Thursday, July 16, 2015

வாழ்த்திசைக்க வாருங்கள் என்றே வரவேற்கிறேன்



எங்கள் வீடெனும் தனித் தடாகத்தில்
ஒரு தங்கத் தாமரை மலர் பூத்தது.
தங்கத்தை நிகர்த்த பெருமழகோடு, இத்
தரணியை வெல்ல மெல்ல உதயமானது.

ஆறுமுகத்தோனின் அருளும் பார்வைகள் என்
அகத்தினில் என்றும் அவனருளால் அசையாதிருக்க,
அண்ணலின் அன்பான பெருங்கருணை மழையினால்,
இன்னல்கள் அதிகமின்றி இனிதாகவே பூத்தது.

முருகா முருகாவென்றே, மனமது ஜபித்திருக்க
முப்பொழுதும், அவன் துணைக்காக தவித்திருக்க
தாமரை மலரில் அழகாக அவதரித்தவன் அந்த
தாமரையையே பரிசாக்கி தந்தருளி விட்டான்.

அழகின் சிரிப்போடு எல்லையற்ற ஆனந்தமும்
அருகருகே இணைய, என் அற்புத நேரங்களும்
அதி சுலபமாய், வாதிடும் சொற்களும் ஏதுமின்றி
அடி பணிந்து பணிவோடு விடைபெற்றுப் போனது.

கண்ணின் மணியாம் என்னவளின் அழகிய
கரு விழியதனில் என் முழுப் பொழுதும்
கட்டுண்டு போனதில் ஒருநாளின் மணிப்பொழுது
கரைந்து தினமும் சில நிமிடங்களே ஆனது..

இக்குயிலின் இனிய வரவால் என் இரவு
துயிலின் உறவும் துண்டித்துப் போனது.
தாமரை மலரின் மனங்கவர் வாசத்தில்
தமிழ்மண சுவாசமும் தடைப்பட்டு போனது.

பூந்தளிரின் வரவால் தமிழினின்று பிரிந்தாலும்,
பூவின் வாசத்தில் மதி மயங்கி கிடந்தாலும்,
மனமெனும் பறவை புதிய உறவின் வரவை
மகிழ்ந்து பறைச்சாற்ற கட்டளையும் பிறப்பித்தது.

தாமரை மலருக்கு தங்களின் அன்பான ஆசிகளை
தப்பாது வந்து மனம் நிறைந்து வாழ்த்திசைத்தால்,
இசைக்கும் இசையினில் மயங்கும் அந்த இளங்குயிலும்   
இனிதான வாழ்வை வளமாக வாழுமெனவும் நம்புகிறேன்.

 மனம் நிறைந்த நன்றிகளுடன் கமலா ஹரிஹரன்.



என் மகளுக்கு அழகான பெண் மகவு பிறந்துள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அவள் நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் பெற்று நீடுழி வாழ வாழ்த்த வலைத்தள உறவுகளை அன்போடு அழைக்கிறேன். அதன் காரணமாக இத்துனை நாள் வலைப்பக்கம் வாராது இருந்தமைக்கு அனைவரும் மன்னிக்கவும். அனைத்து சகோதர, சகோதரிகளின் பதிவுகளை படித்து வருகிறேன். இனி கிடைக்கும் நேரத்தில், அனைவரின் பதிவுகளுக்கும் கருத்திட முயலுகிறேன். என்னை மறவாதிருக்கும் அன்புள்ள நட்புள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.




நட்போடு வாழ்த்திசைக்க வந்தவருக்கும்வருபவர்க்கும் என் பணிவான மிகப் பணிவான நன்றிகள்.

20 comments:

  1. ஆஹா.... புதிய வரவுக்கு எங்கள் வாழ்த்துகளும், ஆசிகளும். வாழ்க பல்லாண்டு.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.

      அழைப்பிணங்கி முதல் வருகையாய் வந்து மனமாற குழந்தையை வாழ்த்தியமைக்கு என் பணிவான நன்றிகள். தங்கள் ஆசிகள் என்றும் என் பேத்திக்கு நிரந்திரமாய் தங்கி அவள் வாழ்வை வளமாக்கட்டும்,

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. V A Z T H IU K A L
    from Devakottai......

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.

      நலமா ? அழைப்பிற்கிணங்கி உடனடி வருகையாய் வந்து மனமாற குழந்தையை வாழ்த்தியமைக்கு என் பணிவான நன்றிகள். தங்கள் ஆசிகள் என்றும் என் பேத்திக்கு நிரந்திரமாய் தங்கி அவள் வாழ்வை வளமாக்கட்டும்,

      தங்களின் தாய்நாட்டுப் பயணம் சந்தோஷமாய் அமைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. புதிய வரவுக்கு நல்வரவு. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.

      என் அழைப்பிற்கிணங்கி உடனடி வருகையாய் வந்து மனமாற குழந்தையை வாழ்த்தியமைக்கு என் பணிவான நன்றிகள். தங்கள் ஆசிகள் என்றும் என் பேத்திக்கு நிரந்திரமாய் தங்கி அவள் வாழ்வை வளமாக்கட்டும்,

      என் எழுத்துக்கள் தொடர்ந்திட வாழ்த்தியமைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. மிகவும் மகிழ்ச்சி... வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே.

      என் அழைப்பிற்கிணங்கி உடனடி வருகையாய் வந்து மனமாற குழந்தையை மகிழ்வுடன் வாழ்த்தியமைக்கு என் பணிவான நன்றிகள். தங்கள் வாழ்த்துக்கள் என்றும் என் பேத்திக்கு நிரந்திரமாய் தங்கி அவள் வாழ்வை வளமாக்கட்டும்,

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. புதிய வரவான உங்களுடைய பேத்திக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! பல்லாண்டு வாழவும் வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி.

      என் அழைப்பிற்கிணங்கி உடனடி வருகையாய் வந்து மனமாற குழந்தையை வாழ்த்தியமைக்கு என் பணிவான நன்றிகள்.பல்லாண்டு வாழவும் என்று வாழ்த்திய தங்கள் வாழ்த்துக்கள் என்றும் என் பேத்திக்கு நிரந்திரமாய் தங்கி அவள் வாழ்வை வளமாக்கட்டும்,

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. மனம் நிறைய வாழ்த்துக்கள்,
    பல்லாண்டு நலமுடன் வாழ வாழ்த்துக்கள்,
    நன்றிம்மா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி.

      என் அழைப்பிற்கிணங்கி உடனடி வருகையாய் வந்து மனமாற குழந்தையை வாழ்த்தியமைக்கு என் பணிவான நன்றிகள்.பல்லாண்டு நலமுடன் வாழவும் என்று வாழ்த்திய தங்கள் வாழ்த்துக்கள் என்றும் என் பேத்திக்கு நிரந்திரமாய் தங்கி அவள் வாழ்வை வளமாக்கட்டும்,

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. நல்ல பாடல்...
    ஆஹா... புதுவரவுக்கு வாழ்த்துக்கள் அக்கா...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே .

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். நல்ல பாடல் என்ற பாராட்டிற்கும், அன்பு பேத்திக்கு வாழ்த்துக்கள் ௬றியமைக்கும் என்பணிவான நன்றிகள்.

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. அழகிய பா இசைத்து...

    பேத்தி வரவை கூறியமைக்கு வாழ்த்துக்கள்

    நீண்ட ஆயுளுடன் பல்லாண்டு, பல சுகம் கொண்டு வாழ வாழ்த்துகிறேன்.

    இறைவனின் அருள் பரி பூரணமாய் கிடைக்க வேண்டுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி.

      என் அழைப்பிற்கிணங்கி உடனடி வருகையாய் வந்து மனமாற குழந்தையை வாழ்த்தியமைக்கு என் பணிவான நன்றிகள்.பல்லாண்டு நலமுடன் வாழவும் என்று வாழ்த்திய தங்கள் வாழ்த்துக்கள் என்றும் என் பேத்திக்கு நிரந்திரமாய் தங்கி அவள் வாழ்வை வளமாக்கட்டும்,

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. புது மகவு பிறந்த நன்னாளில் நீங்கள்
    புது வெள்ளம் அதில் புது நுரை பொங்குவது போன்று
    புதியதோர் இன்ப மகிழ்வை
    மணமாக மாற்றியுள்ளது .
    அம்மகிழ்வில் ஆனந்தமாக நீங்கள் பாடிய கானத்தை
    அடானா ராகத்தில் நான் பாடிட
    அனுமதி வேண்டுகிறேன்.

    புதுவரவுக்கு வாழ்த்துக்கள்

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே,

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      என் பேத்தியின் வரவை குறித்து எழுதிய பாடலை ரசித்து என் தளம் வந்து அவளுக்கு வாழ்த்துக்கள் கூறியதற்கு மிக்க நன்றிகள். அதை தாங்கள் இசை அமைத்து பாட விருப்பம் தெரிவித்தமை கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்கு என் அனுமதி எதற்கு? தங்கள் இசையில் பாடலை கேட்பதற்கு ஆவலாய் உள்ளோம். என் பேதிக்கும் அழகிய தாலாட்டு இசையாகவும் அது அமையும். மீண்டும் தங்கள் வாழ்த்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  10. தாமரை மலரின் வருகையை அழகான கவி பாடி சொன்னதற்கு மகிழ்ச்சி. தாமரை மலருக்கு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
    இறைவன் அருளால் தாயும், சேயும் நலமாய் இருக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி,

      தங்கள் முதல் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      என் பேத்தியின் வரவை குறித்து நான் எழுதியதை அழகான கவி என்று கூறி பாராட்டியமைக்கும், என் பேத்திக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தமைக்கும், அவளும் என் மகளும் இறைவன் அருளால் நலமுடன் வாழ வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றிகள். தங்களின் போன்றோரின் வரவு என் எழுத்துக்களை செம்மையாக்கும் என நம்புகிறேன். நானும் இனி தங்களை தொடர்கிறேன். நன்றி.

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete