Sunday, June 11, 2023

மெய்யுருக வைக்கும் கானங்கள்.

அன்னமய்யா என்ற திரைப்படத்தில் வெங்கடேச பெருமாளின் நித்திய திருக்கல்யாணத்தை வர்ணித்தும், ஊஞ்சலில் பெருமாளை வைத்தும் பாடிய இப்பாடல் மனதை கவரும் ஒன்று. நடிகர் நாகார்ஜுன் அப்படியே அந்த அன்னமாச்சார்யா கதாபாத்திரத்தை நம் கண் முன் கொண்டு வந்திருப்பார். அவரின் நடிப்பில் இந்தப் படத்தை பன்முறை நான் பார்த்து விட்டேன். படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் இனிக்கும் தேன். இதில் இறையருள் பெற்ற அன்னமாச்சார்யா அவர்கள் இயற்றிய கீர்த்தனைகள் பலவும் இடம் பெற்றுள்ளது. பாடகர் எஸ். பி. பி அவர்களின் இனிய கம்பீரமான குரல் அந்தப் பாடல்களுக்கு நல்ல வளமாக இருந்து இனிய தேனின் சுவைகளை அதிகரிக்கச் செய்கிறது. சிறந்த நடிப்பு, இனிமையான பாடல்கள் என இப்படத்தில் அனைவருக்குமே ஸ்ரீமன்நாராயணன் பக்தியை ஒரு வரமாகவே தந்திருக்கிறார். 🙏. 

ஹரி ஓம் நமோ நாராயணாய நமஃ.🙏 .


இந்த அன்னமய்யா  தெலுங்கு படம் அன்னமாச்சார்யா  என்று தமிழிலும் வந்துள்ளது. அதே பாடல் தமிழிலும் மெய்யுருக வைக்கிறது. இதையும் கேட்டு ரசிக்கலாம். 


அதே போல் ஹதிராம் என்ற பெருமாளின் பிரியமான பக்தரை வைத்து எடுக்கப்பட்ட ஓம் நமோ வெங்கடேசாய என்ற பெயரில் நம் மெய்யுருகச் செய்யும் வண்ணம் வந்த ஒரு திரைப்படம். இதிலும் நடிகர் நாகார்ஜுன் தம் நல்ல தெய்வீகமான நடிப்பை மெய்சிலிர்க்கும் வண்ணம் தந்துள்ளார். பாடல்கள் இதிலும் மெய்யுருகும் வண்ணம்தான். இந்தப்பாடலும் வெங்கடேச பெருமாளின் நித்ய கல்யாணத்தை தானே முதலில் நடத்தி வைக்கும் விதமாக காட்டியுள்ளது. இது எஸ். பி. பியின் மகன் எஸ். பி. சரண் அவரது இனிய குரலில் பாடியுள்ளார். அப்பாவின் குரலுடன்  ஒத்துப் போகிற மாதிரியான இவரது குரலும் எனக்குப் பிடிக்கும். இரண்டுமே கேட்க கேட்க திகட்டாத பாடல்கள். 🙏. 

இதே படமே தமிழிலும் அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகன் என்ற பெயரில் வந்துள்ளது. கீழே உள்ள இந்தப்பாடல தமிழ் பாட்டு . இதுவும் எஸ். பி சரண் அவர்கள்தான் இனிமையாக பாடியுள்ளார். இதையும் பக்திபூர்வமாக கேட்டு ரசிக்கலாம். 

நீங்களும் இந்தப்பாடல்களை அனேக முறைகள் கேட்டு மகிழ்ந்திருப்பீர்கள். இங்கும் கேட்டு மகிழ வேண்டுமாய் விண்ணப்பித்துக் கொள்கிறேன். 🙏. அனைவருக்கும் நன்றி🙏.

ஹரி ஓம் நமோ நாராயணாய நமஃ. 🙏.