Sunday, October 4, 2015

வலைப்பதிவர் திருவிழா-2015 அழைப்பிதழ்! (கனவு 3)

வணக்கம் வலையுறவுகளே

வீட்டின் விஷேடங்களின், அலைச்சல்களிலும், பிரயாணங்களின் களைப்பிலும், சற்று உடல்நலகுறைவு ஏற்படவலைப்பக்கம் வராமல் இருந்தவள், இன்று வந்து பார்த்ததும் திகைத்துப்போய் விட்டேன். இவ்வருடம் புதுக்கோட்டையில் நடைபெறும் பதிவர் திருவிழா ஜம்மென்று நாளுக்கு நாள் மெருகு ௬ட்டியத் தங்கத் தேரில் ஏறி, ராஜ வீதியில் பவனி வந்து கொண்டிருப்பதைக் கண்டு பெரும் மகிழ்வடைந்து விட்டேன். அதற்கென உழைத்து அதன் சிறப்பை அதிகரித்து வரும் பதிவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகளும், மனம் நிறைந்த வாழ்த்துக்களையும் சொல்லிக் கொள்ளப் பிரியப்படுகிறேன். அதற்கேற்ற மாதிரி போட்டிகளும், பரிசுகளுமாக வலையுலகமே களைகட்டிக்கொண்டிருக்கிறது. அறிந்தவர், தெரிந்தவர் அனைவருமே சிறப்பான முறையில், கட்டுரைகளையும், கவிதைகளையும் எழுதக் குவித்த வண்ணம் இருந்தை கண்டு மிகவும் சந்தோஷம் அடைந்து விட்டேன். அனைவரும் வெற்றி வாகை சூடி பரிசுகள் பெற இறைவனை மனமாற பிரார்த்திக்கிறேன். என்னால் இந்த வருடம் எதிலும் கலந்து கொள்ள இயலாவிடினும், நானும் என் பங்குக்கு பதிவர்களை புதுக்கோட்டை திருவிழாவுக்கு வருக.. வருக..என அன்போடு அழைக்கிறேன். 

(எதிலும் கலந்து கொள்ளாமல், அழைப்பிதழை என் பதிவில் வெளியிடலாமா என்று தெரியாமலேயே வெளியிட்டு அழைத்து விட்டேன். தவறெனின் மன்னிக்கவும்.) அடுத்த வருடம் முடிந்தால் உங்களுடன் நானும் கலந்து கொள்வேன் என்ற நம்பிக்கையோடு உங்கள் சகோதரி கமலா ஹரிஹரன்.







எழுத ஆரம்பித்த கை தடை செய்தால் நிற்குமா.? நீண்ட பதிவாயிருப்பினும், என் பதிவினையும் பொறுமையுடன் படித்து கருத்திடுபவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்...

என் தூக்கத்தின் முதலில் திடுமென கண் விழித்தேன். வண்ண மயமான உலகம்.! இதமான தென்றல் வருட உள்ளம் மகிழ்விக்கும் இனிதான இரவு மாதிரி இருந்தது. ஆனாலும், விண்மீன்கள் மாதிரி பிரகாசமான ஒளிச்சுடர்கள் கண் சிமிட்டியபடி இருந்தன. இரவுதானா? இல்லை, இது இரவுடன் இணைக்கப்பட்ட ஒரு பகலா.? இது என்ன இடம்.? என புரிந்து கொள்ள முடியாத ஒரு மனநிலையில் தடுமாறிய போது, ஆங்காங்கே ஜல், ஜல் என காலில் சலங்கை கட்டிய அழகிய பெண்கள் அழகோவியமாக நட()மாடும் பாணியில் அசைந்து சென்று கொண்டிருந்தனர். இவர்களெல்லாம் யார்.? நம்மை போல் மனிதர்களா? இல்லை, வானுலகத்துதேவதைகளா.? இவர்களை வர்ணிக்கவே இயலாத அளவுக்கு இவ்வளவு ஒரு அழகா.? என்று திகைத்து நிற்கும் போது, என்னைச் சுற்றிலும் சுகந்த நறுமணங்கள் நாசிக்கு மணம் தந்தபடிபுகை மாதிரியான வடிவத்தில் சுழன்று வட்டமிட்டு அகன்றபடியிருந்தது. கண்ணெதிரே பளபளவென்று பெரிய பெரிய தூண்கள் விண்ணையும் தாண்டி சென்றுவிட முயற்சித்து கொண்டிருந்தன. அதன் அழகான சிற்ப வேலைப்பாடுகள் மனதையும் சேர்த்து கவரவே, அருகில் சென்று லேசாக தொடும் நேரம், அவை அத்தனையும் தங்கத்தாலும், வைரங்களாலும், இன்னும் பல விதமான உலோகங்களாலும், வடிவமைக்கபட்டதை மனம் உணர்த்த விழிகள் இன்னமும் விரிந்தன. ஒளி வீசும் மரங்களும், அதன் கிளைகளில் பூமியில் எங்குமே காணவே முடியாமல், கதைகளில் மட்டுமே படித்துணர்ந்த சுவையூட்டும் வாசமிகு கனிகளுமாக, “அட,அட, இது நாம் வாழ்நத இடமில்லை.! கண்டிப்பாக, பிறப்பில் வினைகளுக்கு ஏற்றபடி மானிடர்களுக்கு அமையும் சுவர்க்க பூமிதான் என்று உள் மனது ஆரவாரத்துடன் கொக்கரிக்க, “ஆகா…! நல்ல நேரந்தான். நம் பிறப்பின் வினைகள் நல்ல விதமாக அமைந்து இந்த இடத்திற்கு கொண்டு வந்து சேர்த்து விட்டதே.! கடவுளே..!” உனக்கு எவ்விதம் நன்றி சொல்லப் போகிறேன்.!” உணர்ச்சிப் பெருக்கில் உதடுகள் சற்று சத்தமாக முனகியது.

எந்த கடவுளுக்கு இத்தனை நன்றிகள்.? வந்த குரலில், என்னையும் இங்கு மதித்து யார் விசாரிக்கிறார்கள்.? என ஆவலுடன் தலைத்திருப்பி பார்த்தேன். பதிலை எதிர் பாராமல், நடந்து சென்ற அந்த உருவத்தை பின் தொடர, சிறு ௬ட்டமாக அங்கு அமர்ந்து உல்லாசமாக பேசிக் கொண்டிருந்த சிலரை அணுகியது அவ்வுருவம்.

இதோ பார்த்தீர்களா.? நம் இனிய தமிழ் பேசும் அம்மையார். கடவுளுக்கு நன்றி ௬றிக்கொண்டு புலம்பியபடி, திகைத்து நின்று கொண்டிருக்கிறார். இன்றுதான் இங்கு புது வரவு போலிருக்கிறது.! என்ற அந்தக்குரலுக்கு செவிச்சாய்த்து திரும்பிய அனைவரையும் பார்த்து ஒரு நொடி திகைத்துப் போய் விட்டேன். ஏனெனில் அனைவரும் அறிந்த தெரிந்த முகங்கள். அட..! நம் தேசத்திற்கே வழிகாட்டிய தேசப்பிதா, வாழ்க்கையை பண்போடு வழி நடத்திட உதவியாய் ஈரடிகளை பாவாக்கி இனிதே தந்திட்ட வள்ளுவனார், மொழியினுள் தமிழை அமுதமாக்கி இன்றும், தரணியில் தனக்கென்று தனியிடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கும் முண்டாசு கவிஞர், என்று அனைவரும் அறிந்த தெரிந்த முகங்கள்…!. ஓடிப்போய் அனைவருக்கும், வணக்கம் ௬றி, “இன்று என்ன தவம் செய்திருக்கிறேன்.! உங்களையெல்லாம் இங்கு சந்தித்தது மிகுந்த மகிழ்வை தருகிறது.! என்று முடிக்கும் முன், “உன்னைஇதற்கு முன் நான் ஏற்கனவே சந்தித்திருக்கிறேனே…! என்று தாடையை தட்டி யோசித்தார் கவிஞர். “ஆமாம்..! இவரை இதற்கு முன் பார்த்த நினைவு எனக்கும் வருகிறது.” என்றபடி எங்கோ புறப்படுவதற்காக தன் தடியை ஊன்றியபடி எழுந்து நின்றார் அடிகளார். ஐய்யய்யோ..! இப்படியே அன்றுமாதிரி அனைவரும் கிளம்பி விட்டால் என்ன செய்வதென்ற பயத்துடன். “நான்தான்…” என என்னைப் பற்றி விரிவாக அறிமுகபடுத்திக் கொள்ளலாம் என நான் ஆரம்பித்த போது, “எனக்கு நினைவுக்கு வந்து விட்டது. அன்றொரு நாள் நம் பணிகளிடையே இவரை சந்தித்தோம். கேள்விகளை கேட்டு விட்டு நம் பணி நிமித்தம் நாம் வேகமாக மறைய, வழக்கம் போல், நம் தமிழ் கடவுள் இவரிடம் சிறிது நேரம் மாட்டிக்கொண்டதாக அவரே அன்று ௬றினார். அன்று ஏதோகனவுடன்நம்மையெல்லாம் சந்தித்தவர் இன்று மறுபடியும்….இங்கு வந்திருக்கிறார்.” என்று வள்ளுவனார், நிதானமாக என் கதையை விளக்க, “அப்பாடா’” என்றிருந்தது எனக்கு. "பின்னே, நான் ௬றி நினைவூட்ட இருந்ததையெல்லாம் அவர் எடுத்து ௬றி விட்டார் இல்லையா".?

நன்றியுடன் அவரை ஏறிட்டபோது, “சரி.! இப்போது இங்கு மறுபடியும் எதற்காக வருகை.? சற்று முரட்டு குரலில், கவிஞர் அதட்டவே, மறுபடி சொல்ல வந்ததை சொல்லாமல் போய் விடுவோமோ…! என்ற பயத்தில், “அன்று உங்களையெல்லாம் கனவுலகில் சந்தித்தேன் என்றாலும் அதை ஒரு பதிவாக என் வலைத்தளத்தில் வெளியிட்டு விட்டேன். இப்போதைய என் கவலையெல்லாம் வேறொன்றைப் பற்றியது. என் வலைப்பூவில் நான் அவ்வப்போதுதான் எழுதி வருகிறேன். தற்சமயம், வருடாவருடம் நடைபெறும் "பதிவர் திருவிழா" இந்த முறை புதுக்கோட்டையில் பெரும் விழாவாக நடைபெற உள்ளது. இவ்விழாவில் என் சந்தர்ப்ப சூழலினால் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. அங்கு அறிவிக்கப்பட்ட மின் கணினித் தமிழ்என்ற வரிசையான போட்டிகளிலும் என்னால் பங்கேற்க இயலவில்லை. ஏனெனில் காலம் தாழ்த்தி விபரங்கள் அறிந்து கொண்ட நானும், கற்றுத் தேர்ந்த திறமையானவர்களுடன் கலந்து எழுத ஒரு கலக்கம். மற்றபடி நேரமும் அமையவில்லை. ஆனாலும், மனதின் ஒரு ஓரத்தில் இந்த ஏக்கம் தினமும் இருந்து கொண்டேயிருக்கிறது. சொல்லப் போனால், தூக்கத்திலும், கனவிலும் ௬ட இதை நினைவுதான். இன்று உங்களை சந்தித்த மகிழ்ச்சியில் என் மனதில் உள்ளதை சொல்லி விட்டேன். மேலும், என ஆரம்பித்த என்னை நிறுத்தி, “ஆமாம்..! அது என்ன.? பதிவுலகம், பதிவு, பதிவர், வலைத்தளம், வலைப்பூ கணினித்தமிழ் என்று ஏகத்திற்கு தமிழில் சொல் அமைக்கிறாய்..! விபரமாக ௬று.! என்று கவிஞர் அவர் குரலில் அதட்டவே, மற்றவர்களின் முகத்திலும் அதைப்பற்றி அறியும் ஆவல் சிறிது எட்டிப் பார்த்தது.

இதைப் பற்றியெல்லாம் உங்களுக்கு தெரியாதா.? என்றவுடன், தெரியாததால்தானே கேட்கிறேன். “நூல், பாக்கள், செந்தமிழ், அருந்தமிழ், பைந்தமிழ், நாளேடு, மாதஇதழ், வாரஇதழ், கணிதம் இதெல்லாம் எங்களுக்கும் தெரியும். பூ., தளம்மின்கணினி, கணினித்தமிழ், இதிலெல்லாம் எப்படி எழுதுவது.? உளறுகிறாயா.? முதலில் கணினி என்றால் என்னவென்று விபரமாக ௬று..! 

 அப்பாடா.! எனக்கு அரைகுறையாக தெரிந்ததை இங்கு அளந்து விட ஒரு சமயம் கிடைத்த சந்தோஷத்தில், “கணினி என்றால்,” என ஆரம்பித்து, “வலைத்தளம், வலைப்பூ, பதிவர்கள், பதிவர்கள் சந்திப்பு.” என முடித்தேன். இதிலும் தங்களின்பாக்கள், தங்களைப் பற்றிய செய்திகள், வள்ளுவரின் குறளின் சிறப்புக்கள், காந்தியடிகளின் வரலாற்றுகள் என்று எப்போதும் எழுதி, தங்கள் அனைவரின் நினைவோடுதான், எங்களுக்குள் இருக்கும் திறமைகளையும் பறைசாற்றி பகிர்ந்து கொள்கிறோம். எங்களின் வருங்கால சந்ததியினருக்கும், உங்களைப் பற்றிய பெருமைகளையும் திறமைகளையும் மனதினில் நிறுத்தும்படிக்கு ஆவண செய்து வருகிறோம்.” என்றதும், அனைவரின் முகத்திலும், சிறு மகிழ்ச்சி ரேகைகள் ஓடியது.

சரி.! இன்று இங்கு வந்து நல்ல தகவல் சொல்லியிருக்கிறாய்.! இப்போது உனக்கு என்ன வேண்டும்.? கவிஞரின் குரலில் வேகம் இருந்தது.

இந்த வருடந்தான் என்னால் எதிலும் கலந்து கொள்ள முடியவில்லை..! அடுத்த வருடமாவது ஏதேனும் போட்டிகளுக்கு ஏற்ற திறமையுள்ளவளாக, நல்ல தமிழை சிரமமின்றி இலகுவாக எழுதும்படிக்கு என்னை தமிழில் செம்மைபடுத்த வேண்டும். என் கனவே அதுதான்…. என்ற என்னை ஏளனமாக நோக்கியவர், “இப்போது மட்டுமென்ன.? உன்கனவுதான் இது..! கனவில்தான் எங்களை வந்து சந்தித்து பேசிக் கொண்டிருக்கிறாய்…!” என்று௬றி கலகலவென நகைக்கவும்,அனைவரும் உடன் முறுவலித்தனர்.

கனவா.? மறுபடியுமா.? அடக்கடவுளே.! அப்படியானால் இவர்கள் இன்னும் சற்று நேரத்தில் மறைந்து போய் விடுவார்களே.! ஆறஅமர அமர்ந்து உரையாட முடியாதே என்று நான் யோசிக்க, “என்ன யோசனை.? என மீண்டும் குரல் கம்பீரமாக வரவும், “இல்லை.! தூய தமிழை அறிந்து ,கற்றுக் கொள்ள நேரம் இல்லையே…! என வருத்தமாக….” என முடிப்பதற்குள், “தமிழ் தப்பித்தது..! அத்தோடு நாங்களும்…" என்று சற்று ஓரமாக ஏடுடன் அமர்ந்து நாங்கள் பேசியதையெல்லாம், மெளனமாக  ரசித்து கேட்டபடியிருந்த, அவ்வைப்பிராட்டி, மெலிதாக ௬றவும், மறுபடி அங்கு சிரிப்பலைகள் எழுந்தன. 

சரி..! நான் பாடியதை பூமியில் இவர்கள் இன்றளவும் உணர்ந்து வழிமுறை படுத்துகிறார்களே..! அந்தளவிற்கு சந்தோஷம். வாழ்த்துக்கள்.! என கவிஞர் மகிழ்ந்து வாழ்த்தவும், “எங்கே.! அந்தப் பாடலை ஒருமுறை பாடுங்கள்..! என அனைவரும் கோரஸாக கேட்க, கவிஞரின் நாவு கம்பீரமான குரலோடு அசைந்தது.

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்

      இனிதாவது எங்கும் காணோம்
பாமர ராய், விலங்குகளாய், உலகனைத்தும்
      இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு
நாமமது தமிழரெனக் கொண்டுஇங்கு
      வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
      பரவும்வகை செய்தல் வேண்டும்.


யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்
      வள்ளுவர்போல், இளங்கோ வைப்போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததிலை
      உண்மை, வெறும் புகழ்ச்சி யில்லை
ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
      வாழ்கின்றோம்;ஒருசொற் கேளீர்!
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
      தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வீர்!


பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
      தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புதுநூல்கள்
      தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
      சொல்வதிலோர் மகிமை இல்லை
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
      அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.


உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின்
      வாக்கினிலே ஒளியுண்டாகும்
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
      கவிப்பெருக்கும் மேவு மாயின்
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
      விழிபெற்றுப் பதவி கொள்வார்
தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்
      இங்கமரர் சிறப்புக் கண்டார்.

யாரங்கே.! மனித வாடை.! இங்கே எனக்குத் தெரியாமல் நீ எப்படி இங்கே..! இவர்களுடன் உனக்கென்ன பேச்சு.? என பயங்கரமான குரலில், சத்தம் வந்ததும் பாட்டின் சுவையில் மயங்கி கிடந்த என் விழிகள் திறக்க எதிரே ஆஜானுபாகுவாய் ஒரு உருவம். ௬டவே விழிகளை உருட்டியபடி, அரக்கர்கள் போல அருகே இரு முரட்டாத்மாக்கள். “கிங்கரர்களே…! என் அனுமதியின்றி சுவர்க்கலோகத்தில் நுழைந்து இங்கு நிரந்தரமாக தங்கியிருப்பவர்களுடன்., உரையாடி கொண்டிருக்கும் இந்தப் பெண்மணிக்கு என்ன தண்டனை கொடுப்பது? என சித்திர குப்தனை  அழைத்துக் கேளுங்கள்.” தண்டனை சீக்கிரம் நிறைவேற்றப்படவேண்டும்.. இன்னும் இந்தப் பெண்மணியைப் போல் எத்தனை பேர், இங்கே கிளம்பியிருக்கிறார்கள் என்று கண்காணித்து விட்டு வருகிறேன். என யமதர்மன் நகர, கிங்கரர்கள் தன் உதவியாளர்களை என் அருகில் காவலுக்கு நிறுத்தி விட்டு சித்திர குப்தனிடம். சென்றனர். 

நான் பரிதாபமாக என் எதிரில் நிற்கும் கவிஞரையும், அடிகளாரையும் நோக்கி, “எப்படியாவது இவர்களிடமிருந்து "விடுதலை" வாங்கி தந்து விடுங்கள்..! “எனவும்இது கஸ்டந்தான்..! என்ற அரை நம்பிக்கை பார்வையுடன் காவல் புரிபவர்களிடம் அவர்கள் எவ்வளவோ எடுத்துக் ௬றியும், காவலர்கள், முடியவே முடியாது என்ற மாதிரி வாதிட்டு விட்டு, இது எமக்கு வந்த ஆஞ்கை..! நீங்கள் எதையும் பொருட்டாக்காமல் இங்கிருந்து சென்று விடுங்கள்”… என்று அவர்களை அப்புறபடுத்துவதில் தீவிரமாக, அவர்களும் வேறு வழியின்றி, சரி..! உன் எழுத்தை யாரால் மாற்ற இயலும்..? இனி பிராப்த்தப்படி கனவில் இல்லாமல் நிஜமாகவே,
எங்களோடு உரையாடும் சந்தர்ப்பம் உனக்கு சீக்கிரம் கிடைக்கப் போகிறது போலிருக்கிறது. எதற்கும் உன் தெய்வத்தை வேண்டிக் கொள். பராசக்தி.! இந்தப் பெண்மணியை உன்னால் முடிந்த வரை காப்பாற்று.! தமிழ் வாழ்க,! தமிழைப் போற்றும் தமிழரைப் பற்றிய தவகல் தந்த இப் பெண்மணி வாழ்க.!” என்று வாழ்த்தி விட்டு கண்ணெதிரேயே மறையலானார்கள்.

ஐயோ.! இவர்களும் சென்று விட்டார்களே.! அவர்கள் ௬ற்றுப்படி அவர்களுடனேயே தமிழில் உரையாடி கற்கும் சந்தர்ப்பங்கள் உருவாகும் என்றாலும், இப்பிறவியில், எனது இலட்சியங்கள் என்னாவது.? முருகா.! என்னை இப்படி மாட்டி விட்டு விட்டு நீ எங்கிருக்கிறாய்.? இது உனக்கே நல்லதாக தெரிகிறதா.? கந்தா, கடம்பா…!” என உள்ளம் உருகி அரற்றவும், படபடவென மயிலின் தோகை சத்தத்துடன் முருகன் வந்து நின்றான். முருகனை கண்டதும், நான் இங்கு வந்த கதையிலிருந்து சொந்த கதை வரை நான் விளக்க, “எனக்குத்தெரியும்.! எல்லாம் யாமறிவோம்.! நாளை கிருத்திகை விழாவிற்கு பூலோகம் செல்லும் வழியில் உன் குரல் கேட்டு வந்தேன்.! காவலர்களே.! இந்தப் பெண்மணியை மன்னித்து அனுப்பி விடுங்கள்.! எனமுருகன் உத்தரவிட, காவலர்கள் தடுமாறினாலும், என்னை விட மறுத்து முருகனிடமும் வாதித்தனர்.

நான் இந்த அம்மையாரை புத்தி ௬றி பூலோகத்திற்கு அனுப்பி விடுகிறேன். உங்கள் யமனுக்கு இந்த நிகழ்வுகள் யாவும் மறந்து விடும்படி செய்து விடுகிறேன். எனவே உங்களுக்கு ஒன்றும் பாதகங்கள் வாராது. இவரை விட்டு அகன்று விடுங்கள்.!” என முருகன் சற்று கோபத்தைக் காட்டி சொன்ன சொல்லுக்கு கட்டுப்பட்டு காவலர்களும் அரைகுறை மனதோடு மறைந்தனர்.

முருகா.! உனக்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை.! எப்படியோ சிக்கலான சமயத்தில் வந்து என்னை காப்பாற்றி விட்டாய்.! நீ இல்லாவிட்டால் என் நிலைமை, இன்று என்னவாகியிருக்கும்.? என் நல்ல நேரந்தான்என நான் முடிப்பதற்குள், ‘சரி.! சரி.! ஆனால், என் நேரம் நன்றாகவேயில்லை.! புறப்படு..! உன்னைக் கொண்டு பூலோகத்தில் விட்டுவிட்டு என் இதர பக்தர்களின் வேதனைகளையும், குறைகளையும்  அகற்ற வேண்டும். உன் ஒருவளிடம் அதிகம் பேசிக்கொண்டிருக்க எனக்கு நேரமில்லை.” என கந்தன் சற்று சிடுசிடுக்க. விரைந்து அவனுடன் மயிலேறிக் கொண்டேன். மயில் என்னை ஒரு விரோத பார்வை பார்த்து விட்டு, “என் தலைவனுக்காக உன்னைப் பொறுத்துக் கொள்கிறேன்.” என கண்ணாலேயே பேசியது.

ஏன் இப்படி அடிக்கடி இங்கு வந்து தொலைத்து என்னை தொல்லைக்குள்ளாக்குகிறாய்.?

முருகா……! தற்சமயம் வலையுலகின் பரபரப்புகள் நீ அறியாததா.? என் குடும்ப சூழலில், என்னால்தான் அதில் கலந்து கொள்ள இயலவில்லை என்பதும் உனக்குத் தெரியாதா.? ஆயினும், அடிக்கடி இந்த நினைப்புகளும் வந்து போவதால், கனவுலகத்தின் வழியாக அந்த உலகத்திற்கு சென்று அங்கு அவர்களை கண்ட மகிழ்வில், அதைப்பற்றி பேசி மகிழ்ந்திருந்து விட்டேன். இப்படியெல்லாம், நிகழப் போகிறது என நான் எந்த கனவிலும் நினைத்தும் பார்க்கவில்லையே.! என்ன இருந்தாலும் காப்பாற்ற நீதான் விரைவாக வந்து விடுகிறாயே முருகா..! எப்படியோ, நீ மூன்று உலகங்களையும் கட்டி ஆள்பவன். வலையுலகில் நான் சாதிக்க நினைத்த ஆசைகளைப் பற்றியும், என் மனக்குறைகளை பற்றியும் உன்னிடமும் சொன்னது எனக்கு நிறைவைத் தருகிறது முருகா…” என்றதும், திரும்பி ஒரு முறை முறைத்தபடிசரி.! எனக்குப் புரிகிறது. மற்றவர்களுக்கும் தெரிய வேண்டுமே..! வாசலில் நின்று வாழ்த்திசைத்து விழாவுக்கு வரும் அனைவரையும், வரவேற்காது விட்டாலும், இங்கிருந்தபடியே ஒரு ஓரத்தில் நின்று தலையசைக்க மட்டுமாவது செய்ய வேண்டுமில்லையா.? அதையாவது செய்தாயா.? அதற்குள் கனவு என்று வீண் அவஸ்தைகளில் மாட்டிக் கொண்டு….”’ என்றவனை இடைமறித்து, ஆம்! முருகா…! நல்ல வேளை நினைவூட்டினாய்…! அதை செய்ய ௬ட இன்னும் நாளிருக்கிறது. இந்த நேரத்தில் என்னை யமனின் தண்டனைகளிலிருந்து நல்ல வேளை காப்பாற்றினாய்..! இதே மாதிரி என்னை என்றுமே நீ மறவாமல் இருக்க வேண்டும் முருகா..! பக்தியுடனான அன்பில் குரல் தழுதழுத்தது எனக்கு.

சரி.! இப்போதெல்லாம், நீ தொழுவதை குறைத்துக்கொண்டு அழுவதின் மூலம் காரியத்தை சாதித்துக் கொள்கிறாய்..! நானும் அந்தளவிற்கு உனக்கு உரிமை கொடுத்து விட்டேன். ! என்று முருகனும் பாசத்துடன் பேசவே, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்ளலாமென்று, “முருகா..! நீ மூன்று உலகத்தையும் நிமிடத்தில் சுற்றி வருபவன். இந்த வலையுலகின் பதிவர் திருவிழாவுக்கும், புதுக்கோட்டைக்கு செல்வாயல்லவா.? என்றேன் மெதுவாக.

பின்னே..! தமிழ் இருக்குமிடத்தில் யாமில்லாமலா..! என்றான் முருகன் சிறுநகையுடன்.

அப்படியாயின் முருகா..! நீ செல்லும் சமயம் என்னையும் இதேப் போல் அழைத்துச் செல்லேன். நானும் உன்னுடன் வருகிறேனே..! இந்த தமிழோடு சேர்ந்து சென்றால் எனக்கும் மகிழ்வாக இருக்குமில்லையா..? என்று இழுத்ததும், முருகனோடு சற்றே கோபமாக மயிலும் திரும்பி பார்த்தது.

ஓசிப் பிராயணமா.? இதற்குத்தான் உனக்கு அதிக இடம் கொடுக்க ௯டாது.! உரிமைகள் அதிகமாக, என் இடத்தையும் பறித்துக் கொள்ளும் அதிகாரத்தை தானகவே எடுத்துக் கொள்வாய் போலிருக்கிறதே..! உன்னை அங்கிருந்தே மயில் மீது ஏற்றி வந்தது தப்பாகப் போய் விட்டது. இதோ பார் உன் கேள்வியில் என்னை விட மயில் எப்படி மிரண்டு மருளும் பார்வை பார்க்கிறது பார்.!” என்றதும் மருளும் பார்வையில் மயில் எப்படியிருக்கிறது?” என நான் சற்றே குனிந்து பார்க்க, முருகனின் அனுமதியில்லாமலே அதன் முதுகை சற்று ஒருக்களித்து அதனின்று என்னை உருட்டி விட்டது மயில்.

அந்தரத்தில் பறந்து கீழிறங்கி நான் வந்து கொண்டிருப்பதை உணர்ந்ததும் மயில் என்னை தள்ளி கீழிறக்கி விட்டதை உணர்ந்தேன். ஐயோ  என்னை மன்னித்துவிடு முருகா..! என்னை அழைத்துப்போக யாருமில்லையே என்ற நினைவில் உன்னிடம் உரிமை எடுத்து கேட்டு விட்டேன். அதற்காக உன் மயில் பூலோகம் வருவதற்குள் என்னை தள்ளி விடலாமா.! மறுபடி எனக்கு உதவிட வரவே மாட்டாயா..?என்றபடி கதறிய என்னிடம், “கவலைப்படாதே..! இன்னல்கள் வரும் போது இன்முகத்துடன் நான் வருவேன். உன்னிருப்பிடம் இன்னும் சற்று தொலைவில் வந்து விடும். கனவுகள் அதிகமில்லாமல், நனவினிலே நீ ஜெயிக்க என் வாழ்த்துக்கள் என்றும் உண்டு..! என்றபடி மயிலுடன் முருகனும் மறைந்து போனான்.

மறுபடி என் தூக்கத்தின் முடிவில் கண்களைத் திறக்க அந்தப் பாடல் எங்கோ ஒலித்தது. “மனமே முருகனின் மயில் வாகனம்….!” ஆம்..! மனமும் ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்லும் வாகனந்தானே..!

டிஸ்கி. மனம் என்ற மயில் வாகனத்தில் ஏறி கற்பனையிலேயே பதிவர் திருவிழாவில் கலந்து கொள்ள வருவேன். நிஜமாக வந்து கலந்து கலக்கும் அனைத்துப் பதிவர்களுக்கும், போட்டியில் வெற்றி வாகைச் சூடி பரிசுகளை தட்டிச் செல்லும் அனைத்துப் பதிவர்களுக்கும் என் மனமார்ந்த நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
                           நன்றி….! வணக்கம்…!

18 comments:

  1. கனவு நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே,

      தாங்கள் என் வலைதளத்திற்கு முதலில் வருகை தந்து நல்லதோர் கருத்தை முன் வைத்து பாராட்டியமைக்கு மகிழ்வுடன் கூடிய என் மனமார்ந்த நன்றிகள்.
      தங்களை போன்றோரின் சிறந்த வருகை என் எழுத்தை மேலும் பலபடுத்தும் என நம்புகிறேன்.

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. சுவாரஸ்யமான கனவுதான். விழா சிறக்கட்டும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே,

      தங்கள் உடனடி வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் சுவாரஸ்யமாக என் கனவை ரசித்தமைக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.

      பதிவர் திருவிழாவில் கலந்து கொள்ளும் தங்களுக்கு வாழ்த்துக்கள்.

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. அருமையான கனவு
    சொல்லிச் சென்றவிதம் அருமையாக இருந்ததால்
    நீளம் ஒரு குறையாகத் தெரியவில்லை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே,

      தங்கள் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்களுக்கும் என் நன்றிகள்.

      என் வலைத்தளம் ஆரம்பித்த நாள் முதல் தங்களுடைய ஊக்கமிகும் கருத்துக்கள் என் எழுத்துக்களை ஓரளவு செம்மைபடுத்த உதவியாய் இருந்தன.
      இனியும் தங்கள் தொடர் கருத்துக்கள் தொடர்ந்தால் நலம். நன்றி.

      பதிவர் திருவிழாவில் கலந்து கொள்ளும் தங்களுக்கு வாழ்த்துக்கள்.

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்

      Delete
  4. நன்றி...

    நம் தளத்தில் இணைத்தாகி விட்டது...

    இணைப்பு : பதிவர்களின் பார்வையில் "பதிவர் திருவிழா-2015"

    புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
    அன்புடன் திண்டுக்கல் தனபாலன்
    காண்க : இவர்கள் தான் பரிசு பெறுவார்கள்...!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே,

      தங்கள் அன்பான வருகைக்கும் பதிவர் திருவிழா தளத்தில் என் தளத்தை இணைத்தமைக்கும் என் மகிழ்ச்சி கலந்த நன்றிகள்.

      விழா சிறப்புற என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. அருமையான கனவு சகோதரி. வாழ்த்துக்கள் !

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி,

      தங்கள் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்களுக்கும் என் நன்றிகள்.

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. கனவு அருமை நல்ல ரசனையோடு சென்றது நாடகம் மன்னிக்கவும் கனவு அடுத்த வருடமாவது தங்களது கனவு நனவாகட்டும்,

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே,

      தங்கள் வருகைக்கும் ரசனையுடன் நாடகம் கண்டு களித்தமைக்கும் மிக்க மகிழ்ச்சி.

      அடுத்த வருடம் நனவாக போகும் என் கனவினை வாழ்த்தியமைக்கும் நன்றிகள். தங்கள் வாழ்த்து பலிக்கட்டும்.

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்

      Delete
  7. வணக்கம் சகோதரரே.

    விபரம் அறிந்தேன். தங்கள் தகவல்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  8. வணக்கம் சகோதரரே

    விபரங்கள் அறிவித்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். பதிவர் திருவிழாவிற்கு வருகை தரும் பதிவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

    .நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  9. அருமையான கனவு....
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.

      தங்கள் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்களுக்கும் என் பணிவான நன்றிகள்.

      .நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  10. வணக்கம்

    விழா சிறக்க எனது வாழ்த்துக்கள்.
    நீண்ட நாள் தங்களின் வலைப்பக்கம் வந்து வேலை காரணம் இனி வருகை தொடரும்...
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.

      தங்கள் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்களுக்கும் என் பணிவான நன்றிகள்.
      இனி வருகை தந்து கருத்தை பகிர்வது தொடரும் என ௬றியதற்கு மிகவும் மகிழ்வுடன் ௬டிய நன்றி சகோதரரே.

      .நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete