Tuesday, December 16, 2014

குறும் (ஹைக்கூ.) கவிதைகள் - 4

6) அந்திச்செம்மை



பணி சிறப்பென நிலவு புகழ்ந்ததில்,
சூரியனின் களைப்பு முகத்தில்
மேலும் கனிந்தது சிவப்பு


7) கவிதை


வெற்றுத்தாளும், எழுதுகோலும்
பல காலம் போரிட்டாலும்,
இடையில் வந்து குதிப்பது ..


8)   பாராட்டு…..

சாதனைக்கு நீ உயிரோட்டம்
நீ, மட்டும் இல்லையென்றால்,
சாதிப்பது வெறும் சவமாகும்


9)   இறைவழிபாடு….

வாழ்வின் சுகமான நெடும்
பயணத்திற்கு நடத்திடும்
சிறப்பு வேள்விகள்


   10)   கனவு….

பகலில் தொலைத்ததை
தூக்கத்தின் துணையுடன்,
இரவில் பெறும் முயற்சி!


இதன் முந்தைய பகுதிகளை காண இங்கே சொடுக்கவும்



இன்னும் வளரும்...

6 comments:

  1. ஆஹா அருமையான ஹைக்கூ வாழ்த்துக்கள்

    நண்பியே தங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறேன் வருக...

    http://blogintamil.blogspot.ae/2014/12/p-1985.html

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே!

      தங்கள் உடனடி வருகைக்கும்., கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துக்களுக்கும் என் பணிவான நன்றிகள்.

      வலைச்சரம் சென்று,படித்து என் அறிமுகம் கண்டு அகமகிழ்ந்து என் கருத்துரையையும் இட்டு விட்டுத்தான் வருகிறேன்.
      என்னையும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியமைக்கு, என் மனமார்ந்த நன்றிகள்!

      தங்களின் ஊக்கமிக்க பதில்கள்தான் என்னையும் எழுதத் தூண்டுகிறது.

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. கவிதைகள் அனைத்தையும் ரசித்தேன்.
    சூரியனின் சிவப்பு...
    தாளின் கவிதை...
    சாதனைக்கு பாராட்டு...
    வேள்வி வழிபாடு...
    இரவு முயற்சி கனவு...

    மேலும் பூக்க வேண்டும் கவிதைகள்
    நன்றி சகோ

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி!

      தங்களின் வருகைக்கும், கவிதையை ரசித்து கருத்திட்டமைக்கும், அன்படன் ௬டிய எதிர்பார்ப்புக்கும், என் பணிவான நன்றிகள் சகோதரி.

      தங்கள் அன்பான வரவு என் எழுதும் ஆர்வத்தை அதிகமாக்குகிறது. நன்றிகள் பல.!

      நட்புடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. வலைச்சர அறிமுகத்திற்கு...வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி!

      என் வலைத்தளம் வந்து வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் தந்தமைக்கு என் மனப்பூர்வமான நன்றிகள் சகோதரி.

      நட்புடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete