தை கர்ணன் வளர்ந்து நல்ல வாலிப வயதில் ஒரு நாள் தன் வளர்ப்பு தாய் தகப்பனால் தன் பிறப்பின் உண்மை அறிந்து தான் ஒரு பெற்றோர் யாரென தெரியாத அநாதை குழந்தையாக அடையாளம் காட்டப் பெற்ற போது துடித்துப் போகிறான். சென்ற இடமெல்லாம் அவமானம், இன்னாரின் மகன் எனத் தெரியாத அசிங்கங்கள் என மனம் துவன்ற போது, ஒரு காலகட்டத்தில் ஹஸ்தினாபுரத்து மூத்த இளவரசன் துரியோதனனுக்கு உயிரினும் மேலான நட்பாகினான். 

அவனால், சிற்றரசராக ஒரு ராஜ்ஜியம் பெற்று, மணிமுடி, பேர் புகழ் என அனைத்தும் கிடைத்தன. துரியோதனின் நன்மதிப்பால் பதவியேற்று நாட்டில் நல்லாட்சி செய்த போது, இவன் தேரோட்டி மகன் என்ற அவச்சொல் கொஞ்சம் மறைந்து, பிறர் கேட்டதை கொடுப்பதற்கென்றே பிறந்திருக்கும் கர்ண மாமன்னன் என்ற நல்ல பெயர் வந்தது. 

அடுத்து ஹஸ்தினாபுரத்தில் நாடும் சூதும் ஒன்றையொன்று தழுவி மகிழ்ந்தன. துரியோதனனின் சிற்றப்பா பாண்டுவை முறைப்படி மணமுடித்தும் குந்திதேவி தன் கணவனாகிய பாண்டுவுக்கு ஏற்பட்ட குழந்தைகள் இல்லாத ஒரு சாபத்தினாலும், மாற்றாக தன் சிறு வயது பழைய  மந்திர பலன்கனாலும், பெற்றெடுத்த பாண்டவர்களாகிய ஐவருக்கும், துரியோதனன் உட்பட கௌரவர்களாகிய திருதராஷ்டிரனின் நூறு புதல்வர்களுக்கும், பங்காளி சண்டைகள் பாரபட்சமின்றி உருவாயின. கௌரவர்கள் தங்களுடைய கபட சூதாட்டத்தில் வென்ற நாட்டின் அதில் இருவருக்குமான பங்கீடு வார்த்தைகள் படு தோல்வியில் முடிந்தன. 

கௌரவர்களின் தீய மதியினால் விளைந்த சூதும், சிக்கலும், பாண்டவர்களை முடிந்த வரை பழி வாங்கியும், இனி வருந்தி பயனில்லை என்பதாக தலை குனிந்து மெளனித்திருந்தன. தர்மத்தை அதர்மம் வெல்ல துடிதுடித்து கொண்டிருந்தன. 

விளைவு.. போர்...! குருஷேத்திரம் குருதி புனலில்  மூழ்கி தத்தளித்தது. பதினெட்டு நாள் யுத்தத்தில் நாட்டு மக்கள் பல்லாயிரக்கணக்கானவர்கள் மடிந்தனர். பாண்டவர்களின் வாரிசுகளும், கௌரவர்கள் அனைவரும், நாட்டுக்காக தம்முயிரை துச்சமாக நினைத்த அரசவை சான்றோர்கள், பெரியவர்கள் என அனைவரையும் யுத்தம் காவு கொண்டது. இறுதியில் தர்மம் வென்றது. அதர்மம் இயன்றவரை போராடி அனைவரின் உயிர்களையும் நடைபெற்ற போருக்கு பரிகாரமாக எடுத்துக் கொண்டபடி. தோற்றது. 

பழைய நினைவுகளில் மூழ்கியிருந்த குந்திதேவி நினைவலைகளை விட்டு விலகி, ஒரு நீண்ட பெருமூச்செறிந்தாள். எத்தனை கொடிய சம்பவங்கள்  யாரிடமும் கேட்காமல், யாரையும் எதிர்பாராமல் நடந்து முடிந்து விட்டன. 

தன் வாழ்வில்தான் ஆரம்ப முதற் கொண்டு எத்தனை இன்னல்களை அனுபவித்தாயிற்று...! ஒன்றா...! இரண்டா..! வாழ்வில் அடுத்தடுத்து வந்த இன்னல்களை பொருட்படுத்தாது இன்முகத்துடன் மெளனமாக ஏற்று கொண்டதினால்தான்,சிறுவயதில் இருந்தே தன்னை ஒரு துறவியின் மனநிலையில் வாழுபவள் என்கிறார்களோ ..? 

தந்தைக்கு மதிப்பும் தந்து, பின் வளர்ப்பு தந்தைக்கு தன்னுடைய எந்த ஒரு செயலாலும் களங்கத்தை ஏற்படாமல் பார்த்துக் கொண்டு, திருமண வயதில் தனக்கு பெற்றோர் ஏற்பாடு செய்த சுயம்வரத்தில் தனக்கு மணாளனாக அமைந்த ஹஸ்தினாபுரத்து அரசன்  பாண்டுவுக்கு மனதாற மரியாதை செலுத்தி, புகுந்த நாட்டின் அரசவை பெரியவர்களையும், சான்றோர்களையும், உறவுகளையும் அவர்களின் வார்த்தைகளையும் சத்தியமாக நினைத்து மதித்து, எந்த துன்பங்கள் வந்த போதும், தன் பிள்ளைகளுடன் அனுசரித்து போய், சிறந்த அறிவுரைகள் கூறி அவர்களை வளர்த்து, இறுதியில் தர்மம், தர்மம் என்று, அதன் பால் கொண்ட நல்மதிப்புக்காக பெரும் அறப்போரை சந்தித்து, அன்பானவர்களையும், உறவுகளையும் இழந்து, கடமை என்ற ஒரு செயலுக்காக தன் புத்திரர்களை ஹஸ்தினாபுரத்து அரியணையில், அமர்த்தி அரசாள வைத்துப் பார்த்து, பிறகு வயதான தன் மைத்துனர்கள், மற்றும்  உடன்பிறவா சகோதரி காந்தாரியுடன் அவர்களின் வருத்தத்தையும், வார்த்தைகளையும் கண்டு தானும் மனம் வருந்தி, அவர்கள் வானபிரஸ்தம் ஏகுகையில், அவர்களை தட்டி அரசவையில் இருத்தி வைக்க இயலாமல், தானும் துறவு பூண்டு வனவாசம் ஏகி, அங்கு வசித்த பல வருடங்களுக்குப்பின், அந்தக் காட்டில் எழுந்த  காட்டுத்தீயின் வெப்பத்தையும், குளிர் நிலவாக ஏற்று வாழ்ந்த அந்த உலக வாழ்வை முடித்து விட்டு  இங்கு வந்தாகி விட்டது. 

இன்று வலிய வந்து ஏற்றுக் கொண்ட இருப்பிடம் இது. இதில் குறையொன்றும் இல்லை..! செய்த தவறுக்கு பரிகாரம் தேடித்தான் இந்த வாழ்வை ஏற்று வந்துள்ளேன் என மனத்துள்  கூறிக் கொண்டாள் குந்திதேவி. 

துறவு என்பதை வாழ்வின் இறுதி காலத்தில், எல்லாம் நடந்து முடிந்த பின், புகுந்த வீட்டு உறவுகளின பேச்சுக்கு கட்டுப்பட்ட பின், பிறகுதான் முழுமையாக ஏற்றுக் கொண்டேனா என்றால், இல்லையென்று தன் உடல்  நிச்சயத்துடன் கூறுகிறது என்பதையும் அவளால் மறுக்க இயலவில்லை. 

குந்தி ராஜ்ஜியத்தில் வாழ்ந்த போது வாலிப மனதில் அப்போது எத்தனை ஆசைகள்..? இளமை பருவத்தில் இளவரசியாக வசதியாக வலம் வந்து வாழ்ந்த காலங்கள்...! மங்கைப் பருவத்தில் ஹஸ்தினாபுரத்து மன்னர் பாண்டுவை சுயம்வரத்தில் கைப்பிடித்தவுடன் மனதில் ஏற்பட்ட ஒரு இனம் புரியாத சந்தோஷங்கள்...! அப்போது தன்னால் அவைகளை துறவு நிலையுடன் விலக்கி வைக்க இயலவில்லையே..! 

மணந்த கணவரிடம் தன் இளவயது தவறை சமயம் பார்த்துச் சொல்லி, மன்னிப்பு கேட்டு விட்டு வாழ்வின் சந்தோஷங்களை தொடரலாம் என்று தானே அந்த ஆசைப்பட்ட மனது துடித்தது. ஆனால், அதுவரை ஆசைப்பட்ட அந்த மனது அண்டை நாட்டுடன் போருக்குச் சென்ற கணவர் போரில் கிடைத்த பரிசாக மற்றொரு நாட்டுப் பெண்ணை மணமுடித்து கைப்பற்றி வந்ததை கண்டதும், பிறகு தன் கணவர் அவர் பெற்ற சாபத்தின் காரணமாக, நாட்டை விட்டு, கானக வாழ்வை ஏற்றுக் கொண்ட போது, தாம் இருவரும் அவருடனேயே கானகம் செல்ல வேண்டிய சமயங்களில்தான், முழுமையான துறவை நோக்கி, மனதுடன் உடலும்  செல்ல ஆரம்பித்து விட்டதை அவள் முழுவதுமாக உணர்ந்தாள். ...! 

பிறகு கணவர்  "தான் இரு மனைவிகளை பெற்றும், தன் சந்ததியினரை பெறாமலேயே  தன் வாழ்வு இவ்வாறு முடிய நேருகிறதே" என வருத்தமுற்று பேசிய ஒரு  சூழ்நிலையில், அதுநாள் வரை மூடி மறைந்திருந்த தன் மனதில் உள்ள அந்த உண்மையை எடுத்துச் சொன்ன போது, கணவரின் ஆஞ்கைபடி மூன்று மகன்களை தன் மந்திர உச்சாடன மகிமையில் ஈன்றெடுத்த தந்த போதும், மனதில் எவ்வித ஆசாபாசங்களுக்கும் இடம் தரவில்லையே...! அதனால்தான் தனக்கு  இளையவளான மாத்ரி கேட்டவுடன் அவளுக்கும் அந்த மந்திர உபதேசம் செய்வித்து, அவள் மூலமாகவும், இரு குழந்தைகளை தன் கணவருக்கு தர முடிந்தது. 

பின்பு விதி வழி அன்பு கணவரையும், இளையவள் இழப்பையும் தாங்கிக் கொண்டு பெற்ற குழந்தைகள் ஐவரை வளர்த்து காக்கும் பொறுப்பை சுமந்த போதும், மனது சமநிலையில்  பக்குவமடைந்து விட்டது. அந்த பக்குவந்தான் புகுந்த நாட்டுக்கு வந்து சேர்ந்ததும், பெரிய மைத்துனர் திருதராஷ்டிரனின் நூறு குமாரர்கள் தங்கள் புதல்வர்களை அலட்சியபடுத்தி, அவமானப்படுத்தி பார்க்கும் போதும், தன் புதல்வர்களுக்கு அமைதி காக்கும்படி அறிவுரைகள் சொல்ல வைத்தது. 

விதி அத்தோடு அவளை விட்டதா? இளவயதில், அறியா பருவத்தில் பெற்ற மகனை, நதி நீரில் அனுப்பி வைத்த மகனை, சந்திக்க வைத்து, அவனிடம், தங்களுடன் வந்து விடுமாறு அறிவுறுத்தி, அவன் அதை மறுத்து சொன்ன அந்த வார்த்தைகளில், அவனிடம் உள்ள நியாயத்தை புரிந்து கொண்டு, அவனிடமே இரண்டு கடுமையான வரங்களை கேட்கும்படி செய்த அந்த விதியிலும், அவள் பக்குவப்பட்ட மனம் அதிகம் கலங்காமல் சமனபட்டுதான் இருந்தது. பதிலுக்கு அவன் கேட்ட இரு வரங்களையும் தர முடிந்தது. 

இறுதியில் அந்த தலைமகன் சொன்னபடி போரில் வீரமரணம் அடைந்து உயிர் நீத்த போதும், அந்த மகனை வாரி அணைத்து, "இவனும் என் மகன்" என ஊரறிய சொல்லும் போதும், மனது அழுது துவண்டாலும் நிலைகுலைந்து போகாமல், ஒரு துறவியின் ஒருமை சார்ந்த எண்ணத்தில் வலுப்பட்டுத்தான் நின்றது. ஆனால், தன்னால் அவன் வாழும் போது பெற்ற அவமானங்களை தினமும் நினைக்கும் போது மனம் சஞ்சலங்களில் ஆழ்ந்ததை மட்டும் அவளால் தவிர்க்க இயலவில்லை. இதோ...! அதற்காகத்தான், ஒரு பிராயசித்தமாக இந்த இடத்தை அவள் தேர்ந்தெடுத்து பிடிவாதமாக வந்துள்ளாள். 

"அம்மா...! தாங்களா?" என்ற குரல் கேட்டு மீண்டும் கலைந்தாள் குந்திதேவி.

"யார்.. பாஞ்சாலியா..? நீ ஏனம்மா இங்கு வந்தாய்..? உன்னை யார் இங்கு வரச்சொன்னது? உன்னை இங்கு அனுப்ப வேண்டிய அவசியம் யாருக்கு வந்தது.? எப்போதுமே அமைதியாக ஒலிக்கும் அவளின் குரல் பாஞ்சாலியின் பதிலுக்காக பரபரத்தது. 

" அம்மா..! நீங்கள் முதலில் சொல்லுங்கள்...! எதற்காக நீங்கள் இங்கு வாசம்..?நான் உங்களை இங்கு சற்றும் எதிர்பார்க்கவேயில்லை...!" பாஞ்சாலியின் வருத்தம் குரலில் தெரிந்தது.

"என் பிராயச்சித்தம் தேடி நானாக இங்கு  வந்திருக்கிறேன் மகளே..! இது இறைவன் அளித்த முடிவல்ல..! நானே விரும்பி அளித்துக் கொண்ட தண்டனை....!"ஆனால், உன்னை நான்  இங்கு எதிர்பார்க்கவில்லை. நீ எப்படி இவ்விடம் வந்தாய்..? அதைக்கூறு..! அழுத்தமாக வந்த அந்த குரலுக்கு பணிந்தாள் பாஞ்சாலி. 

மஹாராணி காந்தாரியின் சாபத்தினால், யாதவ குலம் ஒருவரை யொருவர் அடித்துத் தாக்கிக் கொண்டு அழிந்ததையும், அதன் மன்னனான கிருஷ்ணர் அதை கண்டு மனம் பொறுக்காமல், தான் இந்த பூலகில் வந்த தன் அவதார நோக்கம் முடிவுற்றதை மக்களுக்கு உணர்த்த வேண்டி, தம் பூத உடல் விட்டு வைகுண்டம் திரும்பியதையும் விவரித்து கூறினாள். 

"மேலும், பஞ்ச பாண்டவர்களும் கிருஷ்ணர் இல்லாத உலகில் வாழ விருப்பமின்றி, தங்கள் மகன் அபிமன்யுவின் புத்திரனாகிய பரீஷித்துவுக்கு அரசனாக பட்டம் கட்டி விட்டு, பூவுலகை துறக்க எண்ணம் கொண்டு உயிருடன் சொர்க்கத்தை அடைவதற்காக  மேருமலை ஏறி நடந்து வந்து கொண்டிருக்கும் போது, தான் முதலில் மயக்கமுற்று மடிந்ததினால், இங்கு வந்த கதையையும் கூறினாள் பாஞ்சாலி." 

"ஆ...!!! என் அன்பு மருமகன் கிருஷ்ணனுக்கா இந்த முடிவு..! மற்றவர்களின் செயல்களை மட்டுமின்றி அவனின் செயல்களையும்  அவன்தானே தீர்மானிப்பான். ...! அவனால் யாதவ குலத்தை கட்டுப்படுத்த இயலவில்லையா. ..?  என்ன ஒரு சோகம்..! ஆனால், எல்லாமே அவன் நினைத்ததை  நடத்தும் மாயைதான்...! இருந்தும் இங்கிருக்கும் எனக்கே அவன் மறைவு செய்தி வருத்தத்தை தரும் போது, அவனால் மட்டுமே, அவன் வார்த்தைகளின் போக்குப்படி அசைபவர்கள் நீங்கள் அனைவரும்...! உங்கள் மனதும் எனக்குப் புரிகிறது....!! சரி.. நீங்கள் அனைவரும் சொர்க்கத்தை அடைய எண்ணம் கொண்டு சேர்ந்து  செல்லும் போது, உனக்கு மட்டும் ஏன் இந்த முடிவு உண்டாயிற்று...? மகளே...!"குந்தியின் கவலை அவள் குரலில் ஒலித்தது. 

"காரணம்.. அதை நான் எப்படிச் சொல்வேன் அம்மா..! நான் உங்கள் குமாரர்களாகிய பஞ்ச பாண்டவர்களில், இளைய குமாரர் பார்த்தனின் மேல் வைத்த தனிப்பட்ட பாசந்தானாம் அம்மா..! ஐவரை விட அவர் மேல் நான் தனிப்பட்ட பக்தி, தனிப்பட்ட அதீத பாசம் வைத்திருந்தேனாம்..! இது எப்படி சாத்தியமாகும்...!! என்னையறியாமலேயே பார்த்தன் பேரில் நான் அதிகம் பற்று வைத்திருந்தேனா அம்மா...! இது உண்மையா அம்மா..! விசும்பலாக வந்தது பாஞ்சாலியின் குரல். 

"அது நீ அவனை மட்டும் மணமுடிக்க  நினைத்திருந்த போது, தீடிரென மாற்றங்களை எதிர்பார்த்திராத ஒரு காரணத்தால் கூட வந்ததாக இருக்கலாம். என்ன செய்வது? என் வாயிலாக உன் வாழ்க்கைப் பாதை மாறியது. நீ தவறேதும் செய்யவில்லை மகளே..! உன் குணத்துக்கு நீ எப்படியோ அப்படியேதான் இருந்தாய்..! இப்போதும் இருக்கிறாய்...! நீ ஒரு உத்தமி அம்மா...! உத்தமி. அதில் என்றும் மாற்றமில்லை மகளை... வீணாக வருந்தாதே...!! அன்றும் சரி,..! இன்றும் சரி..! என் வார்த்தைக்கு மறுப்பேதும் சொல்லவில்லை. உன்னைப்போல் ஒரு மருமகளைப் பெற.... இல்லையில்லை...., ஒரு மகளைப் பெற நான்தான் தவம் செய்திருக்க வேண்டும். 

இதோ... நானும்தான் நீ சொல்லும் அந்த மகனின் மேல் அதிக பாசம் வைத்து, என் வயிற்றில் பிறந்த அறுவரில் பெரியவனை இழந்து விட்டேன். இழந்ததோடு மட்டுமின்றி, அவனின் வாழ்ந்த காலம் தொட்டு மடியும் வரை அவனுக்கு ஏற்பட்ட  அவமானங்களுக்கு காரணமான நான் ஒரு பெரும் பாவியம்மா..... பாவி.. ! அந்தப் பாவத்தை எங்கு  எப்படி நான் கழித்து தீர்க்கப் போகிறேன்....?  அதனால்தான் காட்டுத் தீயில் மடிந்த பின், உன் பெரிய மாமனார்கள், அருமை தாயார் காந்தாரி அவர்கள் என யார் சொல்லியும் கேட்காமல், அனைவருக்கும் கிடைத்த அந்த  சொர்க்கத்தின அழைப்பை என்னையும் பகிர்ந்து கொள்ள அழைத்தும் கூட ஏற்று செல்லாமல் பிடிவாதமாக இந்த நரகத்திற்கு வந்தேன். ஆனால், இங்கும் என் வயதிற்காக எந்த கடுமையான வேலைகளும் தராமல், மரியாதை தந்து நோகடிக்கிறார்கள்...! நொந்து கிடக்கும் மனதிற்கு மருந்தாக என் உடலையும் கொஞ்சம் கடுமையான வேலைகளினால் நோகடித்தால்தானே எனக்கு....,!! நான் செய்த பாவத்திற்கு  பரிகாரமாக இருக்கும்...!! "கண்களில் கண்ணீருடன் ஒரே மூச்சில் குந்தி தேவி சொல்லி முடிக்கவும், அர்ஜுனன் நகுலன் சகாதேவன், பீமன் என நால்வரும் அங்கு வந்தனர். 

" அம்மா...! நீங்கள் எப்படி இங்கு...?" என பாஞ்சாலி கேட்ட அதே கேள்வியுடன் பதறி போய் அருகில் வந்து அவள் கைகளைப் பற்றிக் கொண்டனர். 

எதிர்பாராது காலடியில் பணிந்து நிற்கும் தன் அன்பு மகன்களை கண்டதும் குந்திதேவி திகைத்துப் போனாள். 

"குமாரர்களே ..! என் கேள்வியும் அதுதான்...! இப்போதுதான் பாஞ்சாலி வந்தாள்.. அடுத்தடுத்து நீங்களும் இங்கு வர காரணம்...? உங்களில் மூத்தவன் உங்கள் அண்ணன் எங்கே..? அவனை தனித்து விட்டு, விட்டு இப்படி வர உங்களுக்கு யார் ஆஞ்கையிட்டது...? திகைப்பு நீங்கி குந்திதேவியும் சற்றே கோபத்துடன்  கேட்டபடியே தன் மகன்களை அவர்கள் தலையை தொட்டு ஆசிர்வதித்தாள். 

" அம்மா..! அவரவர்களின் திறமைகள் மேல் நாங்கள் எங்களையறியாமலே அதிகமாக பெருமை கொண்ட காரணத்தால் இங்கு வர நேர்ந்தது...! அண்ணன் அவர் தர்மத்தில் என்றும் சிறிதும் பிறழாதவர் என்று தாங்கள் அறிவீர்கள். அவரின் செயல்கள் எவருக்குமே துன்பத்தை தராதபடிக்கு கடமை வீரராக மட்டுமே வாழ்ந்தவர். அதனால்,அவர் இப்போது அவருக்கு  விருப்பமின்றியே இருந்தாலும், சொர்க்கத்தை சென்றடைந்து இருப்பதாகவும் அறிந்தோம்..! அங்கு அவர் அனைவரின் விருப்பங்களை உணர்ந்து செயலாற்றி சத்திய தர்மங்களை அனுசரித்து நடந்து கொள்வார். இருப்பினும், இப்போது எதிர்பாராது உங்களிருவருடன் இங்கு நாங்கள் சேர்ந்திருப்பதையே எங்களின் சொர்க்கமாக கருதுகிறோம்...! அர்ஜுனன் அமைதியாக கூறியபடி அன்னையின் கைகளை வாஞ்சையுடன்ப் பற்றிக் கொண்டான். 

குந்தியின் மனம் சோர்வுற்றது....! "யாருமில்லாத தனிமையுடன் ஒரு துறவியின் மன நிலையோடு, தன் பிராயசித்தத்தை இங்கு கழிக்கலாமென்று வந்தால், இப்படி தன்னை சூழ்ந்த உறவுகளும் வந்து தங்களையும் என்னுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டு சந்தோஷமடைகிறார்களே..!" என்ற வருத்தம் மேலோங்கியது அவள் மனதில்...! 

"குழந்தைகளே..! உங்களுக்கு ஏன் இந்த முடிவு..?  உங்களை பூலோகத்தில் ஒரு பொழுதேனும், வாழ விடாமல் இம்சித்து பார்த்து சந்தோஷமடைந்தவர்கள் அனைவரும் சுவர்க்கத்தில் இருக்க, நீங்கள் ஏன் இப்படி மறுபடியும் அல்லாட வேண்டும்..? ஏன் இந்த சோதனைகள் மறுபடியும்...! இது இறைவனுக்கே அடுக்குமா..? குந்தி தன்னையறியாமல் மனம் நொந்து கூறி கண்ணீர் விடவும், "

" அதைத்தான் அம்மா நானும் அங்கு சென்றவுடன்  கேட்டேன்..! உன் மனதில் இன்னமும் கௌரவர்கள் மேலுள்ள கோபங்கள் அசூயைகள் குறையவில்லையா..? நடந்த போரில் தர்மம் தோற்காது வெற்றிகளை உனக்கு அள்ளி அளித்தும் அவர்கள் மேலுள்ள உன் மனதின் வன்மங்கள் அழியவில்லையா ? நீ எத்தனை தர்மங்கள் செய்தும், உன் அறியாமையால் இப்படி உன் ஒன்று விட்ட  சகோதரர்களை இகழலாமா? அதனால் நீயும் உன் தம்பிகள், மனைவியுடன் சிறிது காலம் நரகத்திலிருந்து வா" வென தர்ம தேவன் என்னையும் இங்கு இருக்கப் பணித்து விட்டார்..! மேலும் கௌரவர்கள் மட்டுமின்றி குருஷேத்திர பூமியில் வீரமரணம் அடைந்த காரணத்தினால் அனைவரும் இன்று சொர்க்கத்தின் நிரந்தரவாசிகள் ஆகி விட்டார்கள். ஆசைகளையும், பற்றையும், அதன் காரணமாக எழும் கோபங்களையும் விடாதிருக்கும் எங்களுக்குத்தான் இந்த நிலை. எனக்கும் தம்பிகள், பாஞ்சாலி இல்லாமல் அங்கு தனித்திருக்க விருப்பமின்றி தோன்றவே உடனே இங்கு வந்து விட்டேன் அம்மா...!!" என்றபடி அங்கு தர்ம புத்திரர் வரவும் சரியாக இருந்தது. 

அனைவரும் தீடிரென அவர் சொல் கேட்ட அதிர்ச்சியிலிருந்து மீண்டு வந்த பின் ஒருவரையொருவர் பிரியமுடன பார்த்து கண்களால் அன்பை பகிர்ந்து கொண்டனர். 

" அம்மா..! எங்களை விடுங்கள்..! நீங்கள் இப்படி விரும்பி இங்கு வரலாமா? உங்கள் வயதிற்கு எத்தனை இன்னல்களை அனுபவித்து விட்டீர்கள்..! அதை விடவா உங்கள் பிராயசித்தங்கள்..? உங்களை நாங்கள் அறிவோம் அம்மா..! உங்கள் மனதால் நீங்கள் யாருக்கும் கெடுதல்களை நினைத்ததில்லை...! அப்படியிருக்கும் போது ஏன் இந்த முடிவெடுத்து உங்களை நீங்களே வருத்திக் கொள்கிறீர்கள்...? தர்மர் அன்னையின் அருகில் வந்து அமர்ந்தபடி இதமாக பேசினான். 

"குழந்தாய்.. நீ தர்மத்தின் புதல்வன்.. இப்படித்தான் உன்னால் யோசிக்க முடியும்...! ஆனால், நான் உன் தமையனுக்கு அளித்த வேதனைகளை நீ அறிவாயா.. ? உங்களை நான் எங்குமே எப்போதுமே எந்த நிலையிலுமே விட்டுத் தந்ததில்லை. மகிழ்வுகளும், அதே சமயம் வேதனைகளும், சூழும் போது, உங்களுக்கு பக்கபலமாக நான் உங்களுக்கு அருகிலேயே இருந்துள்ளேன். இரண்டையும் சமமாக பார்க்கும்படி கற்றுத் தந்துள்ளேன். விளைவுகளை கண்ட போதில் சமாதானபடுத்தியுள்ளேன். ஆனால், அவனை பிறந்தவுடன், மனமொப்பி இல்லையென்றாலும், என் ராஜ வாழ்க்கைக்கு புறம்பானதாக, ராஜ குடிமக்களுக்கு, அவச்சொற்களை தந்து விடக் கூடியதாக அவன் பிறப்பு இருந்து விட கூடாதே என்பதற்காக, அவன் வாழ்வை அவனை கேட்காமலேயே தியாகம் செய்ய வைத்த பெரும் பாவியடா நான்...! 

"அன்று உங்களுக்கு பக்கபலமாக, தூணாக, நின்ற மாயவனின் மூலமாக அவன்தான் என் மகன் எனபதையறிந்து, அவனைப் பார்க்கச் சென்ற போது, அவனின் தாயார் நான்தான் எனக் கூறியும் சிறிதளவும்  நம்பவில்லை அவன். 

மாறாக இப்படி ஒரு தாயார் கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டுமென என்னை பெருமைபடுத்தினான். என் சோகத்தை குறைப்பதற்காக உங்களை நீங்களே இப்படி பொய்யுரை சுமந்து வந்து கூறி என்னை ஆசுவாசபடுத்துகிறீர்களா என கேட்டு அவனை அவனே குறைத்து மதிப்பிட்டு கொண்டான். 

இறுதியில் உண்மை அவனின் மனதோடு உரத்து உரைத்ததும், "அம்மா...!  இன்றாவது என்னை பெற்றெடுத்தீர்களே..!!" என என்னை கௌரவப்படுத்தினான். அவனை நான் பெற்றதற்கு மகிழ்ந்த அந்த தருணத்திலிருந்து, "அம்மா..! என்னை ஏனோ நீ பெற்றெடுத்தாயே...!  என இன்று வரை நான் ஒவ்வொரு நாளும், என் தாயை நினைத்தபடி, பொழுதுக்கும் வருந்தி நிற்கிறேன்.  

அத்தனை நாள் பிரித்து வைத்த கோபத்தை அந்த நேரத்தில் சிறிதேனும் காட்டவில்லை அந்த குணமுடையோன். என்னை கண்ட சந்தோஷத்தில், நான் கேட்ட வரங்களை தட்டி கழிக்காமல் உடனே பரிசாக தந்தவன், பதிலுக்கு அவன் இரு வரங்களை கேட்டு என் வாயை கட்டிப் போட்டான். அச்சமயம் பேச்சிழந்து நின்றேனே ஒழிய  மூச்சிழந்து போகவில்லை நான்..! 

"கௌரவ படைகளுக்கு போர் பதவிகள் பங்கிட்டு தரும் சமயத்தில், "நீ வீரன் அல்ல...! பெற்றவர்கள் யாரென தெரியாத  கோழை" என சான்றோர்கள் இழிந்து பேசிய வருத்தத்தில், "இத்தனைக்கும் காரணம் என்னைப் பெற்றெடுத்த அந்த அன்னை...! அன்னையா அவள்...! பெற்ற மகனை நதியில் இட்டு கொல்ல நினைத்த ஒரு பாவி... அரக்க குணமுடைய அவள் ஒரு அன்புத் தாயாக இருந்திருக்க மாட்டாள். ...? அவளால்தான் எனக்கு இந்த இழிவு..! இப்போது என் வயிறெரிய கூறுகிறேன். .அவள் செய்த இந்த  பாவங்களுக்கு அவள் ஏழேழு பிறவிக்கும் அவள் நரகத்தில்தான் வாசம் செய்ய வேண்டும்...!" என்று மனம் கடிந்து, உடல் கடினப்பட்டு கூறினானே ...!  அந்த சொல் சொல்லுமளவுக்கு அவன் மனம் எந்த பாடு பட்டிருக்கும்...? அந்த பாவத்திற்கு, பரிகாரமாக, அவன் சொல்படி நான் பிராயச்சித்தம் செய்ய வேண்டாமா கூறுங்கள்...!!" குந்திதேவி இத்தனை நாள் சோகத்தையும், மனதில் ஏற்பட்ட வருத்தத்தோடு சேர்த்து கண்ணீராகவும் கொட்டித் தீர்த்தாள். 

பாண்டவர்கள் ஐவரும், பாஞ்சாலியும் அவளை எப்படி தேற்றவது எனத் தெரியாமல் தவித்தபடி இருந்தனர். இதுநாள் வரை தன் உணர்ச்சிகளை வெளிக்காட்டாது அமைதியாகவே இருந்த தாய் இன்று இப்படி உடைந்து போவாள் என்பதை அவர்கள் சற்றேனும் எதிர்பார்க்கவில்லை. 

" அம்மா.." ஆ.....! அன்று கேட்டு புளகாங்கிதமடைந்த அதே குரல்...! காதுகளில் தேனாக பாயந்து நாவின் வழி இறங்கி, அதன் சுவையை மனதுக்குள் பாய்ச்சியது குந்திதேவிக்கு. அங்கே கர்ணன் பழைய தேஜஸ் பெற்ற பொலிவோடு அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தான்.

"கர்ணா.. என் அன்பு மகனே....! என்று பாய்ந்து சென்று அவனை தழுவி வரவேற்க குந்தியின் கைகளும், மனதும் பரபரத்தன. ஆனால், ஏதோ குற்ற உணர்வு தடுக்க, மனதை அடக்கியபடி "கர்ணனா..! வா. ! மகனே..! " என்றாள். 

" அம்மா..! நீங்கள் பேசியதெல்லாம் கேட்டேன். அன்று உணர்ச்சிவசப்பட்டு சொன்ன என் வார்த்தைக்காக உங்களுக்கு ஏனம்மா இந்த தண்டனையை வழங்கிக் கொள்கிறீர்கள்.? அன்று அந்த சான்றோரின் மனதில் உதித்த நல்ல எண்ணந்தான் என்னை முதல் நாளைக்கே யுத்தத்திற்கு செல்ல விடாமல் தடுத்தது என்றாரே..! அதனால்தான் என் நண்பனுடன் இன்னமும் பல நாட்கள் நான் பூவுலகில் இணைந்திருக்க முடிந்தது. அம்மா...! இப்போதும் என்னை வாழ வைத்த தெய்வம் சொல்லித்தான், அவன் வருத்தத்தை கண்டதும் நான் இங்கு வந்தேன். நீங்கள் படும் சிரமங்களை என்னால் பார்க்க இயலவில்லை. புறப்படுங்கள்..! இப்போதே..!  நாம் இங்கேயாவது சேர்ந்து வாழ ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததேயென என் மனம் பூரிக்கிறது... வாருங்கள் அம்மா...!போகலாம் " என்றபடி தன் கரம் பற்ற வந்த மகனை தன் கரம் கொண்டு விலக்கினாள் குந்திதேவி. 

" இல்லை.. மகனே...! உன் வாக்கு பொய்யாக கூடாது..! நான் சில காலம் இங்கிருந்து விடுகிறேன். அதுதான் நம் அனைவருக்குமே நல்லது...! மீண்டும் காண வேண்டிய பந்தங்களை காணும் போதும், கண்ட போதும், மனதில் அனேக கனல்கள் உருவாகும். அதை இந்த சுவர்க்க பூமியும் தாங்காது. மேலும், என்னால் மீண்டும் ஒரு பிரளயத்தை சகிக்க இயலாது..!" குந்தியின் குரலில் இப்போது கொஞ்சம் பயம் தெரிந்தது. 

" அம்மா..! அவ்விதம் இப்போது ஏதும் நடவாது என உறுதி தந்திருக்கிறார் உன் மருமகன்....!கர்ணனின் பேச்சில் குறும்பு தொனிக்கவும், திடுக்கிட்டாள் குந்திதேவி. 

"யார்..?  அந்த மாயவனா..? அவனும் இங்கே வந்து விட்டனா ?  குந்தி சுற்றுமுற்றும் நோக்கவே, "அத்தை..!! நான் எங்கு போயிருந்தேன். திரும்பி வருவதற்கு...? உங்களுடன்தானே எப்போதும் என் வாசமும்..!! என்ற குரல் கேட்டு மெய்சிலிர்த்தாள் குந்தி தேவி. 

அங்கு கிஷ்ணரின் விஜயம் கண்ட போதினில், அது அனைவருக்குமே அளவு கடந்த மகிழ்ச்சியை அளித்தது.

" அத்தை.! உன் சந்தேகங்கள் தீர்ந்ததா ? நான் இந்த அவதார நோக்கத்தில் எடுத்த பிறவி உலக மக்களின் நன்மை கருதியே..! அதன் நன்மைக்காக நீங்கள் அனைவரும் என் மனதை புரிந்து கொண்டவர்களாக பிறந்து வாழ்ந்து,வீழ்ந்து இப்போது மறுபடியும் என்னுள்ளேயே கலந்து விட்டீர்கள். இனியேது மறுபடி, சூது, வாது, யுத்தம் பூசல் பிரிவெல்லாம்...? கலங்காதே அத்தை. இனி அனைவரும் என்னிருப்பிடத்திலேயே கலந்து விடலாம்...! "வா.. உன் மக்களுடன்.. அங்கே உனதருமை கணவரும் காத்திருக்கிறார். நீ செய்த தான தர்மங்கள், உன் நல்ல உள்ளத்தின் பிரதிபலிப்புகள் அங்கு உன் நிழலாக இருக்க வேண்டி காத்திருக்கிறது. புண்ணிய உலகத்தில் பலகாலம் இருந்த பின் உனக்கென விதிக்கப்பட்டதை பிறகு ஏற்றுக் கொள். புனரபி ஜனனம். புனரபி மரணம் என்பதை நீ அறியாதவள் இல்லையே....!!! "  கிருஷ்ணன் தன் அன்பு கரம் பற்றி அவளை அழைத்துப் போனதில், குந்திதேவி  சிந்தை தெளிவுற்று அவனுடன் நடந்து போனாள். 

அவளைச்சுற்றி, அவள் அருகாமையில் தன் மக்கள் அறுவரும், நட்புறவோடு கலந்து நடந்து வருவதைக் காண மனம் மகிழ்வுற்றாள். பாஞ்சாலியும் ஓடிவந்து தன்னுடன் கரம் கோர்த்து கொண்ட போது, அவள் அடைந்த பெருமைக்கு அளவில்லை எனச் சொல்லலாம். தர்ம தேவரும், கௌரவர்களும், சொர்க்கத்தின் வாயிலில் வந்து நின்றபடி அவளை அன்புடன் வரவேற்றார்கள். 

சூரியதேவன் தன் ஸவர்ணமயமான  பொற்கரங்களால் அனைவரையும் ஆசிர்வதித்ததுடன், மகிழ்வில் சற்று அதிகமாகவே ஜகத்ஜோதியாக காட்சியளித்தார். 

                               கற்பனை

                                காவியம்       

                                  முற்றும்.

இது சகோதரர் ஸ்ரீராம் அவர்கள் ஒரு (கடந்த வெள்ளிக்கு முன்பான வெள்ளி என நினைக்கிறேன்.)  வெள்ளியன்று கர்ணன் திரைப்படத்தில் ஒரு பகுதியை (குந்தி தன் மகனையறிதல்) தந்து அதில் வரும் காட்சிகளை மற்ற திரைப்படங்களோடு ஒப்பிட்டு தொகுத்த போது, சொன்னது. "இதற்கு தோதாக யாராவது இந்தகாட்சிகள் சம்பந்தப்பட்டதாக எழுதுங்களேன்." என்றார். எனக்குத் தந்த கருத்திலும் அவ்வாறே சொன்னார். என்னையும் அந்தப்படத்தின் காட்சிகள் வெகுவாக பாதித்தது. அதன் விளைவே இந்தப் பதிவு. இதில் என் கற்பனை முழுக்க உண்மைகளுடன் கலந்துள்ளது. 

நான் மஹாபாரதத்தை அக்கு வேர், ஆணிவேராக கரைத்து குடித்தவள் அல்ல..! எனவே இதில் ஏதேனும் அறிந்தறியாத பிழைகள் இருந்தால், மஹாபாரதத்தை முழுக்க அறிந்து படித்தவர்கள் மன்னித்து விடுங்கள் என கேட்டுக் கொள்கிறேன்.

பதிவு பெரிதாக உள்ளதேயென யாரும் புறக்கணிக்க மாட்டீர்கள் என நம்புகிறேன். மஹாபாரதம்  என்றால், அதை சார்ந்த பதிவும் சற்று நீளத்தைதானே காணும். நானும் என்னாலான வண்ணம் சுருக்கி உள்ளேன். :)) 

ஸ்ரீராம் அவர்கள் எபிக்கு எழுதி அனுப்பச் சொன்னதாக நினைவு. ஆனால், இரண்டு வாரங்களாக கொஞ்சம் கொஞ்சமாக எழுதத் தொடங்கி இன்றுதான் என் கற்பனையை ஒரு முடிவுக்கு கொண்டு வந்தேன். இதுவே பயங்கர தா.. ம... த.. ம்.. இதில் எழுதியதை என் கைப்பேசியில், ஒருங்கே அமைத்து சீராக்கி, அவருக்கு அனுப்புவதற்குள் பல வெள்ளிகள் முளைத்து விடுமென்பதால், இந்த வெள்ளியிலேயே என் பதிவில் இறக்கி விட்டேன்..மன்னித்துக் கொள்ளுங்கள் சகோதரரே.

இதை படித்து கருத்துக்கள் தெரிவிக்கும் அன்பு உள்ளங்களுக்கு என் பணிவான நன்றிகள். 🙏.

மேலும் சென்ற பதிவுக்கு வந்த அனைவருக்கும் பதில் கருத்துக்கள் வழங்க முடியாதபடிக்கு ஒரு மாதமாக என் உடல்நலம் பாடாக படுத்தி விட்டது. அதற்குள் இந்தப்பதிவை எழுதி முடிக்கும் ஆவலும் வேறு சேர்ந்து கொண்டதால்,அதற்கு பதிலுக்கு நன்றி சொல்ல இயலாமல் போய் விட்டது. அதற்காகவும் அனைவரும் மன்னிக்கவும். 🙏. 

44 comments:

  1. பாரதத்தில் சூரசேனர் பின்னர் வருகிறாரோ...  அவருக்கு என்ன பாத்திரம்?

    ஹையோ..  கமெண்ட்ஸ் எல்லாம் வழுக்கி விழாமல் நிற்க வேண்டுமே...  அக்காவுக்கு மெயிலில் கூட அனுப்ப முடியாதே...!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      பதிவை கண்டதும், தங்களின் உடனடி வருகைக்கும், உங்களின் கருத்துப் பகிர்விற்கும் என் அன்பான நன்றி சகோதரரே.

      பாரதத்தில் பல பாத்திரங்கள். இதில் சூரசேனர் எப்போது இறுதியில் வருகிறாரா..? குந்தியின் தந்தையான படித்தேன். எனக்கும் மஹா பாரத கதைகள், தொடர்கள், என்றால் படிக்க, பார்க்க என அமர்ந்து விடுவேன். ஆனால், அப்போதுதான் வீட்டில் என் முக்கியத்ததுவங்கள் வந்து மிரட்டும். அதனால் தொடரக்கூட விருப்பமின்றி போய் விடும். எனக்கு இந்த மாதிரி கதைகள் படிப்பதென்றால் அதில் ஆழ்ந்து விட வேண்டும்.

      கடவுளே.. இந்த பதிவுக்கு முன்பு போல் உடனடியாக பதில் கருத்துகள் தரும் வேளையே தந்து விடு என நானும் பிரார்த்தித்து கொள்கிறேன். நல்லவேளை..! உங்களின் கருத்துக்களும் நின்று விட்டன. நன்றி இறைவனுக்கு.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. மிக அருமையாக எழுதி இருக்கிறீர்கள்.  படிப்பபடியாக அழகாக பாரதத்தை சுருக்கிச் சொல்லி விட்டீர்கள்.  குந்தி நரகத்துக்கு தானாய் வருவது நல்ல கற்பனை.  இதை எபியில் வெளியிட வாய்ப்பு கிடைக்காதது எங்கள் துரதிருஷ்டம்தான்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      தங்களின் இந்த ஊக்கம் தரும் கருத்துரை எனக்கு மிகுந்த மகிழ்வை தருகிறது. கைப்பேசியில் பல நாட்களாக எழுதிய அயர்வை போக்குகிறது.

      நான் இதை எபிக்கு த்தான் அனுப்ப வேண்டுமென நினைத்துதான் எழுத ஆரம்பித்தேன். ஆனால், எழுத எழுத பதிவு நீண்டு விட்டது. (முடிந்த வரை எழுதியதை சுருக்கியும்.) மேலும், இவ்வளவு நீளமானமாதை எப்படி அனுப்புவது என்ற தயக்கம் வந்து விட்டது.

      எனக்கும் எபியில் வெளியானால், நிறைய பேர் வந்து படிப்பார்கள் என்ற அபார ஆசையும் உண்டு. (என் பதிவுக்கென்றால் எனக்கு அறிமுகமானவர்கள் மட்டுமே.) இப்போது கூட நீங்கள் நம் எ பியில் வெளியிடலாம். அப்படி செய்தால், நானும் அதிர்ஷ்டம் செய்தவளாகி விடுவேன். தங்களது கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. பாரதம் சம்பந்தமாக இதுபோல அந்தந்த பாத்திரங்களின் நிலையில் நின்று நிறைய கற்பனைகள் வ்சந்துள்ளன.  நானே எபியில் ஒன்று எழுதி இருந்த ஞாபகம்.  பாரதம் பற்றிய கதை என்றால் விடாமல் வாசித்து விடுவேன்.  ஒரு வரி விடாமல் சுவாரஸ்யமாக வாசித்து முடித்தேன்.  எனக்கும் சிவாஜி மன்னிக்கவும் கர்ணன் சொன்ன அந்த "தாயே..  இன்றேனும் என்னை பெற்றெடுத்தாயே' வசனம் ரொம்பப் பிடித்திருந்தது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      /பாரதம் சம்பந்தமாக... நானே எபியில் ஒன்று எழுதி இருந்த ஞாபகம். /

      அப்படியா.? அதை நீங்கள் ஒரு வியாழனில் பகிரலாமே.. அந்த பதிவை படிக்காத எங்களுக்கு படிக்கும் வாய்ப்பு கிட்டுமில்லையா?

      உங்களுக்கும், பாரதம் சம்பந்தபட்ட, கதைகள், பதிவுகள் என படிக்கும் ஆர்வம் உண்டென நினைத்தேன். அத்துபடி நீங்கள் இன்று ஒரு வரி விடாமல் படித்தேன் எனச் சொன்னதை படித்து மகிழ்வடைந்தேன். தங்களின் ஊக்கம் தரும் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. வணக்கம் சகோதரரே

      /எனக்கும் சிவாஜி மன்னிக்கவும் கர்ணன் சொன்ன அந்த "தாயே.. இன்றேனும் என்னை பெற்றெடுத்தாயே' வசனம் ரொம்பப் பிடித்திருந்தது./

      தாங்களும் ஒரு அவசரத்தில்" மன்னிப்பு" எனக் கூறி விட்டீர்கள் போலும். அந்தளவிற்கு கர்ணன் படத்தில் அதில் நடித்தவர்கள் அந்த பாத்திரமாக வாழ்ந்து காட்டி நம்மை பரவசபடுத்திருக்கிறார்கள்.

      அந்தப்படத்தில்எனக்கும் அந்த வரி மிகவும் பிடித்துப் போனது. அதையொட்டி எழுந்ததுதான் இந்த குந்திதேவியின் கற்பனை பதிவு. தாங்கள் பதிவை ரசித்துப் படித்தமைக்கு எனது அன்பான நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    3. // அப்படியா.? அதை நீங்கள் ஒரு வியாழனில் பகிரலாமே.. அந்த பதிவை படிக்காத எங்களுக்கு படிக்கும் வாய்ப்பு கிட்டுமில்லையா? //

      கர்ணன் பற்றியா, திரௌபதி பற்றியா, என்ன தலைப்பு...  எனக்கே நினைவில்லை!

      Delete
  4. அடுத்தது, இத்தனை பாரதத்தை கைபேசியில் வைத்து தட்டச்சி, பதிவேற்றி..  அசாத்திய பொறுமை மற்றும் திறமை உங்களுக்கு...  வியக்கிறேன், பிரமிக்கிறேன், பணிகிறேன்.  உங்கள் அவ்வளவு வேலைகளுக்கு நடுவில் இப்படி தயார் செய்திருப்பது பிரமிக்க வைக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரரே.

      கைப்பேசியில் தட்டச்சி பதிவவேற்றுவது கூட கடினமல்ல...! . நம் கற்பனை வார்த்தைகள் ஊற்றெடுக்கும் போது, நடுநடுவே வீட்டின் கடமைகள் குறுக்கிடுவதால் ஊற்றுகள் திசை மாறி எங்கோ போய் விடுகிறது. ஆனால், அந்த கடமைகளையும் தவிர்க்க முடியவில்லையே..! அதனால் எழுத நினைத்து எழுதுவது எல்லாம் பாதி, பாதியாக உள்ளது. என்றாவது அவைகள் முழுமை பெறும் நாள் அமையும் என நினைக்கிறேன்.

      தங்களது பாராட்டுக்கள் தான் அவைகளை முழுமை காண வைக்கும் எனவ்ம் நம்புகிறேன்.

      எங்கள் வீட்டில் கூட என் எழுத்துக்களை ஆர்வமாக படிக்க யாருக்கும் நேரங்கள் இல்லை. ஆனால், பதிவுலக சொந்தங்களாகிய நீங்கள் அனைவரும், நான் எழுதுவதை விரும்பி படித்து இப்படி பாராட்டுவது மிக்க மகிழ்வாக உள்ளது. தங்களின் அன்பிற்கு என் அன்பான நன்றி சகோதரரே. 🙏.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. இனியும் நீங்கள் உங்கள் பின்னூட்டங்களில், பதிவுகளில் மன்னித்துக்கொள்ளுங்கள்... மணித்துக் கொள்ளுங்கள்.. என்று சொல்வதை விடவேண்டும் அக்கா.  உங்கள் உடல்நலம் தேவலாமா இப்போது?

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      /இனியும் நீங்கள் உங்கள் பின்னூட்டங்களில், பதிவுகளில் மன்னித்துக்கொள்ளுங்கள்... மணித்துக் கொள்ளுங்கள்.. என்று சொல்வதை விடவேண்டும் அக்கா./

      ஆகட்டும். விடத்தான் நினைக்கிறேன். ஆனால், பாருங்கள்...! இப்படி உடனுக்குடன் உங்கள் அனைவரைப்போலவும், பதில் தரமுடியாத சூழ்நிலைகள் ஏற்பட்டு விடுகின்றன. அதனால்தான் இந்த வார்த்தைப் பிரயோகம் அடிக்கடி என் பதிவுகளில், கருத்துகளில் வந்து விடுகிறது.

      ஏற்கனவே கைப்பேசியை எப்போதும் கையிலேயே வைத்திருக்கிறீர்களே என வீட்டில் கமெண்ட் தந்து கொண்டே இருக்கிறார்கள்.நானும் "ஆமாம்..! அதனால்தான் அதற்கு "கை" ப்பேசி என்று பெயர் வந்துள்ளது எனக்கூறி நேற்றைய உங்கள் பதிவில் வந்த சிவக்குமார் மாதிரி சிரித்து சமாளிக்கிறேன் :))

      இப்போது உடல்நலம் பரவாயில்லை. உரக்கச்சொன்னால், எனக்கு கேட்காத காது அதற்கு கேட்டு விடும். "மறுபடி வரட்டா" என கேட்கும். உங்களது அக்கறையான விசாரிப்புக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. மிக அருமை பதிவு.
    முழுமூச்சில் படித்து விட்டேன்.
    காலை வேலைகள் இருக்கிறது, என்றாலும் இப்படி ஒரு பதிவை கொடுத்து இருக்கிறீர்கள். படிக்காமல் கடந்து போக முடியவில்லை.

    //அத்தை..!! நான் எங்கு போயிருந்தேன். திரும்பி வருவதற்கு...? உங்களுடன்தானே எப்போதும் என் வாசமும்..!! என்ற குரல் கேட்டு மெய்சிலிர்த்தாள் குந்தி தேவி. //

    குந்தி தேவிக்கு மட்டும் மெய்சிலிர்க்கவில்லை எனக்கும் தான் மெய்சிலிர்த்து விட்டது.

    உன்னை விட்டு விலகவுதும் இல்லை, உன்னை கைவிடுவதும் இல்லை என்ற பைபிள் வாசகம் நினைவுக்கு வருகிறது.
    கண்ணனும் அதையே தான் சொல்லி இருக்கிறார்.
    நாம் மகிழ்ச்சியாக இருக்கும் போது ஏன் இந்த வாழ்க்கை கொடுத்தாய் என்று கேட்பது இல்லை.
    வருத்தபடும் போது ஏன் இந்த வாழ்க்கையை கொடுத்தாய் என்று இறைவனை கேட்போம்.

    மகிழ்ச்சி, துன்பம் இரண்டிலும் இறைவனை நினைக்க வேண்டும் மகிழ்ச்சி கொடுத்தற்கு நன்றியும், துன்பம் கொடுத்த போது தாங்கும் சக்தியும் கொடுக்க கேட்க வேண்டும்.
    அதை தான் குந்தி தேவியின் கதை சொல்லும் .
    மீண்டும் சிறிது நேரம் கழித்து வருகிறேன்.
    நல்ல பதிவுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.

      காலை அத்தனை வேலைகளுக்கு இடையேயும், பதிவை ரசித்துப் படித்து நல்லதொரு கருத்தை தர வந்த தங்களுக்கு என் பணிவான நன்றி சகோதரி.

      வாசகத்தை குறிப்பிட்டு கூறியதும் மிக்க மகிழ்ச்சியை தருகிறது. என்னை இவ்வாறு எழுத வைத்தவனும் "அவன்"தானே.. அவன் அசைவின்றி, நம் அசைவு ஏது.?

      தாங்கள் சொன்ன பைபிள் வாசகமும் சிறப்பு. எந்த தெய்வமும் நமக்கு அருள் செய்யும் நேரத்தில் நம்மை கேட்காமலேயே அவர் அருளை தந்து விடுவார்தானே...! அதுதானே நாமும் விரும்புவது...!எதிர்பார்ப்பது...! நல்ல கருத்துக்களாக கறி என்னை உங்கள் மனதாற பாராட்டி இருப்பது எனக்கு மிகுந்த மனமகிழ்வை தருகிறது சகோதரி. உங்களுக்கு என் அன்பான நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. எங்கள் ப்ளாக் நம்மை எல்லாம் எழுத வைப்பது உண்மை.
    நம்மை உற்சாகப்படுத்தி சோர்வை விரட்டி, எழுத வைத்து விடுகிறார்கள். ஸ்ரீராமுக்கு, கெளதம் சாருக்கு நன்றி சொல்ல வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.

      உண்மைதான் நம்மை எ. பி எழுத தூண்டுகோலீக இருந்து வருகிறது. அதிலும் நாம் அனைவரும் எ. பி குடும்பமாக இருப்பதும் என்னை பெருமை கொள்ள வைக்கிறது. சகோதரர் ஸ்ரீராம் அவர்களுக்கும், சகோதரர் கௌதமன் அவர்களுக்கும் எத்தனை முறை நன்றிகள் கூறினாலும் போதாது. சரியாக கூறியுள்ளீர்கள். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. வணக்கம் சகோ
    கர்ணன் பற்றிய புராணத்தை தங்களது பார்வையில் விளக்கி எழுதியது சிறப்பு.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      பதிவை ரசித்துப் படித்து நல்லதொரு கருத்தை தந்துள்ளீர்கள். தங்களது ஊக்கம் நிறைந்த கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே. தொடர்ந்து பதிவுகளுக்கு வருகை தரும் தங்களுக்கு என் அன்பான நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. கமலாக்கா ஸ்ரீராம் சொன்னதுக்கு உடனே நீங்க இப்படி இவ்வளவு பெரிய பதிவை அழகான கற்பனையுடன் எழுதி அதுவும் மொபைலில் அடிச்சிருக்கீங்க ஓ மை காட்!!!! உங்களை வியந்து பார்க்கிறேன். என்ன சொல்ல, கமலாக்கா. ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.

      என் ஒவ்வொரு பதிவுக்கும் உங்களது இந்த ஊக்குவிப்புதான் என்னை பதிவுகளை தர வைக்கிறது சகோதரி.

      /கமலாக்கா. ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க./

      உங்களது தன்னம்பிக்கையான இந்த வார்த்தைகள்தான், நான் கைப்பேசியிலேயே எழுதினாலும், என்னை விடாமுயற்சியுடன் இயங்க வைக்கிறது. அதற்கே நான் உங்களுக்கு ஒராயிரம் முறைகளுக்கும் மேலாக நன்றிக்கடன் பட்டுள்ளேன் சகோதரி. தங்களது அன்பான கருத்துக்களுக்கும் மன மகிழ்வுடனான நன்றி சகோதரி🙏.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  10. மஹாபாரத கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றிற்கு உள்ளும் புகுந்தால் நிறைய நாம் எழுத முடியும்.

    நீங்கள் குந்தி வாய்ஸ்....நான் கர்ணன் வாய்ஸில் கல்லூரியில் சின்ன ஸ்கிட் போட்டேன்.

    மஹாபாரதமே பாத்தீங்கனா உளவியல் நிறைந்த ஒன்று. இப்பவும் அது நம்மிடையே நடந்துகொண்டுதானே இருக்கிறது! இல்லையா?

    இப்படி பெற்றோர் மாறி வளர்வதே உளவியலில் contaminated parenting, child rearing நு சொல்வதுண்டு. இதைப் பற்றி விரிவாகச் சொல்லலை இங்கு. பதிவு போல் ஆகிவிடும்.

    மஹாபாரதமே சுவாரசியமான ஒன்றுதான். நானும் ஆர்வத்துடன் வாசிக்கத் தொடங்கிவிடுவேன். அதாவது கதாபாத்திரங்களின் வழி.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. குந்தியின் குற்ற உணர்வும், அவள் நரக லோகத்துக்கு வந்து வாழ்வதுமாக.....பூமியே நரகத்துக்குச் சமானம் எனலாம் இல்லையா அக்கா!!!!!! அத்தனைக் கஷ்டங்களை அனுபவித்துவிட்டுத்தானே போகிறோம்...கர்ணனின் வாய்சில் ஸ்கிட் பண்ணினப்ப குந்தியின் வாய்ஸிலும்....அது இருவர் மட்டுமே. ஸ்கிட் என்பது அப்படித்தானே வரும்....இது வேஷம் எல்லாம் இட்டுக் கொண்டு இல்லை.....ஒரு சில தினங்களில் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ண ஒரு பீரியட் அல்லது இரண்டு பீரியடை ஒதுக்குவார்கள் சனிக்கிழமையாக இருக்கும் பெரும்பாலும்.

      அப்ப நான் எழுதி நானும் தோழியும் போட்டது கர்ணனாக நான் குந்தியாக அவள். அதெல்லாம் பொற்காலம். என் கற்பனை விரிந்த காலம். இப்ப ஒன்றுமே ஓடாமல் இருக்கு

      கீதா

      Delete
    2. வணக்கம் சகோதரி

      தங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி

      ஆம்.. உண்மைதான்.. மஹாபாரதம், இராமாயணம் என்ற இதிகாசங்கள், மற்றைய புராண வரலாறுகள் என எதையும் ஆழ்ந்து படித்தால், அந்தந்த கதாபாத்திரங்களின் மனநிலையை பல விதமாக அல்லாம். படிப்பதற்கு தான் நேரம், காலமென்ற ஒன்று வர வேண்டும். அதையும் இறைவன் நமக்கருள வேண்டும்.

      /இப்படி பெற்றோர் மாறி வளர்வதே உளவியலில் contaminated parenting, child rearing நு சொல்வதுண்டு. இதைப் பற்றி விரிவாகச் சொல்லலை இங்கு. பதிவு போல் ஆகிவிடும். /

      உண்மைதான் சகோதரி. உங்கள் அனுமானமான கருத்துக்களை நான் என்றுமே ரசித்துப் படிப்பேன். உங்கள் சிந்தனைகளையும் வரவேற்கிறேன். தங்கள் அன்பான கருத்துக்கு நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    3. "அலசலாம்" என திருத்திப் படிக்கவும். நாம் ஏதோ அடிக்க அது வேறு வார்த்தைகளால் நம்மை திருப்பி அடிக்கிறது.:))

      Delete
    4. வணக்கம் சகோதரி

      தங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      /குந்தியின் குற்ற உணர்வும், அவள் நரக லோகத்துக்கு வந்து வாழ்வதுமாக.....பூமியே நரகத்துக்குச் சமானம் எனலாம் இல்லையா அக்கா!!!!!! அத்தனைக் கஷ்டங்களை அனுபவித்துவிட்டுத்தானே போகிறோம்../

      உண்மைதான்.. நீங்களும் சரியாக சொல்லியுள்ளீர்கள். பூமியில் எத்தனை கஸ்டங்கள் படுகிறோம். ஆனால், வாழும் ஒவ்வொரு மனிதருக்கும் அது வித்தியாசப்படுகிறது. நம் குந்திதேவியும், அத்தனை செல்வங்கள் நிறைந்திருந்தும் , மனதால் கஸ்டபட்டாள். அதற்காகவே அவள் உடலாலும் மனதாலும், அனைத்தையும் சமமாக பாவித்து ஒரு துறவியாக வாழ்ந்தும், சில பொழுது களில், அவளின் மன எண்ணங்களின் தாக்குதல்களினால் ஆட்கொண்டு கலங்கிப் போனாள் என கதைகளில் படித்துள்ளோம். இவ்விதமாக இறைவனின் அருகாமை தரும் அருளைப் பெற்றவர்களுக்கே இந்த நிலைமையென்றால், நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களுக்கு கண்டிப்பாக பூமியே ஒரு நரகந்தான்.என்னதான் நம்பிக்கைத் தரும் நல்லெண்ணங்களுடன் இங்கு வாழ்ந்தாலும், ஒரு ஒத்திகைக்காகத்தான் நாமும் இங்கு வாழுகிறோமோ எனவும் சில சமயம் எனக்குத் தோன்றும். தங்களின் அற்புதமான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    5. வணக்கம் சகோதரி

      தங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி

      /அப்ப நான் எழுதி நானும் தோழியும் போட்டது கர்ணனாக நான் குந்தியாக அவள். அதெல்லாம் பொற்காலம். என் கற்பனை விரிந்த காலம். இப்ப ஒன்றுமே ஓடாமல் இருக்கு/

      அட..! நீங்களும் கல்லூரியில், கர்ணன், குந்தி நாடகம் போட்டுள்ளீர்களா? அபாரம்.. பாராட்டுக்கள். நீங்கள் எழுதியது என்றால் நல்லவிதமாக திறம்பட இருந்திருக்கும். பரிசுகள் கிடைத்ததா?

      நம் அப்போதைய பள்ளி, கல்லூரிகாலங்கள் கவலைகள் இல்லாத காலமில்லையா சகோதரி. ஒரு சிவாஜி பாடல் வருமே... கல்லூரி பிரிவுபசார விழாவில்.. "பசுமை நிறைந்த நினைவுகளே" அதுபோல் கவலையின்றி பறவைகளாக உலாவிய காலங்கள். இப்போது குடும்பச்சுமைகள், கடமைகள் என மனதையும் கைகளையும் கட்டுகிறதே...! ஆனாலும் உங்கள் கற்பனைகள் இன்னமும் இப்போதும் சிறந்ததாக உள்ளது. உங்கள் பாஸிட்டிவான கதைகளை, முற்போக்கு சிந்தனைகளை, அதன் எழுத்துக்களை நான் எப்போதும் விரும்பி படிப்பேன். எழுதி முடிக்காதவற்றையும் எழுதி வெளியிடுங்கள். படிக்க காத்திருக்கிறேன். தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  11. //அம்மா...! இன்றாவது என்னை பெற்றெடுத்தீர்களே..!

    அம்மா..! என்னை ஏனோ நீ பெற்றெடுத்தாயே//

    இந்த இரண்டுமே கர்ணனுக்கு.....பாவம் எனக்கு அப்படித்தான் தோன்றும். அம்மா இல்லாத வலி ஒரு குழந்தைக்குத்தான் தெரியும். அம்மா இல்லாமல் வளரும் குழந்தையின் மன நிலை சில குழந்தைகளுக்கும் அது பலவித உணர்வுகளைக் கொடுக்கும்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி.

      தாங்கள் இன்றைய பதிவுக்கு வந்து என்னை பல கருத்துக்களால், ஊக்குவித்து நல்லதொரு கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு மிக, மிக அன்பான நன்றி சகோதரி🙏.

      இதில் முதல் வரிதான் கர்ணன் படத்தில் வருவது. அதன் பாதிப்பில் விளைந்தது குந்திதேவி அவர்கள் தன் அம்மாவை நினைத்தபடி இருந்த போது எழுந்த வரிகள். அப்படித்தான் எனக்கும் தோன்றவே இந்த பதிவு உருவாகி விட்டது. ஆனால், உங்கள் பார்வையில் கர்ணனுக்காக பிறந்த வரிகள் இவ்விரண்டும் என்பதையும் இப்போது நானும் உணர்ந்தேன். .உங்கள் உணர்வுகளையே நானும் மதிக்கிறேன். அழகாக சொல்லியுள்ளீர்கள். உங்களது அருமையான பின்னூட்டங்களுக்கு மனமார்ந்த நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  12. கதை "மஹாபாரதம்" போல் உள்ளது என்று பொதுவே சொல்வோம். அதுவே கதை என்றாகும்போது?
    முழுவதும் படித்து பின்னர் கதையைப்பற்றி கருத்து கூறுகிறேன். .

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      ஹா ஹா ஹா. கதை படிக்க மீண்டும் வாருங்கள்.. கண்டிப்பாக நீங்கள் கதையைப் படித்து நல்ல கருத்துக்களை தர வேண்டுமென வேண்டிக் கொள்கிறேன். ஏனெனில் நீங்கள் பலவிதமான கதைகளையும் படித்து அதன் நிறை, குறைகளை , எங்களுக்கு உணத்துபவர். உங்களிடமிருந்து என் எழுத்துக்கு /கதைக்கு தரும் ஊக்குவிப்பை, பெற காத்திருக்கிறேன். அதை பெரும் பாக்கியமாகவும் கருதுகிறேன். மாறாக எழுத்துகளின் பிழைகளை சுட்டிக்காட்டினாலும் , அதை திருத்திக் கொள்ளவும் இது எனக்கு ஒரு வாய்ப்பாகவும் அமையும். உங்கள் கருத்துக்காக காத்திருக்கிறேன் சகோதரரே. தங்களின் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  13. என்ன சொல்ல மிக அருமையான படைப்பு அக்கா , பொறுமையாக எழுதினாலும் அழகாக கோர்வையாக எழுதியுள்ளீர்கள் கமலா அக்கா ..

    இப்பொழுதும் நான் இணையத்தில் பல நாவல்கள் வாசிப்பது உண்டு .. சிலவற்றில் ஒன்றி வாசித்தால் அந்த கதையே எனக்குள் படமாக ஓடும், அப்படி குந்தியின் வரலாறும் ஓடியது, அதிலும் கடைசியாக மாயவா என்று அழைத்து அவர் பதில் தரவும் ..ஆஹா

    அட என்னப்பா அனைவரும் இங்கேயே தான் உள்ளீர்களா என எனக்கு சட்டென்று தோன்றி விட்டது.

    மிக சிறப்பு அக்கா தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.

      பதிவை ரசித்து தாங்கள் தந்த பாராட்டை கண்டு என் மனம் மிக மகிழ்வடைகிறது சகோதரி.

      நானும் எந்த கதை வாசிக்க நேர்ந்தாலும் அதனுடன் ஒன்றி போய் விடுவேன். கதைகள் மட்டுமல்ல.. எந்த பதிவுகளை வாசித்தாலும் அப்படித்தான்...! அதன் பின் என் நீண்ட கருத்தையும் அங்கு ஒரூ பதிவாக தந்து விவேன். ஹா ஹா.

      உங்களின் திருக்கோவிலூர் பெண் பிள்ளை ரகசியம் எனக்கு மிகவும் பிடித்தமான பதிவு. அதை முழுக்க ஒரு நாள் அமர்ந்து படிக்க வேண்டுமென ஆவலாக உள்ளேன். அந்த நேரங்களை இறைவன் எனக்கு அருள வேண்டும்.

      /அட என்னப்பா அனைவரும் இங்கேயே தான் உள்ளீர்களா என எனக்கு சட்டென்று தோன்றி விட்டது./

      ஹா ஹா ஹா. உங்களுக்கு மட்டுமில்லை. எனக்கும் தோன்றியதால், என் கற்பனையை இன்னமும் வளர விடாமல், கிருஷணரே அங்கு வந்து விட்டார். சுபமும் சுபமாகவே தந்து விட்டார். சர்வம் கிருஷ்ணார்ப்பணம் இல்லையா?. தங்களது அன்பான கருத்துக்கும், பாராட்டிற்கும் என் அன்பான நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  14. இன்னொரு பின்னூட்டம் போட்டேன் காணவில்லையே!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி

      இரண்டு பின்னூட்டங்கள் வந்திருக்கிறது. நானும் அவையிரண்டிற்கும் பதில் தந்து விட்டேன். மற்றொன்று வரவில்லையே சகோதரி..! சகோதரர் ஸ்ரீராம் அவர்களும் அவர் தரும் பின்னூட்டங்கள் மாயமாகி விடுவதாக கூறுவார். என்னாலும் இந்த கைப்பேசியில் ஸ்பாமில் சென்று பார்க்க இயலவில்லை. அது ஒருவேளை தங்களிடம் தேங்கியிருந்தால் , நாளை மறுபடி எனக்காக அதை தேடி இங்கு கொண்டு வந்து விடுங்கள்.உங்களது அருமையான பின்னூட்டத்தை தவற விட்டது எனக்கு வருத்தமாக உள்ளது. .
      தகவலுக்கு நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன். .

      Delete
  15. //இறுதியில் உண்மை அவனின் மனதோடு உரத்து உரைத்ததும், "அம்மா...! இன்றாவது என்னை பெற்றெடுத்தீர்களே..!!" என என்னை கௌரவப்படுத்தினான்.//

    அருமையான வரிகள்

    //அவனை நான் பெற்றதற்கு மகிழ்ந்த அந்த தருணத்திலிருந்து, "அம்மா..! என்னை ஏனோ நீ பெற்றெடுத்தாயே...! என இன்று வரை நான் ஒவ்வொரு நாளும், என் தாயை நினைத்தபடி, பொழுதுக்கும் வருந்தி நிற்கிறேன். //

    அந்த தாய் தன்னை ஒரு இக்கட்டான நிலைக்கு தள்லி விட்டாளே என்று நினைத்து "அம்மா..! என்னை ஏனோ நீ பெற்றெடுத்தாயே...! "
    கேட்டு புலம்ப வைக்கிறது.

    //கௌரவ படைகளுக்கு போர் பதவிகள் பங்கிட்டு தரும் சமயத்தில், "நீ வீரன் அல்ல...! பெற்றவர்கள் யாரென தெரியாத கோழை" என சான்றோர்கள் இழிந்து பேசிய வருத்தத்தில், "இத்தனைக்கும் காரணம் என்னைப் பெற்றெடுத்த அந்த அன்னை...! அன்னையா அவள்...! பெற்ற மகனை நதியில் இட்டு கொல்ல நினைத்த ஒரு பாவி... அரக்க குணமுடைய அவள் ஒரு அன்புத் தாயாக இருந்திருக்க மாட்டாள். ...? அவளால்தான் எனக்கு இந்த இழிவு..! இப்போது என் வயிறெரிய கூறுகிறேன். .அவள் செய்த இந்த பாவங்களுக்கு அவள் ஏழேழு பிறவிக்கும் அவள் நரகத்தில்தான் வாசம் செய்ய வேண்டும்...!" என்று மனம் கடிந்து, உடல் கடினப்பட்டு கூறினானே ...! அந்த சொல் சொல்லுமளவுக்கு அவன் மனம் எந்த பாடு பட்டிருக்கும்...? அந்த பாவத்திற்கு, பரிகாரமாக, அவன் சொல்படி நான் பிராயச்சித்தம் செய்ய வேண்டாமா கூறுங்கள்...!!" குந்திதேவி இத்தனை நாள் சோகத்தையும், மனதில் ஏற்பட்ட வருத்தத்தோடு சேர்த்து கண்ணீராகவும் கொட்டித் தீர்த்தாள்.//

    நரகத்திற்கு குந்தி வர காரணம் சொன்னது மிக அருமை.
    உண்மையாக மனம் நொந்து புலப்பிய தாயின் மனநிலையை பதிவு செய்து விட்டீர்கள்.

    தூக்கி எறிய பட்ட குழந்தை வளர்ந்ததும் பெற்றொர் பேர் தெரியாத குழந்தை என்று எல்லா இடங்களிலும் இழிவு படுத்தபடும் போது மனம் நொந்து வார்த்தைகள் கடினமாக தான் வரும் மகனின் மனநிலையையும் அருமையாக சொல்லி இருக்கிறீர்கள்.

    என்னிடம் பின்னூட்டம் தேங்கி இல்லை, நினைவுக்கு வந்த என் கருத்தை திருப்பி எழுதி அனுப்பி இருக்கிறேன்.

    மிக அருமையான பதிவு. திறமைகளை நிறைய வைத்து கொண்டு இருக்கிறீர்கள் . இப்படி நிறைய எழுதுங்கள்.
    பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி

      பதிவின் வரிகளை ரசித்து குறிப்பிட்டு தாங்கள் தந்த கருத்துரைகள் நான் மேலும் பதிவுகள் எழுத நல்ல ஊக்கங்களை தரும். உங்களின் இந்த ஊக்கம் நிறைந்த கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

      நான் கேட்டுக் கொண்டபடி எனக்காக தாங்கள் தந்த பின்னூட்டக் கருத்தை மீண்டும் நினைவுபடுத்தி எழுதி இங்கு வந்து சேர்த்தமை கண்டு மிக்க மகிழ்ச்சியடைந்தேன் சகோதரி. தங்களின் இந்த பொறுமைக்கு என் நன்றிகள் எப்போதும் உங்களுக்கு.

      உங்கள் வாழ்த்துகளும், பாராட்டுகளும் எனக்கு மிகவும் மகிழ்வை தருகின்றன. தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி. 🙏.

      காலையில் சில வேலைகள் தொடர்ச்சியாக வந்து விட்டன. அதனால் காலையில் வந்த தங்களின் கருத்துக்கு பதில் தர தாமதமாகி விட்டது. மன்னிக்கவும் சகோதரி. மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  16. ​//அடுத்து ஹஸ்தினாபுரத்தில் நாடும் சூதும் ஒன்றையொன்று தழுவி மகிழ்ந்தன.//
    இங்கே நாடு என்று குறிப்பிடப்படுவது யார் என்று புரியவில்லை. 'நாடு' என்பதை 'அரசு' என்று மாறினால் சரியாக இருக்கும்.

    //தந்தைக்கு மதிப்பும் தந்து, பின் வளர்ப்பு தந்தைக்கு தன்னுடைய எந்த ஒரு செயலாலும் களங்கத்தை ஏற்படாமல் பார்த்துக் கொண்டு,......... பல வருடங்களுக்குப்பின், அந்தக் காட்டில் எழுந்த காட்டுத்தீயின் வெப்பத்தையும், குளிர் நிலவாக ஏற்று வாழ்ந்த அந்த உலக வாழ்வை முடித்து விட்டு இங்கு வந்தாகி விட்டது. //
    ஒரு வாக்கியம் 14 வரிகள், ஒரு பத்தி. அப்பாடா. இது போன்று எழுதுவதே உங்கள் சிறப்பு எனலாமா? அல்லது இது போன்று எழுதி வாசகர்களை துன்புறுத்துவதே உங்கள் பலவீனம் எனலாமா? எது சரி?

    பகுதி பகுதியாக எழுதுவதில் நன்மையும் உண்டு, கெடுதலும் உண்டு. நடை வித்தியாசம், கருத்து முரண்பாடு போனறவை புலப்படலாம். ஆகவே திட்டமிட்ட எழுத்து முறையே சிறந்தது என்று கருதுகிறேன். தோன்றிய எண்ணங்களை அவ்வப்போது குறித்து வைத்து கொண்டு ஒரே நேரத்தில் ஒன்று சேர்த்து மாலையாக தொடுக்கலாம். அப்போது எழுதியது பரீச்சை விடை போல் சீராக அமையும்.

    ஒன்று மட்டும் உறுதி. உற்சாகமும் எழுதும் ஊக்கமும் தற்போது கொப்பளிக்கின்றன. எழுதுங்கள். அதே சமயம் சின்ன வாக்கியங்களில் கருத்துக்களை கூறினால் எங்களைப் போன்றோருக்கு மனதில் பதியும்.

    இந்க குந்தியின் கதை கற்பனை நன்று என்றாலும் மனதில் தோன்றிய தர்க்கங்களின் பிரதிபலிப்பாக அமைந்ததில் ஆச்சர்யம் இல்லை. காரணம் உங்கள் போக்கு அப்படி.

    கடினமான விமரிசனத்திற்கு மன்னிக்கவும்.

    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரரே.

      என் வேண்டுகோளின்படி தாங்கள் கதையை படித்து நிறை குறைகளை மீண்டும் வந்து சொல்லி என்னை கௌரவபடுத்தியமைக்கு என் பணிவான நன்றி சகோதரரே.

      நாடு என்பதை அரசு என மாற்றுகிறேன். தாங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.

      /ஒரு வாக்கியம் 14 வரிகள், ஒரு பத்தி. அப்பாடா. இது போன்று எழுதுவதே உங்கள் சிறப்பு எனலாமா? அல்லது இது போன்று எழுதி வாசகர்களை துன்புறுத்துவதே உங்கள் பலவீனம் எனலாமா? எது சரி?/

      ஹா ஹா ஹா. உண்மைதான் அந்த வரியின் நீளம் எழுதிய என்னேயே பிரமிக்க வைத்தது. அதை முதலில் திருத்த நினைத்தேன். பிறகு பதிவு இன்னமும் நீளமாகி விடுமேயென விட்டு விட்டேன். இனி இப்படி துன்புறுத்தாமல் கவனமாக இருக்கிறேன். ஹா ஹா ஹா.

      /பகுதி பகுதியாக எழுதுவதில் நன்மையும் உண்டு, கெடுதலும் உண்டு. நடை வித்தியாசம், கருத்து முரண்பாடு போனறவை புலப்படலாம். ஆகவே திட்டமிட்ட எழுத்து முறையே சிறந்தது என்று கருதுகிறேன். தோன்றிய எண்ணங்களை அவ்வப்போது குறித்து வைத்து கொண்டு ஒரே நேரத்தில் ஒன்று சேர்த்து மாலையாக தொடுக்கலாம். அப்போது எழுதியது பரீச்சை விடை போல் சீராக அமையும்./

      நல்ல யோசனைகள். உங்களது அருமையான யோசனைகளுக்கு என் அன்பான நன்றி சகோதரரே.

      /கடினமான விமரிசனத்திற்கு மன்னிக்கவும்/

      எதற்கு மன்னிப்பெல்லாம்? உங்களின் விமர்சனங்கள் என் எழுத்தை சீராக்கும் என நம்புகிறேன். நான் ஒரு நல்ல எழுத்தாயினி ஆக விரும்பும் ஒரு கத்துக்குட்டி. ஆனால் நல்ல முறையில் நிறைய எழுத வேண்டுமென்ற ஆவலும், ஆர்வமும் எனக்குள்ளது அதற்கு உங்களைப் போன்றோரின் கருத்துக்கள்தான் என் எழுத்துக்கு ஒரு சிறந்த டானிக்காக கருதுகிறேன். .உங்களின் ஆலோசனைகளை மனப்பூர்வமாக ஏற்கிறேன். தங்களுடைய மனம் திறந்த கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரரே. .

      காலையில் தந்த கருத்துக்கு என் இன்றைய நேரமின்மை காரணமாக தாமதமாக பதில் தருகிறேன். அதற்கு தாங்களும் மன்னிக்கவும். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  17. இன்றைக்கு இந்தக் காவியத்தை (ஒரு வழியாகப்) படித்துவிட்டேன். நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

    இருந்தாலும் ஒரு சிறுகதை எனும்போது அதன் முடிவை நோக்கிச் செல்லவேண்டும்.

    மஹாபாரதம் போன்ற நாவலை எடுத்துக்கொண்டு, அனைத்துப் பாத்திரங்களுக்கும் சிறுகதையில் இடம் கொடுக்க இயலாது. பலவற்றைத் தவிர்த்தாகவேண்டும் அதனால்தான் கதை சொல்ல நினைக்கும் கருத்து ரொம்ப ஆழமா மனதில் பதியவில்லை.

    நீங்க எப்போதுமே நல்லா எழுதுவீங்க. இதிலும் எல்லா உணர்வுகள், நிகழ்வுகளையும் கொண்டு வந்திருக்கீங்க. ஆனாலும் ரொம்ப் நெடியதாக இருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      அப்பாடா.!! ஒரு வழியாக கதையை படித்து தந்த கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரரே.

      அனைவரும் படித்து கருத்துரைகளை தந்த போதும், நீங்களும் பதிவை படித்து கருதொன்றும் தராதது என் மனதுக்கு சற்று வேதனையை தந்தது. அதனால்தான் நேற்று எ. பியிலும் "வரவில்லையே" என குறிப்பிட்டேன். ஒரு வேளை கதையை படித்தும், கருத்தை தர விருப்பமில்லைவென சில ஐயப்பாடுகள். அதன் விளைவுதான் வறுப்புறுத்தல். மன்னிக்கவும் சகோதரரே.

      இது சிறுகதையே இல்லை. காவியம் என்றல்லவா குறிப்பிட்டிருக்கிறேன்.மஹாபாரதம், இராமாயணம் போன்ற்வற்றுள் ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொண்டால் அவர்களின் உண்மை முகத்திற்கும் மேல் நம் கற்பனையும் அதிகமாக வளர்ந்து விடுவது இயல்புதானே..!

      தங்களுடைய மனம் திறந்த கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே. குறை நிறைகளை சொல்லி கருத்திடுவதும் அனைவரின் வாடிக்கைத்தானே..! இதை என் எழுத்தார் வத்திற்கும் ஒரு நல்ல முன்னேற்றமாகத்தான் நான் கருதுகிறேன். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  18. உங்கள் எழுத்தில் உற்சாகம், பாசிடிவ் எண்ணங்கள் இருக்கும். எப்படி இவற்றை மொபைலில் எழுதினீர்கள் என்று வியக்கிறேன்.

    மிக நல்ல திறமைசாலி நீங்கள்.

    அது சரி.. இனிப்பு கொழுக்கட்டை தீர்ந்ததா இல்லையா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      தங்களின் ஆறுதலான பாராட்டுரைகளுக்கு மிக்க நன்றி சகோதரரே. இப்படி அனைவரின் ஊக்கம் தரும் வார்த்தைகள்தான் என்னை ஓரளவு எழுத வைக்கிறது என நம்புகிறேன்.

      இனிப்பு கொழுக்கட்டைகள் அது பேசாமல் இருக்கிறது. இனியும் ஒருநாள் பண்ணச்சொல்லி வீட்டில் ஆர்டர் வந்து கொண்டேயுள்ளது. சமயம் நேரம் என வாய்க்க வேண்டும்.உங்கள் அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரரே.🙏.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  19. மகாபாரத்த்தின் சிறப்பே, ஒருவனை கதாநாயகன், சிலர் வில்லன்கள் என்றெல்லாம் சொல்லாமல், நடந்த நிகழ்வுகள் என்பதால் எல்லோருடைய உணக்குறைகளையும் பேசுகிறது. அதனால்தான் அந்தக் காவியத்தை எத்தனைமுறை படித்தாலும் அலுப்பதில்லை.

    அதிலிருந்து நிறைய சிறுகதைகள், காவியங்கள், நம் கற்பனையைக் கொண்டு உருவாக்க முடியும்.

    வேறு கோணத்தில் சிறு கதையாக முயற்சியுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      /மகாபாரத்த்தின் சிறப்பே, ஒருவனை கதாநாயகன், சிலர் வில்லன்கள் என்றெல்லாம் சொல்லாமல், நடந்த நிகழ்வுகள் என்பதால் எல்லோருடைய உணக்குறைகளையும் பேசுகிறது. அதனால்தான் அந்தக் காவியத்தை எத்தனைமுறை படித்தாலும் அலுப்பதில்லை.

      அதிலிருந்து நிறைய சிறுகதைகள், காவியங்கள், நம் கற்பனையைக் கொண்டு உருவாக்க முடியும்.
      வேறு கோணத்தில் சிறு கதையாக முயற்சியுங்கள்./

      ஆம் தாங்கள் கூறுவது உண்மை. அனைவருமே நல்ல பண்புகளை கொண்டவர்கள். அவர்கள் இழைக்கும் சிறு தவறு சில சமயங்களில், பூதகாரமாக எழும்பி அவர்களது நற்பண்புகளை மறக்கடிக்க செய்து விடுகிறது.

      ஏதோ எனக்கு தெரிந்த வரையில், குந்திதேவியின் நிலையை நினைத்து, அதுவும் ஒரு தாயின் மன நிலையை விவரித்து எழுதினேன். நீங்கள் சொல்வது போல் இதில் நிறைய கதாபாத்திரங்களையும் இந்த விதத்தில் எழுதலாம். அத்தகைய ஆற்றலை இறைவன் எனக்கு தரும்படி வேண்டிக் கொள்கிறேன். தங்களது ஊக்கம் மிகுந்த கருத்திற்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete