இதை அப்போது எழுதிய நாள். வருடம். ஜுலை. 6, 2014.
வெளியூர் பயணங்களில் என் எழுத்துப்பயணம் தடைப்பட்டிருந்த இரு வாரங்களில், இந்த "என் கேள்விக்கென்ன பதில்" தொடர் பதிவில், என்னையும் பத்தோடு ஒன்றாக, பதிந்திருந்ததை (பெயர் பட்டியலில்) சகோதரர் கில்லர்ஜியின் பதிவை பார்த்தறிந்தும் சற்று சந்தோசம் கலந்த திகைப்புக்குள்ளானேன்.
சந்தோஷம்…. என்னையும் மதித்து நட்பு வட்டத்தில் சேர்த்திருப்பது.!!!
திகைப்பு…. இந்த கேள்விகெல்லாம், தகுந்தாற் போல் என்னால் பதில் அளிக்க இயலுமா?
பதில் எழுத அழைத்த அவரது அழைப்பை தட்ட இயலாமலும், காலம் கட(மற)ந்த ஒரு கதையை எப்படி மீண்டும் தொடர்வது என்று குழப்பமாகவும், இருந்தாலும், ஒருவாறு மனதை தேற்றிக்கொண்டு கேள்விகளுக்கேற்ற பதில்களை உருவாக்கி, (நன்றாகத்தான் சமாளிக்கிறாய..! வேறு ஒரு பதிவை திரட்ட முடியாததை, எப்படியெல்லாம் பூசி மெழுகுகிறாய்? உன்னை……! என்று மனசாட்சி பல்லை நறநறவென்று கடிக்க..!) சரி! இதுவும் ஒரு பதிவாகத்தான் இருக்கட்டுமே! என்ற எண்ணத்தில், எழுதி வெளியிட்டு விட்டேன்.
வலையுலகில் அறியாத பல நல்லதோர் விலாசங்களையும், இந்த தொடர் பதிவின் மூலம் அறிந்து கொள்ளும் வாய்ப்பை உண்டாக்கிய சகோதர, சகோதரிகளுக்கு என் பரிபூரணமான, நன்றிகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பொதுவாக என் வலைப்பூவிற்கு வந்து கருத்து கூறியவர்கள் / கூறுபவர்கள் மிகவும் குறைவு! நானும் நிறைய வலைத்தளத்திற்கு சென்றதில்லை, என்பதையும் பணிவுடன் இங்கு கூறிக் கொள்கிறேன். இருப்பினும், இது ஒரு சந்தர்ப்பமாக (என்னையும் சேர்த்து, அனைவருக்குமே) அமையாதா? என்ற நப்பாசையும் என்னை எழுத தூண்டியது!
இதோ! கேள்விகளுக்கான, என் பதில்களை, விமர்சிக்கும் உள்ளங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
உங்களுடைய 100 ஆவது பிறந்த நாளை எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள்?
முதலில் 100 ஆவது வயதை தொட விருப்பமில்லை! இந்த நிமிடமே ஆனாலும், நல்லபடியாக ஒருவருக்கும் தொந்தரவு தராமல், (என் உடலுக்கும்) என்னுயிர் பிரிய வேண்டுமென ஆசைபடுகிறேன். ஆயினும் விதியின் சதியால் அந்நிகழ்வு (100 ஆவது வயதை தொடுவது) நடந்தால், பிறந்த நாளுக்கு முன் தினம், இதை வழக்கப்படி தினசரி நாளை போலவே கழித்து விடலாமா? அல்லது வித்தியாசமாக சிறப்பாக கொண்டாடலாமா? என்று வீட்டிலிருக்கும் அனைவருடனும் கலந்து ஆலோசிப்பேன். அதற்கு முதலில் என் வீட்டின் அத்தனை உறவுகளும் நலமாவும், புத்துணர்ச்சியோடும், இருக்க வேண்டும். என் யோசிக்கும் திறனும், நானும், நல்ல நிலையில் இருக்க வேண்டும். பிறகு….,,, (அட! இத்தனை ஆசையா உனக்கு? ஒரு பேச்சுக்கு எழுத சொன்னதற்கே, இப்படி நீட்டி முழக்கிறேயே!! உன்னையெல்லாம் விட்டு வச்சா இந்த உலகம் தாங்காது. சட்டுபுட்டுனு சுருட்டிகிட்டு போக வேண்டியதுதான்! )என்று காதருகே சிறு முணுமுணுப்பு கேட்கவும் எழுதுவதை நிறுத்தி சடாரென்று திரும்பினேன்! யாருமேயில்லை! (அதன் பின்தான் புத்தியில் உதித்தது! காதருகே பேசி சென்றது என் விதியென்று!!.) இனி 100 ஆவது எல்லாம் சான்ஸே இல்லீங்க! பின்னே எங்கேயிருந்து கொண்டாட்டம்!!!!.
என்ன கற்றுக் கொள்ள விரும்புகிறீர்கள்?
ஒவ்வொருவரும் தத்தம் அனுபவங்களிடமிருந்துதான், ஒவ்வொரு பாடமாக கற்றுக் கொள்கிறோம். நானும்அப்படித்தான்! ஆனால், கனிணியின் மூலம் இணையத்தின் வாயிலாக எழுத்துலகில் பிரவேசித்த பின் இதில் நிறைய கற்றுக் கொள்ள ஆசைப்படுகிறேன். சந்தர்ப்பங்கள் சுலபமாக என்னுடன் இணைந்து வர அந்த இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?
சிரிப்பு என்பது ஒரு வரப்பிரசாதம். “சிரிப்பும் புளிப்பும் சிறிதுள” என்று என் பாட்டி அடிக்கடி கூறுவார்கள். “என்ன அர்த்தம்”? என்று நான் கேட்க “புளிப்பு ஒரு வயதுக்கு மேல் நம் உடம்புக்கும், பற்களுக்கும், ஒத்து வராது. அதுபோல் வாய் விட்டு சிரித்தலும், ஒரு வயதின் வரம்பு வரைதான். அதன்பின் அனாவசியமாக எதற்கெடுத்தாலும் சிரிக்காது, அடக்கி, புன்னகைக்க மனம் பக்குவபட்டு விடும்.” என்று கூறுவார்கள். பாட்டி சொன்னது அந்த காலத்தில், எனினும், அது என்னை பொறுத்த மட்டில் உண்மைகளாக போய் விட்டன. ஆனாலும், சூழ்நிலைகளுக்கு தகுந்தவாறு, அனைவரிடம் சிரித்து பேசிக் கொண்டுதான் இருக்கிறோம். இதில் கடைசி என்பதேது?
24 மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?
முன்பெல்லாம், மாதம் ஒரு முறை அந்த நிலையை சந்தித்திருக்கிறேன். இப்போது தங்கியிருக்கும் இடத்தில் அந்த நிலை கடவுள் புண்ணியத்தில் இல்லை! அப்படியாகும் பட்சத்தில், காலையிலிருந்து மதியம் வரை வீட்டு வேலைகளே பொழுதை போக்கி விடும். மதியம் புத்தகங்கள் படிப்பது, பழைய நினைவுகளை கண்மூடி அசை போடுவது, நடுவில் ஒரு குட்டித் தூக்கம், (அப்படி கண்மூடினால் அது“தானே”வரும்.) (“சமைப்பது, துணி துவைப்பது, பாத்திரம் கழுவுவது, வீட்டை சுத்தம் செய்வது, போன்ற வீட்டு வேலைகளை செய்து முடித்து விட்டு, எனக்குள்ளேயே, “இந்த வேலைகளை செய்யவே 24 மணி நேரமே போதாது! சே! என்ன வேலைகளோ”!!! என்று புலம்பும் போது, புலம்பல் தாங்காது கரண்டே வந்து விடுமே!!!:)) )
உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் சொல்ல விரும்புவது என்ன?
திருமணத்தன்று எவ்வளவு மகிழ்ச்சியோடு இருந்தீர்களோ! அதே மகிழ்ச்சியை, தினமும் தக்க வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அனுசரனையோடு நடந்து கொண்டால் அந்த சந்தோஷம் தினமும் உங்களை வந்தடையும்!” என்று மனதாறச் சொல்லி அவர்களை வாழ்த்துவேன்.
உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால், எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புவீர்கள்?
ஒவ்வொரு வீட்டிலிருந்து ஆரம்பித்து, ஊர், மாவட்டம், மாநிலம், நாடு, தேசம் என்று அனைத்துவிடங்களிலும், மனிதரை, மனிதர் நேசிக்கும் மனிதாபிமானம், உறவுகளை நேசித்தல், ஒருவொருக்கொருவர் விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கு, அன்பு பரிமாற்றம், மரியாதையுடன் பழகுதல், போன்ற நற்பண்புகளை நாம் வளர்த்துக் கொண்டால், உலகத்துக்கென்று எந்த பிரச்சனை வரப் போகிறது? இயற்கையின் பிரச்சனைகள் என்றால், மனிதரின் இந்த இயற்கையான குணங்கள் அதை ஒரளவு சரி செய்தும் விடுமென நினைக்கிறேன்.
நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?
குடும்பத்தில் உள்ள அனைவரின் ஆலோசனைகளையும் பெற்றுக் கொண்டு, அதில் எது சிறப்பாக இருக்கிறதோ! அதன்படி செயலாற்ற முனைவேன். மற்றபடி நடப்பதுதான் நடக்கும்.! நம் மனதின் முடிவின்படியோ, இல்லை மற்றவர்களின் யோசனைபடியோ செயலாற்றினாலும், செயலாற்ற முனைந்தாலும், விதி, நம் யாருடைய அட்வைஸையும் கேட்டு நடக்காது என்பது என் ஆணித்தரமான நம்பிக்கை. (பொதுவாக அட்வைஸ் என்பதை, பிறரிடம் பெறுவதே அனைவருக்கும் பிடிக்காத ஒன்று. அதற்கு யாரும் “விதி” (யும்) விலக்கல்ல! )
உங்களை பற்றிய தவறான தகவல் பரப்பினால், என்ன செய்வீர்கள்?
தவறான தகவலை காலம் ஒரு நாள் திருத்தி காட்டும் என்ற நம்பிக்கையில், பொறுமையுடன் இருப்பேன். வேறு வழி! தவறான தகவலென்று கத்திக் கதறிச் சொன்னாலும், கேட்பவர் அதை காது கொடுத்து கேட்காத வரை, (நம் காலம் கனியாத வரை) நம் மனதும் உடம்புந்தான், மேற்கொண்டு புண்ணாகும். ( நான் மிகவும் நல்லவள் என்பதற்கு இதை விட வேறு அத்தாட்சி வேண்டுமா?)
உங்கள் நண்பரின் மனைவி இறந்தால், அவரிடம் என்ன சொல்வீர்கள்?
"உண்மையாக நேசித்து வாழ்ந்து வரும் ஒரு தம்பதியரை விதி தன் கூரிய வாள் கொண்டு இரு கூறாக பிரித்து சந்தோசபட்டுக் கொள்கிறது. ஏனென்றால் அதன் பொழுது போக்கே அதுதான்.! “ஆற்றின் அக்கரையில் பிரசவ வேதனையில், துன்புறும் தன் மகளை காக்க, ஆற்றில் கரை புரண்ட வெள்ளத்தின் காரணமாக, விரைந்து செல்ல இயலா தன் நிலை குறித்து கலங்கி கதறும், ஒரு தாய்மைக்காக, “தானே” ஒரு பெண்ணாக உருமாறி, அதுவும் அந்த தாயின் வடிவிலேயே மாறி, அவள் மகளுக்கு உதவி செய்து காத்து, “தாயுமானவன்” என்ற பெயருடன் பூமியில் நிலை கொண்டார் அந்த பரமேஸ்வரன்.” இனி உங்கள் குழந்தைகளுக்கு அவரைப்போல் தந்தையோடு மட்டுமல்லாது, “தாயுமானவனாய்” இருந்து உங்கள் கடமைகளை அவர்களுக்கு செய்து வாருங்கள்!” என்று எனக்கு தெரிந்த வரை ஆறுதல் கூறுவேன்.
குழந்தைகளற்ற நண்பரென்றால் வேறு விதமாக ஆறுதல் அளிக்க வேண்டியதுதான்.! ஆனால், “ஆறுதல்” என்பது மனப்புண்ணின் எரிச்சல் அகற்றும் சிறு காற்றுதான். மற்றபடி உருண்டோடும் காலங்கள்தாம், முடிந்தால் அவரை தேற்ற முயற்சிக்கும்.
உங்கள் வீட்டில் தனியாக இருந்தால், என்ன செய்வீர்கள்?
எனக்கு வீட்டின் வேலைகளே பெரும்பாலும் சரியாகவிருக்கும்.! அதுவும் முடிந்து விட்டால், ஏதாவது புத்தகம் படிப்பது, கைவேலைகள் (சுவரில், நிலைப்படியில்,சம்கி வைத்து ஏதாவது தைப்பது, ஒட்டுவது, என்று தனிமையை போக்க செய்து, “வீட்டை அலங்கோலமாக்குகிறாயே!” என்று அனைவரிடமும் திட்டுகள் வேறு வாங்கி, தனிமையை சமாளித்திருக்கிறேன்.) செய்வது, என்று தனிமையை விரட்டிய காலம் போய் இன்று எதையாவது எழுதிக் கொண்டும், நடுவில் டி.வி யுமாக, தனிமையை போக்குகிறேன்.
இதற்குள் இந்த தொடர் பதிவில் வலைத்தளத்தின் உறவுகள் அனைவரும் இணைந்திருப்பார்கள் என்று நம்புகிறேன்
######################################
வணக்கம் அனைவருக்கும்.
இன்று சகோதரி கோமதி அரசு அவர்களின் வானொலி பதிவை கண்டதும், அவர் கூறிய அந்த கேள்வி பதில், சுற்றுத் தொடரில் நானும் கலந்து கொண்டது நினைவுக்கு வந்தது. ஆனால் அதை எடுத்து படிக்கும் போது, அவர் அளவுக்கு அருமையான பதில்களை நான் தந்திருக்கவில்லை என்பதை புரிந்து கொண்டேன். அப்போது அவரின் அறிமுகமும் எனக்கில்லை. ஆனாலும் அன்று என்னையும் பெருமைபடுத்திய நட்புள்ளங்களுக்கு எப்படி நன்றி சொல்லப் போகிறேன் எனத் தெரியவில்லை.
அன்று ஏதோ சமாளித்து எழுதியது இன்று கோமதி அரசு சகோதரியின் பதிவை படிக்கும் போது நினைவுககு வர இது மீள் பதிவாக மீண்டும் இன்று என் வலைப்பூவில் உருப்பெறுகிறது. "உனக்கு இது ஒரு பதிவை உருவாக்க வேண்டிய நிர்ப்பந்தம் என புரிகிறதென " என் மனது உறுதியுடன் சொல்கிறது. இப்படியான நிர்பந்தங்களினால், சகோதரி கோமதி அரசு அவர்களின் பதிவோடு, பதிவாக, பத்தோடு பதினொன்றாக இதுவும் இங்கே அரங்கேறுகிறது.
அன்று மனதில் எழுந்த எண்ணங்களை மட்டும் அப்போதுதான் கற்றுக் கொண்ட டேபிள் டாபில் எப்படியோ தொகுத்து தந்த நான் இன்று கைப்பேசியில், வண்ணங்களையும் இணைத்து தந்துள்ளேன். இது ஒன்றுதான், பத்து வருடத்தில் நான் பெற்ற முன்னேற்றம்.இதை நவிலும் போது சற்று நாணமாகத்தான் உள்ளது. எனினும், இப்போது உங்கள் அனைவரின் ஊக்கம் நிறைந்த அன்புகளை பெற்ற பெருமிதத்தில் மகிழ்வெய்தியிருக்கிறேன்.
அன்று பதிவுக்கு வந்து பதில் தந்து வாழ்த்தியவர்களுக்கும், இன்று பதில் தந்து வாழ்த்தப் போகிறவர்களுக்கும் என் பணிவான நன்றிகள்🙏.
என் அம்மாவின் அம்மா 104 வயது வரை வாழ்ந்தார். காலில் விழுந்து ஆசி கோரும்போது "நூறு வயது என்று வாழ்த்த மாட்டேன். அதில் எவ்வளவு சிரமம் என்பது எனக்குதான் தெரியும். இருக்கும் வரை சந்தோஷமாக நோய்நொடி இல்லாமல் இரு" என்று வாழ்த்துவார்.
ReplyDeleteகாலை வணக்கம் சகோதரரே
Deleteதங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.
ஆம் அந்த காலத்தில் கொஞ்சம் கூடுதலாக வயது வாழ்ந்து விட்டாலே அவர்கள் அப்படித்தான் சொல்வார்கள். நான் அதுபோல் வயதுள்ளவர்களை சந்தித்ததில்லை. எங்கள் பாட்டி 87 வருடம் உயிரோடு இருந்தார்கள். அவர்களை யாராவது "நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்." என்று ஒரு பேச்சுக்கு சொன்னால் கூட கோபப்படுவர்.அதற்கு மேலும் தான் இன்னமும் வாழுவோமோ என்ற கவலை அவர் மனதில் எழும் என நினைக்கிறேன்.
எங்களுக்கு அவர் ஆசி வழங்கும் போது உங்கள் பாட்டியை போல "நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமாக இரு" என்றுதான் வாழ்த்துவார். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
என் அம்மாவின் அம்மா 104 வயது வரை வாழ்ந்தார். காலில் விழுந்து ஆசி கோரும்போது "நூறு வயது என்று வாழ்த்த மாட்டேன். அதில் எவ்வளவு சிரமம் என்பது எனக்குதான் தெரியும். இருக்கும் வரை சந்தோஷமாக நோய்நொடி இல்லாமல் இரு" என்று வாழ்த்துவார்.
ReplyDeleteஅதுபோல இருக்கிறது நீங்கள் சொல்வதும்.
வணக்கம் சகோதரரே
Deleteதங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.
தங்கள் பாட்டியை நான் நமஸ்கரித்து கொள்கிறேன். நீண்ட வருடங்கள் இறைவனருளால் இந்த உலகில் வாழ்ந்து விட்டால், மறு பிறவியென்பது இனி கிடையாது எனச் சொல்வார்கள். உங்கள் பாட்டியின் ஆசிர்வாதம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
என் பாஸ் இப்போதும் மனம்விட்டு சத்தமாக சிரிக்கிறார். பார்க்கக் கொஞ்சம் பொறாமையாகத்தான் இருக்கிறது! நீங்கள் என்னடா வென்றால் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் சிரிக்கக் கூடாது என்கிறீர்கள்
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.
ஹா ஹா ஹா. உங்கள் பாஸ் சிரித்தால், உங்களுக்கே பொறாமை வருகிறது. "வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்." என்பதும் ஒரு பழமொழிதானே.. மேலும், சிலர் நன்றாக சிரிப்பார்கள். அவர்களை மற்றவர்கள் எப்போதும் சிரித்தபடிதான். பேச்சு. என சொல்வதும், சிலர் புன்னகையோடு நிறுத்திக் கொள்வதை, "எப்போதாவது வாய் விட்டுச் சிரிக்க தோன்றுகிறதா ..? சரியான உம்மனாமூஞ்சி...." எனச் சொல்வதும் மனித இயல்புதானே..!
அன்றைய இளமை பருவ வளர்ப்பில் என் பாட்டி அடக்கமாக சிரிக்க கற்றுத் தந்தது நல்லதுதான்..! . திருமணமானவுடனே எங்கள் புகுந்த வீட்டிலும், அக்கம்பக்கம் நாலு பேருடன் சிரித்துப் பேச தடை..! அதனால் கற்றது பயனுள்ளதானது. இப்பவும் சிரிப்பு என்றால் அமைதியாகத்தான் மலர்கிறது எனக்கு. தொட்டில் பழக்கம்....! அதனால் அப்போதெல்லாம் மோனாலிஸா புன்முறுவலை மிகவும் ரசிப்பேன். இப்போது பதிவுலகில்தான் வார்த்தையால் சிரிக்க கற்றுக் கொண்டேன்.:))) தங்களது அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
"உங்களுக்கேன்" என திருத்திப் படிக்கவும். ஒரு "ன்"ல் அர்த்தமே மாறி விடுகிறது. :))
Deleteவீட்டு தினசரி வேலைகளை செய்யவே உங்களுக்கு 24 மணிநேரம் போதவில்லை என்று சொல்லி இருக்கிறீர்கள். பவர்கட் அப்போது வந்ததில்லை போலும். 2015 ல் தான் சென்னையில் வெள்ளம் வந்து ஒரு வாரம் மின்சாரம் இல்லாமல் இருந்தோம்! அதற்கு முன்பும் ஒருமுறை அப்படி இருந்திருக்கிறோம்.
ReplyDeleteபொதுவாக மனித குணம் பிறரிடம் அட்வைஸ் கேட்போமே தவிர, நாம் மனதில் என்ன நினைத்தோமோ அதைத்தான் செய்வோம். சும்மா மற்றவர்கள் அபிப்ராயம் என்ன அதில் என்பதை ஆழம் பார்க்கவே விரும்புவோம்!!
ReplyDeleteஅட, அன்று டெஸ்க்டாப்பில் வலைத்தளங்கள் வந்து கொண்டிருந்தீர்களா? அப்புறம் அது இப்போ என்ன ஆச்சு? ஏன் கைபேசி?
ReplyDeleteஅக்கா, வாழும் வரை நல்ல ஆரோக்கியத்தோடு வாழ வேன்டும் அவ்வளவுதான்.
ReplyDeleteநான் யாரையேனும் அழைக்கும் போது அவர்கள் உடனே 'ஆயுசு நூறு" நான் நினைச்சேன் கூப்பிடணும்னு....என்று நான் உடனே அப்படியே ஆகட்டும்! சந்தோஷம் நான் அதை அப்படியே ஏற்பேன்
100 என்பது ஒரு எண் தான். எனவே ஆயுசு நூறு என்றால்....நூறு வயது வாழ்ந்தது போன்றான ஒரு மனத் திருப்தியுடன், ஆரோக்கியத்துடன் நிறைவாகக் கண்ணை மூடுவது என்றும் சொல்லலாம் இல்லையா அக்கா? (நமக்கு ஆசைக்கென்ன பஞ்சமா என்ன?!!)
இருக்கும் வரை திருப்தியா வாழணும்! அந்த மன நிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும்...என்றும் நினைப்பதுண்டு .
உங்க பதிலும் நல்லாருக்கு
கீதா
வணக்கம் சகோதரி
Deleteதங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.
/அக்கா, வாழும் வரை நல்ல ஆரோக்கியத்தோடு வாழ வேன்டும் அவ்வளவுதான்./
தங்கள் கூற்று உண்மைதான்..! ஆரோக்கியம் இல்லாத ஆயுள் கொடுமை.. நமக்கு மட்டுமல்ல..! நம்மை கவனிப்பவர்களுக்கும். "இருக்கும் வரை நல்ல ஆரோக்கியத்தை கொடு" என்றுதான் நான் தினமும் வேண்டியபடி உள்ளேன். என் எண்ணத்தை "அவன்" ஏற்க வேண்டும்.
/100 என்பது ஒரு எண் தான். எனவே ஆயுசு நூறு என்றால்....நூறு வயது வாழ்ந்தது போன்றான ஒரு மனத் திருப்தியுடன், ஆரோக்கியத்துடன் நிறைவாகக் கண்ணை மூடுவது என்றும் சொல்லலாம் இல்லையா அக்கா? (நமக்கு ஆசைக்கென்ன பஞ்சமா என்ன?!!)
இருக்கும் வரை திருப்தியா வாழணும்! அந்த மன நிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும்...என்றும் நினைப்பதுண்டு ./
அதைச் சொல்லுங்கள். வாழ்வில் திருப்திதான் முக்கியம். ஆனால், அது சில சமயம் ஆசையெனும், படகில் ஏறி தட்டுத் தடுமாறுகிறது. "அந்த ஆசைகளை மட்டும், அளவோடு கொடு" என்ற வேண்டுதலையும் "அவனிடம்" அடிக்கடி நினைவுபடுத்த வேண்டியுள்ளது. எத்தனையைதான் "அவன்" நினைவு வைத்துக் கொள்வானோ. .? உங்கள் கருத்துக்கள் முற்றிலும் சரி...! உங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஆமாம் அக்கா நானும் நிறைய கற்றுக் கொள்ள விரும்புகிறேன் புதுசு புதுசா...அதான் இப்படிக் கற்பதும் கூட ஒரு மன நிறைவைத் தரும் ...புத்துணச்சிதான்.
ReplyDeleteகீதா
அக்கா, நான் எப்போதும் நன்றாக வாய்விட்டுச் சிரித்துவிடுவேன். யாரேனும் ஏதாச்சும் சொல்லும் போது. வாய்விட்டுச்சிரிச்சா நோய்விட்டுப் போகும்னு சொல்வதுண்டே.
ReplyDeleteஆனா நம்ம குடும்பங்களில் பெண் என்றால் அதிகம் சிரிக்கக் கூடாதுன்னு சொல்வாங்க. நான் இதை வன்மையாகக் கண்டிப்பேன். அதென்ன பாரபட்சம்?ஹிஹிஹி
நிஜமாகவே வாய்விட்டுச் சிரிக்கும் போது நம் மனம் ரொம்ப லைட் ஆகும்!
எபியில் ஸ்ரீராம், நெல்லை இவங்க எல்லாம் கமென்ட் பண்ணும் போது எனக்குச் சிறிப்பு பொத்துக் கொண்டு வரும் சிரித்துவிடுவேன். அதுவும் நெல்லை என்னைக் கலாய்க்கறப்ப சில சமயம் விலா எலும்பு சுளுக்கும் வரை சிரிப்பேன்.
ஸ்ரீராம் சொல்வார் ....பாவம் அவர் வாய்விட்டுச் சிரிச்சா இருமல் வந்துரும் சுளுக்கிக்கும் அவருக்கு....அவஸ்தையா இருக்கும் அவருக்கு.
கீதா
பவர் கட் உங்க பதில் பார்த்து புன்னகை! கடைசி வரிதான்!
ReplyDeleteஎனக்கும் பவர் கட் னா பிரச்சனை இல்லை. என்ன தண்ணி இருக்கணும் டேங்கில் அவ்வளவுதான். மற்றபடி பொழுது போறதுக்கா பஞ்சம்.
குழந்தைகளின் திருமண நாள் - உங்கள் பதில் நன்று...ஆனால் பெரும்பாலும் நம் வீட்டில் கொண்டாடும் வழக்கம் அவ்வளவாக இல்லை.
உலகப் பிரச்சனையை தீர்ப்பதை விட நாம் முதலில் ஒழுங்கா இருந்தா போதுமே இல்லையா? உங்க பதிலே...
முன்பெல்லாம் யாராச்சும் என்னைப் பத்தி தப்பா சொன்னா மனம் கிடந்து கஷ்டப்படும். இப்பலாம் அப்படி இல்லை. கடந்துவிட முடிகிறது. இல்லைனா நேரடியாகப் பேசித் தீர்த்துக் கொண்டுவிடுவேன் அது சொன்னவங்களைப் பொருத்து.
தனிமை எனக்குச் சில நேரங்களில் ரொம்பப் பிடிக்கும். மகன் கூட இருந்தால் தனிமை என்பது மனதில் எழவே எழாது!
உங்க பதில்கள் எல்லாமே நல்லாருக்கு அக்கா
கீதா
சென்னையில் வெள்ளம் வந்தப்ப கிட்டத்தட்ட ஒரு வாரம் பவர் கட். அதுவும் நல்லா இருந்தது என்ன தண்ணி இல்லாம கஷ்டம் அது ஒன்றுதான்
ReplyDeleteசென்னையில் இருந்தவரை நேரம் சரியா இருக்கும் பல பொறுப்புகளினால். இப்ப அந்த அளவு இல்லைனாலும், நேரம் சரியா இருக்கு. சில ஆன்லைன் வேலைகள் அப்பப்ப செய்வதால். வீட்டு வேலைகளும், ப்ளாக் வாசித்தல் பதில்கள் நம்மால ஒன்று ரெண்டுனா இருக்க முடிகிறது? ஹிஹிஹிஹி
உங்கள் வீட்டுப் பணிகள் தெரிகிறது கமலாக்கா
மீண்டும் வேண்டுகோள் உங்க ஆரோக்கியத்தைக் கவனிச்சுக்கோங்க.
கீதா
பழைய பதிவை மீண்டும் நினைவுக்கு கொண்டு வந்து என்னையும் குறிப்பிட்டமைக்கு நன்றி.
ReplyDeleteஅதன் சுட்டியையும் கொடுத்து இருக்கலாம்.
தாங்கள் நூறாண்டு காலம் வாழ்ந்திட எமது பிரார்த்தனைகள்..
கேள்விகளும் அதற்கான உங்கள் பதில்களும் நன்று.
ReplyDeleteபரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த வலையுலகம்... அப்போது இப்படியான தொடர்பதிவுகள் வந்து கொண்டிருந்தது. எத்தனை தொடர்பதிவுகள் என சிலர் சொல்லவும் சொல்வார்கள்... இப்போது எழுதுபவர்களும் குறைந்து, படிப்பவர்களும் குறைந்து கொண்டிருக்கிறார்கள் என்பது வருத்தமான விஷயம்.
''கேள்விக்கு என்ன பதில்'' தொடர் பதிவுக்கு நீங்கள் கூறிய பதில்களும் நன்றாக இருக்கிறது.
ReplyDeleteதேவகோட்டை ஜி என்னையும் வேறு ஒரு தொடர் பதிவுக்கு அழைத்து இருந்தார்.
அப்போது வலைத்தளம் சுறு சுறுப்பாக இயங்க்கி கொண்டு இருந்த காலம்.
நம்குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தாலே 100 வயது வாழ்ந்த நிறைவை தரும். நாம் நினைப்பது போல மரணம் வராது. இறைவன் நினைப்பதுதான் நடக்கும்.
படைத்தவன் நம்மை பூமிக்கு அனுப்பும் போதே "தோற்றம், மறைவு" இரண்டையும் போட்டுதான் அனுப்புகிறான்.
அது தெரியாதவரை குடும்பத்தினருடன் மகிழ்வாய் கடமைகளை செய்து கொண்டு 100 வயது வரை வாழுங்கள் கமலா.
கணினியில் உங்கள் ஆசி போல நிறைய கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் பேரன், பேத்தி , மகன், மகள் எல்லோரும் கற்று தருவார்கள் கேளுங்கள்.
உங்கள் ஆசை போல
ReplyDeleteபேரன், பேத்திகளுடன் இருக்கிறீர்கள் வாய்விட்டு சிரிக்கலாமே. புன்னகை மட்டும் எதற்கு? மழலையின் சிரிப்பும் , வயதான பின் பொக்கை வாய் சிரிப்பும் அழகு என்று ஒரு தொடர் பதிவில் எழுதி இருப்பேன்.
ReplyDelete“இந்த வேலைகளை செய்யவே 24 மணி நேரமே போதாது! சே! என்ன வேலைகளோ”!!! என்று புலம்பும் போது, புலம்பல் தாங்காது கரண்டே வந்து விடுமே!!!:)) )//
ReplyDeleteஆஹா! புலம்பல் தாங்காது கரண்ட் வந்தால் நல்லதுதான்.
இது தெரியாமல் போய் விட்டதே!
குடும்பத்தினர்களுக்கு தேவையானதை செய்ய வேண்டும் என்று இருக்கும் போது கரண்ட் இல்லை என்று சில வேலைகளில் இருந்து நாம் தப்பிக்க முடியாது என்பது உண்மை.
அனைத்து கேள்விகளுக்கும் நன்றாக பதில் அளித்து இருக்கிறீர்கள்.
ReplyDelete//இனி உங்கள் குழந்தைகளுக்கு அவரைப்போல் தந்தையோடு மட்டுமல்லாது, “தாயுமானவனாய்” இருந்து உங்கள் கடமைகளை அவர்களுக்கு செய்து வாருங்கள்!” என்று எனக்கு தெரிந்த வரை ஆறுதல் கூறுவேன்.//
ஆற்றுப்படுத்துதல் அது ஒரு பெரிய கலை. அதை நல்லமுறையில் செய்து இருக்கிறீர்கள்.
தனிமையை போக்க கைவேலைகள் செய்வது அருமை, ரேடியோவில் பாட்டு கேட்டுக் கொண்டு நானும் கூடை பின்னூதல், கண்மேட்டி பின்னல், எம்பிராய்டரி எல்லாம் செய்வேன்.
என் பதிவு உங்களை பழைய பதிவை பதிய வைத்து விட்டது அது மகிழ்ச்சி, நன்றி. அப்போது படிக்கவில்லை, இப்போது படிக்க தந்தமைக்கு உங்களுக்கு நன்றி.
எனக்கு தெரிந்தவரை நான் சொல்லி இருக்கிறேன். உங்கள் அனுபவங்களை நீங்கள் பகிர்ந்து இருக்கிறீர்கள்.
தேவகோட்டை ஜி சொன்னது போல பழைய பதிவின் சுட்டி கொடுத்து இருக்கலாம்.
வாழ்த்துகள், பாராட்டுக்கள்.